திங்கள், 25 ஏப்ரல், 2011

செயல்களும் விளைவுகளும்



கடமைகள், தேவைகள், ஆசைகள் இவற்றை நிறைவேற்றுவதற்கான எண்ணங்கள் மனதில் தோன்றி செயல்களாக வெளிப்படுகின்றன. இச்செயல்களின் விளைவுகளே மனிதனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றன.
 
நாம் செய்யும் செயல்களுக்கு நாம் எதிர்பார்க்கும் விளைவுகளே எப்போதும் ஏற்படுவதில்லை. விளைவுகள் நாம் எதிர்பார்த்தபடி இருந்தால் இன்பமும் எதிர்மறையாக இருந்தால் துன்பமும் அடைகிறோம். இதைத் தவிர்க்கவே பகவான் கீதையில் சொன்னார்: “உன் கடமையைச் செய். விளைவுகளை என்னிடம் விட்டுவிடு” ஆனால் அவ்வாறு விளைவுகளை விருப்பு வெறுப்பில்லாமல், பகவத்பிரசாதம் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் சாதாரண மக்களுக்கு இல்லை.

மேலும் இந்தக் காரண-காரிய-விளைவுத் தொடர்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த வேறுபாடுகளுக்கு யார் காரணம்? இந்தக்கேள்விக்கு விடை தெரிந்தவனே ஞானி.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

விவாதமும் வாக்கு வாதமும்


விவாதம் வரவேற்பிற்குரியது. ஏனெனில் இதன் மூலம் ஒரு சிந்தனைத்தெளிவு ஏற்படும். அவ்வாறு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டுமானால், பல கருத்துக்களை விவாதித்து அவைகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து, பிறகுதான் ஒரு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டும். 

ஆனால் பெரும்பாலான சமயங்களில் விவாதம் வாக்குவாதமாக மாறிவிடுகிறது. ஏன் இப்படி என்றால், ஒரு கருத்தை பட்சபாதமில்லாமல் விவாதிப்பதை விட்டுவிட்டு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வாதத்தில் வெளிப்படுத்துவதுதான். 

எந்தக் கருத்தைப்பற்றி விவாதிப்பதானாலும் அந்தக் கருத்து என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்ளவேண்டும். நிறைய சர்ந்தப்பங்களில் நாம் எதைப்பற்றிப் பேசுகிறோம் என்ற தெளிவு இல்லாமலேயே பலர் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

விவாதத்தில் பங்கு கொள்பவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை அல்லது அடுத்தவர்கள் பேரில் இருக்கும் கோபதாபங்களை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. 
எப்போது விவாதம் வாக்குவாதமாக, தனிப்பட்டவர்களை பாதிக்கும் எல்லையைத் தொடுகிறதோ அப்பொழுது அந்த விவாதத்தை நிறுத்தி விட வேண்டும். இதை அந்தக் குழுவின் மூத்த அங்கத்தினர் செய்யவேண்டும்.

திங்கள், 18 ஏப்ரல், 2011

அடுத்தவர் செயல்களை விமரிசித்தல்



அடுத்தவனை, அவன் செய்யும் காரியங்களை குறை கூறுவதென்றால், பலருக்கு வெல்லம் சாப்பிடுவது மாதிரி. அதே மாதிரி நாம் செய்யும் காரியங்கள் நமக்கு சரியாய் பட்டாலும் அடுத்தவர்களுக்கு சரியாகத் தோன்றாமல் போகலாம். இது அவரவர்கள் குணாதிசயங்களைப் பொருத்தது. எல்லோரும், எல்லோருக்கும் பிடித்த மாதிரி காரியங்களைச் செய்வது முடியாத காரியமாகும். வாழ்க்கையில் இவ்வாறான முரண்பாடுகள் இருந்துமொண்டுதான் இருக்கும். அதனாலேயே மற்றவர்கள் செய்யும் காரியங்களை விமரிசிக்க நமக்கு உரிமை இல்லை.
மற்றவர்கள் செய்யும் செயல்களும் வாழ்க்கை நெறிகளும் நமக்கு சரியில்லாதவை போன்று தோற்றமளித்தால் நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். அவர்கள் செய்யும் செயல்களும் வாழும் முறையும் அவர்களுடைய விதிப்பயனால் ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டதாகும். மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்களே அந்தக் காரியங்களைச் செய்வது போல் தோன்றினாலும் உண்மையில் ஆண்டவனுடைய இச்சைப்பிரகாரம்தான் அவர்கள் அந்தச் செயல்களைச் செய்கிறார்கள். அச்செயல்களின் பயனை அனுபவிக்கிறார்கள். ஆகவே ஒருவன் அந்தச் செயல்களை விமரிசிப்பது அர்த்தமற்ற மூடச்செயலாகும்.

