ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஒரு முக்கிய அறிவிப்பு

இந்த பிளாக்கைத்தொடரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
 
என்னுடைய இந்த "சாமியின் மன அலைகள்" என்கிற பிளாக்கு நான் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது. எனக்குத்தெரிந்த புத்திமதி எல்லாம் சொல்லிப்பார்த்து சலித்துப்போய் எக்கேடும் கெட்டுப்போ என்று கை கழுவி விட்டேன். யாரும் சிபாரிசுக்கு வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய சொற்படி நடக்கும் வேறொரு பிளாக்கை சீக்கிரம் தத்தெடுத்து விடுகிறேன். அதையும் என்னுடைய விருப்பத்திற்கு பழக்க சிறிது நாள் பிடிக்கும். அதன் பிறகு பதிவுகளைத்தொடருகிறேன். இந்த பிளாக்கில் உள்ளவைகளையும்  ஒவ்வொன்றாக மறுபதிவு செய்கிறேன். அது வரையிலும் இந்த பிளாக்குக்கு தண்டச்சோறு போடுகிறேன்.

அன்பர்கள் யாவரும் வழக்கம்போல் தங்களுடைய ஆதரவை தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிரமங்களுக்கு மன்னிக்கவும். வேறு வழி தெரியாததால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

உங்கள் ஆதரவை வேண்டும் அன்பன், தாத்தா,
ப.கந்தசாமி.

பின் குறிப்பு: என்னுடைய இன்னொரு பிளாக்கான  "மசக்கவுண்டன் கிறுக்கல்கள்"  அதுவும் இதோடு சேர்ந்து கொழுப்பெடுத்துத் திரிகிறது. எல்லாம் இந்த "விண்டோஸ்-7" O.S.  நிறுவியதின் விளைவுகள். அதையும் இதனுடன் சேர்த்து கை கழுவப்போகிறேன். காலுக்கு சேராத செருப்பை கழட்டி எறி என்று பெரியவர்கள் சொல்லிப்போயிருக்கிறார்கள். மூத்தோர் சொல்லைக் கடைப்பிடிப்பதே நமது கொள்கை.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

இடைச்செருகல் - ரத்த பூமி


 ஒண்ணும் புரியல,
ஒரு நாளைக்கு ரத்தம் ஆறா ஓடுது,
அடுத்த நாள் பன்னீரும் ரோஜாவுமா மணக்குது.
நடுவில நம்ம மண்டெய நொழச்சா
காணாம போயிடும்போல இருக்குது.
இதுல எப்படி நானு நீஞ்சி
கரை சேரப்போறேன்னு தெரியல.
முருகனே நீதான் துணை.

வியாழன், 22 ஏப்ரல், 2010

நான் வேலைக்குப் போன கதை-பாகம் ௩ மறு பதிவு



நான் வேலைக்குப்போன கதையில் பெட்டி வாங்கப்போய், அங்கிருந்து ஆளவந்தார் கதைக்குப்போய், பிறகு விக்கிரமாதித்தன் கதையில் கொஞ்சம் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். அரும்பாவூர் அவர்கள் நான் முதல் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று அறிய ஆவலாய்க் காத்துக்கொண்டு இருக்கிறார். அவரை மேலும் காக்க வைப்பதில் நியாயமில்லை. ஆகவே இந்தக்கதையை தொடருகிறேன். விக்கிரமாதித்தன் கதை என்ன ஆயிற்று என்று உங்களில் சிலர் கேட்பது காதில் விழுகிறது. அதையும் அவ்வப்போது நடுநடுவில் எழுதுகிறேன். ஒரு மாற்றம் இருந்தால்தானே சுவை இருக்கும்.
ஒரு சுபயோக சுபதினத்தில், அதாவது 1956 ம் வருடம் சுதந்திர தினத்தன்று வேலைக்குச் சேருவதற்காகப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்டிற்கு சென்றேன். என் அத்தை-மாமா, கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருக்கிறார் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அவர் கோவையில் ட்ரிப் எடுக்கும் நேரத்தை முதலிலேயே கேட்டு வைத்திருந்தேன். சரியாக அரை மணி நேரம் முன்பாக பஸ் ஸ்டேண்ட் சென்றுவிட்டேன். மாமா பஸ் நின்றுகொண்டிருந்தது. ஒரு ஆளைப்பிடித்து பெட்டியை முன் சீட்டுக்குப்பக்கத்தில் வைத்தேன். சாதாரணமாக அவ்வளவு பெரிய பெட்டியை பஸ் டாப்பில்தான் ஏற்றவேண்டும். ஆனால் நான் டிரைவரின் மருமானல்லவா, அதனால் இந்த சலுகை. மாமா காபி குடித்துவிட்டு வந்தார். டைம் ஆனவுடன் பஸ் புறப்பட்டது.

சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து பொள்ளாச்சி போய் சேர்ந்தோம். அங்கிருந்து வேறு பஸ்ஸில் ஏறி ஆனைமலை போகவேண்டும். நான் இதற்கு முன் ஆனைமலை போனதில்லை. மாமா ஆனைலை போகும் பஸ்ஸின் டிரைவரைப் பிடித்து விவரம் சொல்லி என்னை அவர் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். என்ன விவரம் என்றால், பையன் ஆனைமலையில் வேலைக்கு சேரப்போகிறான். அவன் ஊருக்குப்புதிது. அங்கு யாரையாவது பிடித்து அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறு ஏற்பாடு பண்ணுங்கள், என்கிற விவரம்தான்.
ஆனைமலை பஸ் புறப்பட்டது. போகும் வழியில் பெரும் மழை. எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை. எப்படியோ ஆனைமலை வந்து சேர்ந்தோம். மழை விட்டுவிட்டது. பஸ் டிரைவர் ஒரு ஆளைக்கூப்பிட்டு என்னைக்காண்பித்து இவரை அந்த ஆபீசுக்கு கூட்டிக்கொண்டு போய்க் காண்பி என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

அன்று சுதந்திர நாளானதால் ஆபீஸ் லீவு. இருந்தாலும் ஆபீசர் வீடும் ஆபீசும் ஒன்றாக இருந்ததால் அவரைப்பார்த்தேன். அவர், சரி, நாளைக்கு டூட்டியில் சேர்ந்து கொள்ளலாம், இன்று நீ தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனி என்று சொல்லி ஒரு பியூனைக் கூட அனுப்பினார். அந்த ஊரில் ஒரு விவசாய டெமான்ஸ்ரேட்டர் உண்டு. அவர் ஒரு வீட்டின் முன்புற அறையில் தங்கி இருந்தார். அந்த வீட்டிலேயே இன்னொரு அறையும் இருந்தது. பியூன் அதை எனக்குப்பேசி என்னைக்குடி வைத்தான்.
மறுநாள் பிற்பகலில் வேலையில் சேர்ந்தேன். என்னுடன் படித்த இன்னொருவனுக்கும் அதே ஆபீஸில் வேலைக்குச்சேர உத்திரவு வந்திருந்த து. அவனும் நானும் ஒன்றாகத்தான் வேலைக்கு சேர்ந்தோம். ஆபீசர் எங்களுக்கு வேலைகளைப்பற்றி சொல்லிவிட்டு, பண்ணையைச்சுற்றிக்காட்ட கூட்டிக்கொண்டு போனார். சொல்ல மறந்துவிட்டேன், என்னிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அதையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தேன். பண்ணை ஒரு கி.மீ. தூரத்தில் இருந்தது. மூன்று பேரும் சைக்கிளில் போனோம். பண்ணையை சுற்றிப்பார்த்தோம். செய்ய வேண்டிய வேலைகளைப்பற்றி பொதுவாக சொன்னார்.

