புதன், 27 ஜனவரி, 2010
திருச்செந்தூர் பயணம்-1
வெள்ளி, 1 ஜனவரி, 2010
விவாதத்திற்கு உரிய விஷயங்கள்
புதன், 30 டிசம்பர், 2009
புது வருட தீர்மானங்கள்
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
மொழிக்கொலை!
வியாழன், 17 டிசம்பர், 2009
பதிவுலக நுணுக்கங்கள்
செவ்வாய், 15 டிசம்பர், 2009
வணக்கம்
செவ்வாய், 17 நவம்பர், 2009
கேள்வி பதில்?!
சனி, 14 நவம்பர், 2009
தமிழ் வளர்ப்போம்
தமிழ் கூறும் நல்லுலகில் ‘இன்டெர்நெட்’ என்னும் கணினி வசதி வந்தவுடன் எழுத்தார்வமிக்க இளைஞர், முதியோர், மகளிர், சிறார் என்று பலரும் தங்களின் பொங்கி வரும் கற்பனைப்படைப்புகளை வலைப்பதிவில் பதிய ஆரம்பித்து விட்டார்கள். பாரதி சொன்னதுபோல் ‘’சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கொணர்ந்திடுவீர் செல்வமனைத்தும்’’ என்ற கொள்கைப்படி பல பல செய்திகளைக்கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் தமிழ் மொழியை எப்பாடு பட்டாவது முன்னேற்றியே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாடு படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த முயற்சியிலே அவர்கள் ஈடுபடும்போது நாம் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகவே இந்த பதிவு.
ஒரு மொழி எவ்வாறு வளர்கிறது? ஆங்கில மொழி ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். எந்த மொழியிலிருந்து வேண்டுமானாலும் சொற்களை தங்கள் மொழியில் சேர்த்துக்கொள்வார்கள். எந்தப்பாகுபாடும் இல்லை. தமிழிலிருந்து கூட பல சொற்கள் ஆங்கிலத்திலே இருக்கின்றன. அவை ஆங்கில அகராதியிலும் கூட சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் இப்போது உலகப்பொது மொழியாக இருக்கிறது.
ஆனால் பிரஞ்சு மொழியைப்பாருங்கள். அவர்கள் மிகுந்த தன்மானம் உள்ளவர்கள் (தமிழர்களைப்போல). வேற்று மொழி சொற்கள் ஒன்று கூட தங்கள் மொழியில் கலவாமல் வைத்திருக்கிறார்கள். தமிழர்களும் அப்படித்தான் இருந்தார்கள். செந்தமிழே எங்கள் மூச்சு என்றுதான் இருந்தோம். ஆனால் இந்த வலைப்பதிவுகள் வர ஆரம்பித்தவுடன் தமிழர்களுக்கு தமிழ் மொழியை எப்பாடு பட்டாவது வளர்த்து விடுவது என்ற முடிவில் இருக்கிறார்கள். ஆங்கிலத்தைப்போல் மற்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளைக்கொண்டு வரலாம். ஆனால் அதற்கு மற்ற மொழிகளில் புலமை வேண்டும். அதுதான் நம்மிடம் கிடையாதே? ஆகவே ஒரு சுலபமான வழியை கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது இப்போது இருக்கும் சொற்களையே மேம்படுத்துவது! எப்படி?
இப்போது வரும் சில விளம்பரங்களில் எழுத்துக்களை மாற்றிப்போட்டு இருப்பார்கள். பார்ப்பவர்கள் ‘என்னடா இவன் தப்பாக எழுதியிருக்கிறான்’ என்று நினைத்துக்கொண்டு போவார்கள். அதுதான் விளம்பர உத்தி. விளம்பரம் மக்கள் மனதில் பதியவேண்டும். அவ்வளவுதான்.
அது போல் நம் பதிவர்கள் தமிழை எப்படி முன்னேற்றுகிறார்கள் என்று பாருங்கள்.
என் உல்லம், தமில் வால்க, பயிர்ச்சி, மறு அழைப்பிதல்
ல,ள.ழ = இந்த மூன்றுக்கும் வேறுபாடு இல்லை.
ரகரமும் றகரமும் ஒன்றே
எப்படியோ தமில் வலர்ந்தால் சறிதான்! வால்க தமில், வளர்க தமிலன்!
ஞாயிறு, 8 நவம்பர், 2009
தமிழ் பதிவுகளில் பின்னூட்டங்கள்
சனி, 24 அக்டோபர், 2009
பதிவுலக நாற்றம்-2
கடந்த சில நாட்களாக வரும் சில பதிவுகளைப்படித்தால் இவர்கள் படித்த, அறிவு ஜீவிகள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் கொடுத்துக்கொண்டு இப்படி எழுத எப்படி முடிகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு முன் பதிவுலக நாற்றம் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது வெறும் கூவம் நாற்றம் மட்டும்தான் இருந்தது. இப்போது ''பிண நாற்றம்'' வீசுகின்றது.