சனி, 16 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரே போராட்டம்

"அன்னா" அவர்களின் போராட்டத்தின் போது அதற்கென (அதாவது உண்ணா விரதத்திற்காக) ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உண்ணாவிரதப்பந்தல் கூடாரம் ஆகியவற்றுக்காக 10லடசம் செலவு. தொலைபேசிக்கட்டணம் 9 லட்சம். பயணச் செலவு 4.5 லட்சம். அச்சுக்கூலி 8 லட்சம். உணவு வகையில் ஒருலட்சம். இதற்காக ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.கிட்டத்தட்ட 85லட்சம் இதுவரை வசூலாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான அலுமினியக் கம்பெனி முதலாளி ஜிண்டால் 25லட்சம் கொடுத்துள்ளார். மற்றும் ஈச்சர் கம்பெனி, சுரெந்திரபால், அருன் துக்கல், எச்.டி.எஃப்.சி என்று நன்கொடை வந்த வண்ணமிருக்கிறது. அறக்கட்டளை முறையான ரசீதுகளை நன்கொடையளர்களுக்கு அளித்துள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது. சரியான கணக்கு உள்ளது என்றும் செலவு போக சுமார் 50 லட்சம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தி காஷ்யபனின் http://kashyapan.blogspot.com/ என்ற பதிவில் இருந்து திரட்டப்பட்டது.

இவரை (அன்னா ஹஸாரேயை) எந்த ஊழல் சட்டத்தில் புக் செய்யலாம் என்று வாசகர்கள் யோசனை செய்யவும்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மனித வாழ்வில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?



முதலில் பிரச்சினை இருக்கிறதா, இருந்தால் அது என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க வேண்டும். கற்பனையில் துன்பங்களை உண்டு பண்ணிக்கொண்டு வருத்தப்படக்கூடாது. ஐயோ, நான் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கமுடியவில்லையே என்பதும் ஒரு பிரச்சினைதான். ஆனால் நம் நல்ல காலத்தினால் அந்தப் பிரச்சினை இப்போதைக்கு நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை. எதிர் காலத்தில் வரக்கூடும்.
பிறகு அந்தப் பிரச்சினையை நன்கு ஆராய வேண்டும். இந்தப் பிரச்சினை நம்மால் தீர்க்கக் கூடியதுதானா என்று கண்டுபிடிக்கவேண்டும். நம்மால் தீர்க்க முடியுமென்றால் அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து எந்த முறையில் சிக்கல்கள் குறைவாக இருக்குமோ அந்த முறையைத் தெரிவு செய்து அதை நிறைவேற்ற வேண்டும்.

பெரும்பாலான பிரச்சினைகள் நாமே நம்முடைய செயல்களினால் உருவாக்கிக் கொண்டதாக இருக்கும். அப்போது அதற்கான தீர்வு முறைகளை நாமே கண்டு பிடிப்பது இயலாததாக இருக்கும். இந்த மாதிரி பிரச்சினைகள்தான் உலகில் அதிகம். இந்த மாதிரிப் பிரச்சனைகளுக்கு இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படாதவர்கள்தான் வழி சொல்ல முடியும். மனித இயல்பு என்னவென்றால் அடுத்தவனிடத்தில் போய் நாம் யோசனை கேட்பதா என்ற ஆணவ மனப்பான்மைதான் அதிகம். இந்த ஆணவத்தினால் அழிந்தவர்கள் அநேகம்.

சாதாரணப் பிரச்சினை என்றால் ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நாம் அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விடலாம். அந்தப் பிரச்சினை தானாகவே சரியாய் விட வாய்ப்புகள் இருக்கும். ஆனால் எல்லாப் பிரச்சினைகளையும் இவ்வாறு விட முடியாது. இதற்கு வழி ஒன்றுதான். நமக்கு நம்பிக்கை உள்ள நண்பர்களோ அல்லது உறவினர்களிடமோ சென்று பேசுவதுதான் அந்த வழி. அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இந்தப் பிரச்சினையை அணுகுவார்கள். அப்போது நமக்குப் புலப்படாத தீர்வுகள் அவர்களுக்குத் தோன்ற வாய்ப்புகள் அதிகம்.

இந்த முறையை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் பெரும்பாலான துன்பங்களைத் தவிர்க்கலாம். ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு நல்ல தீர்வு அனுப்பப்படும். அல்லது என்னுடைய முந்தின பதிவில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு ஈமெயில் அனுப்பினால் அவர்கள் நல்ல நல்ல வழிகள் காட்டுவார்கள்.

வியாழன், 14 ஏப்ரல், 2011

ஜாக்கிரதை

நான் இங்கே கொடுத்திருக்கும் கடிதத்தைப் பாருங்கள். எவ்வளவு நேர்மையாகத் தெரிகிறது. அத்தனையும் வடிகட்டின பொய். இந்த மாதிரி கடிதங்களைக் கண்டு ஏமாறக்கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கடிதத்தைப் பதிவில் போடுகிறேன்.


 FROM THE DESK OF: Mr. Sanusi Lamido  Aminu Sanusi
 Executive Governor, Central Bank Of Nigeria (CBN),
 International Remittance Department,
 Corporate Headquarters: # CBN House, Tinubu Square,
 213 Eleke Crescent-Victoria Island, Marina,
 Lagos, Nigeria, West Africa.
 P.O.Box 55037 Falomo
 Ikoyi Lagos Island Marina.

 Tel: 234-1-213-0973

 EMAIL:lmsbk02@live.com

 YOUR IMMEDIATE PAYMENT

 Dear  Beneficiary,

compliment of the season, I know that this letter will hit you by surprise, but firstly I will like to introduce myself; I am (Mr. Sanusi  Lamido Aminu Sanusi) the rightful Governor of The Central  Bank of Nigeria (CBN) and the Executive Chairman of "E.C.D.R" Sorry for the inconveniences that was rendered to you in  your line of  Inheritance Payment transaction with some Nigerian Officials some while ago, We apologies, for the delay of  your payment and all the inconveniences and inflict that we might have indulge you through it was due to the newly  assigned President Of Nigeria President Umar' Musa Yaradua,

However, we were having some minor problems with our payment system, which is inexplicable, and have held us  stranded and indolent, not having the aspiration to devote  our 100% assiduity in accrediting foreign contract payments.We apologies once again.  During the auditing and closing of all financial records of the Central Bank of Nigeria (CBN) it was discovered from the  records of outstanding Foreign contractors due for payment  with the Federal Government of Nigeria in The year 2008 that  your name and company is next on the list of those who Will
 receive their fund.

On the 1st of October 2006,the President of The Federal  Republic of Nigeria (Chief Olusegun Obasanjo) introduced a  Commission named the "E.C.D.R" (Executive Committee on Debt Recovery) which is duly registered under the United Nations  (U.N.) and the Federal Government of Nigeria. This particular Commission was initiated to detect fraud/fund delays/interrupted funds Payments and to also Settle foreign  debts/fraud victims/Un-paid beneficiaries to satisfactory in  other to maintain peace in the world at large, Presently we  are being paid by the American government in other to avert  Scam and also to avert beneficiary funds Delays here in Nigeria.

 I wish to officially notify you that your payment is being  processed and will be released to you as soon as you respond  to this letter. Also note that from the record in our file, your outstanding contract payment is USD $65.000.000.00  (Sixty Five Million Dollars). Kindly re-confirm to me if  this is inline with what you have in your record and also  re-confirm the information below to enable this office  proceed and finalize your fund remittance without further  delays.

 1) Your full name. 
 2) Phone, fax and mobile #. 
 3) Company name, position and address. 
 4) Profession, age and marital status. 
 5) Working d/Int'l passport




I wish to inform you now that the square peg is now in  square whole and can be voguish for that your payment is  being processed and will be released to you as soon as you  respond to this letter.  As soon as the above information are received, your payment  will be Made  Available to you via an international certified bank draft, Atm Card or wire transfer to your nominated bank account  from central bank of Nigeria.