இந்த பதிவுகளைப் பார்க்கும்போது எனக்கு புரிந்தவை என்னவென்றால் பதிவர்கள் வழக்கமாக சந்திப்பது தாகசாந்தி வசதி இருக்கும் ஹோட்டல்களில் மட்டுமே. பிரபல பதிவராவது எப்படி என்ற என்னுடைய பதிவில் வேடிக்கையாக ''பதிவர் என்றால் 5 ரவுண்டிற்குப்பிறகும் ஸ்டெடியாக நிற்கவேண்டும்'' என்று எழுதியிருந்தேன். ஆனால் உண்மையிலேயே பதிவர்கள் இப்படி இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
பதிவர்கள் பொது சமாசாரங்களைப்பற்றி எழுதுவார்கள் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். அது மிகத்தவறு என்று இப்போது புரிந்து விட்டது. அடுத்த பதிவரைப்பற்றி தனி மனித வசைகள், அதுவும் நாகரிகமற்ற வார்த்தைகளைப்பயன்படுத்தி எழுதுவது எந்த ரகத்தில் சேரும் என்று புரியவில்லை. ஒருகால் நான் ஒரு பைத்தியக்காரனாக இருக்கிறேனோ என்னமோ தெரியவில்லை. அதைத்தவிர அந்தப்பதிவரின் குடும்ப நபர்களைப்பற்றி எழுதுவது இன்னும் கேவலம். இன்னும் வேடிக்கை என்னவென்றால் அப்படி மோசமாக எழுதப்பட்ட பதிவரை நேரில் சந்திப்பது.
குழாயடிச்சண்டையை நான் நேரில் பார்த்ததில்லை. கேள்வி ஞானம்தான். அங்குதான் பெண்கள் ஒருவருக்கொருவர் வாயில் வரக்கூடாத வார்த்தைகளினால் ஏசிக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பதிவுலக வசைகள் அதையும் மிஞ்சி இருக்கின்றன. பதிவுலகம் எங்கு போய் நிற்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை.
வெள்ளி, 23 அக்டோபர், 2009
நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-8)
செவ்வாய், 20 அக்டோபர், 2009
நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-7)
டிஸ்கி* - இந்த பகுதியில் கூறப்போகும் விஷயங்கள் மிகவும் sensitive ஆனவை. அவைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டும். முக்கியமாக இவைகளின் ரகசியம் கண்டிப்பாக காக்கப்படவேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.
• டிஸ்கி = Disclaimer
• இதை இன்னும் பொடி எழுத்தில் போடவேண்டும். என்னுடைய கம்ப்யூட்டரில் அதற்கு வசதி இல்லை.
அடுத்த்தாக கவனிக்க வேண்டியது ‘’வருகை எண்ணிக்கை’’. இந்த எண்ணிக்கை கூடினால்தான் உங்கள் தளத்தின் மதிப்பு கூடும்.
இதற்கு நீங்கள் முதலில் ஒரு வருகைப்பதிவு விட்ஜெட்டை உங்கள் தளத்தில் நிறுவ வேண்டும். இது மிகவும் சுலபம். ஏதாவது ஒரு தளத்தில் இதை நிறுவியிருப்பார்கள். அதை அப்படியே லிங்க் கண்டுபிடித்து உங்களுடைய தளத்தில் ஏற்றவேண்டியதுதான்.
பிறகு இந்த வருகைப்பதிவிற்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதத்தில் ஒரு லட்சம் என்று நிர்ணயித்துக்கொள்ளுங்கள். முடியுமா என்று மலைக்காதீர்கள்! முயன்றால் முடியாதது உலகில் ஒன்றும் இல்லை. உங்கள் திறமையின் பேரிலும் உங்கள் குருவின் மேலும் நம்பிக்கை வையுங்கள். நினைத்தது நடக்கும்.
உங்களுக்கு ஓரளவாவது கணக்குப் போட வரும் என்று நினைக்கிறேன். பின்வறும் கணக்கை உன்னிப்பாக கவனிக்கவும். உங்களிடம் கைவசம் 108 தளங்கள் இருக்கின்றன அல்லவா? ஒவ்வொரு தளத்திலிருந்தும் உங்கள் பிரபல தளத்தை தினம் 10 முறை ஹிட் செய்யவேண்டும். ஆக ஒரு நாளில் உங்கள் தளத்திற்கு 1080 ஹிட்கள் கணக்காகி விட்டது. இனி நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளலாம். மாத்தஃதிற்கு ஏறக்குறைய 32400 வரும். மூன்று மாத்தஃதில் 97200 ஹிட்கள். இது போக வழியில் போகும் சிலரும் போகிறபோக்கில் வேடிக்கை பார்க்க வருவார்கள். எல்லாமாகச்சேர்ந்து சுலபமாக ஒரு லட்சம் இலக்கை அடைந்துவிடலாம்.
உடனே ஒரு பெரிய பதிவு போட்டு ‘’ஆஹா, மூன்று மாதத்தில் ஒரு லட்சம் வருகை. பாருங்கள், பாருங்கள், இந்த தளத்தின் சாதனை’’ என்று டாம் டாம் போடவேண்டியதுதான்.
மீதி அடுத்த பதிவில்.. (அடுத்ததே இந்த வரிசையில் கடைசி பதிவு.)