Mr. Sanusi Lamido Aminu Sanusi
Executive Governor
Central Bank Of Nigeria (CBN)
Tel: 234-1-213-0973 

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ஜனநாயகம் வாழ்க


ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே……….
இன்றுதான் நான் முழு சுதந்திர மனிதனாய் உணர்கிறேன். இது நாள் வரை அகப்பட்டிருந்த பதிவுலக பின்னூட்ட வலையெனும் ஜெயிலிலிருந்து விட்டு, இப்போது அதிலிருந்து வெளிவந்த பின் ஒரு புதிய மனிதனாக உணர்கிறேன். 
இந்தப் பதிவு தொடர்ந்து வரும். பொதுப் பிரச்சினைகள் மட்டுமே பதிவிடப்படும். மற்ற பதிவுகளைப் பற்றியோ, பதிவர்களைப்பற்றியோ எந்தப் பதிவும் வராது.
நாளை தேர்தல் நடக்கும். எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று பார்த்து வாக்களிக்கும்படி வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புது ஆட்சி வந்தவுடன் நம் குறைகளெல்லாம் மாயமாகி விடும் என்று நம்புவர்களெல்லாம் நீடூழி வாழ்ந்து சுகம் அனுபவிப்பார்களாக. மற்றவர்களெல்லாம் தீக்குளிக்கட்டும்.

சனி, 9 ஏப்ரல், 2011

இனி இந்தியாவில் ஊழல் இல்லை

New Delhi: Gandhian leader Anna Hazare announced on Friday night that he will call off his four-day-old hunger strike on Saturday morning, saying the government had conceded most of the demands related to a stringent Lokpal Bill to combat corruption in India.


More than 83 hours after he launched his fast in the heart of the capital, Anna Hazare told reporters and frenzied supporters: 'From the way the government has accepted (our demands), the people of India have won.'

மக்கள் ஜெயித்து விட்டார்கள் என்ற அறிக்கையுடன் ஒரு போலி காந்தீயவாதியின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு பெறுகிறது. ஆகவே மக்களே இனி இந்தியாவில் ஊழல் இருக்காது. நிம்மதியாகத் தூங்குங்கள்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

டெம்ப்ளேட் கமென்ஸ்

 நன்றி: திரு.பட்டாபட்டி அவர்கள். 

அன்புத்தம்பி தன்னுடைய பதிவில் சைடு பாரில் போட்டிருக்கும் குறிப்பு:

கீழ்கண்ட பின்னூட்டங்களை, தயவு செய்து.. அன்புகூர்ந்து.... என்னுடைய பதிவில் போட்டுவிட்டு.. பிரச்சனைய சந்திக்கவேண்டாம்..
===================

ஆகா.. சூப்பர்..

வாழ்த்துக்கள்..
 

அருமை நண்பா..
கலக்குங்க..
 

எப்படி சார் இப்படி?..
 

ஹா..ஹா

:-)

:-(
 

ம்..ம்..

Online...

வடை எனக்கு...
 

Present..
 

வடைபோச்சே..

=================================
தம்பி பட்டாபட்டி என்னுடைய ஞானக்கண்ணை இன்று திறந்து விட்டார்.

இந்த பின்னூட்ட வம்பே நமக்கு வேண்டாங்க. நானும் ரொம்ப நாளா யோசிச்சுட்டுதானுங்க இருக்கேன். இந்த கமென்ட் போடறது, அப்புறம் நம்ம பதிவுக்கு வர்ற கமென்ட்டுகளைப் பார்க்கிறது, அதுகளுக்குப் பதில் போடறது, அந்தக் கமென்ட் போட்ட பதிவர்களின் பதிவுகளுக்குப் போய் படிக்காமயே ஒரு டெம்ப்ளேட் போடறது, என்னால முடியலீங்க.

இந்த கமென்ட் போடறது, வாங்கறது எல்லாம் ஒரு லேவாதேவி மாதிரி எனக்குப்பட ஆரம்பிச்சுடுச்சுங்க. எனக்கு வயசாயிடுச்சு, இந்தக் கடன் வாங்கறது, குடுக்கறது எல்லாம் சின்ன வயசுக்காரங்க செய்யற சங்கதிகள். நம்மால ஆகாதுங்க.

அதனால என்ட்ற பதிவில இண்ணேலிருந்து கமென்ட்ஸைத் தூக்கிட்டனுங்க. நான் கிறுக்கறதைப் புடிச்சவங்க படிச்சுட்டுப் போய்ட்டே இருங்க. நானும் அப்படியே பண்ணப் போறனுங்க. ஒருத்தரும் எதையும் மனசில வச்சுக்காதீங்க.

இதுவரைக்கும் கமென்ட்ஸ் போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

பதிவுகள் தொடர்ந்து வரும். 
 

வியாழன், 7 ஏப்ரல், 2011

முழுமையாக வாழும் வழிகள்.


1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2.
நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

3.
நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4.
ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5.
சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6.
மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7.
உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8.
தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9.
விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10.
மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!
இது என் சரக்கல்ல. ஒரு நண்பர் மின் அஞ்சலில் அனுப்பியது.