காலேஜில் படித்ததிற்கும் பண்ணை வேலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆட்களை வேலை வங்குவது, பண்ணை வேலைகளை மேற்பார்வையிடுவது, பயிர் பரிசோதனை விவரங்கள் சேகரித்தல், ரிக்கார்டுகள் பராமரித்தல், ஸ்டாக் கணக்குகள் பராமரித்தல், ஆபீஸ் கடிதங்கள், ஆபீஸ் கணக்கு வழக்குகள் என்று பல வேலைகளில் மூழ்கிப்போய், நாள் கிழமை கூட மறந்து போய் விட்டன. இந்த நடைமுறைகளை எல்லாம் பொறுமையாக கத்துக்கொடுக்கவும் யாரும் இல்லை. ஆபீசர் இதைச்செய்யவேண்டும் என்றுதான் சொல்வாரேயொழிய, எப்படிச்செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க மாட்டார். அந்த வேலையை செய்து முடிக்காவிட்டால் டோஸ் விடுவார். அவ்வளவுதான்.


இப்படியாக வேலையிலேயே முழுகிப்போய் இருந்தபோது ஒன்றாம் தேதி வந்தது. சம்பள பட்டியல் போட்டு டிரெஷரிக்கு அனுப்பி பாஸ்பண்ணி, டோகன் வாங்கி, பிறகு அங்கிருந்து ஸ்டேட் பாங்க் போய் பணம் வாங்கவேண்டும். எனக்கும் சம்பளம் போட்டார்கள். என்னவோ பெரிய ஆபீஸ், பத்து பேர் அக்கவுண்ட்ஸ் பார்க்கிறர்கள் என்று கற்பனை செய்யாதீர்கள். ஒரே ஒரு கிளார்க் கம் டைப்பிஸ்ட் மட்டும்தான். நாங்கள் இரண்டு பேர் டெக்னிகல் ஸ்டாஃப். நாங்களும் கிளார்க்கும் சேர்ந்து சம்பள பட்டியல் தயார் செய்தோம்.
சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு சம்பளம் நூறு ரூபாய், பஞ்சப்படி இருபத்தி நான்கு ரூபாய், ஆக மொத்தம் நூற்றி இருபத்திநான்கு ரூபாய். முதல் மாதம் இதில் 15 / 31 பங்கு அதாவது 60 ரூபாய் சம்பளம். ஆஹா, நானும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் வேலையோ நெட்டி முறிக்கின்றது.
இந்த நிலமையில் என்கூட சேர்ந்த என் வகுப்புத்தோழனுக்கும் ஆபீசருக்கும் ஒத்து வரவில்லை. அவனுக்கு ஒருநாள் திடீர் தந்தி. “பாட்டிக்கு உடம்பு சரியில்லை. உடனே வரவும்.” இந்த தந்தியைக் காண்பித்து இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு போய்விட்டான். போனவன் போனவனே. லீவை ஒரு மாத த்திற்கு நீட்டித்துவிட்டான். எல்லா வேலையையும் நானே பார்க்க வேண்டியதாயிற்று. இதன் இடையில் என் ஆபீசரும் தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் என்று 15 நாள் லீவு போட்டுவிட்டுப் போய்விட்டார்.
அவ்வளவுதான். கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போலத்தான். எப்படி சமாளித்தேன், என்ன ஆயிற்று ?
அடுத்த பதிவில் பார்ப்போம்….

புதன், 21 ஏப்ரல், 2010

நான் வேலைக்குப் போன கதை-பாகம் 3


நான் வேலைக்குப்போன கதையில் பெட்டி வாங்கப்போய், அங்கிருந்து ஆளவந்தார் கதைக்குப்போய், பிறகு விக்கிரமாதித்தன் கதையில் கொஞ்சம் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். அரும்பாவூர் அவர்கள் நான் முதல் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று அறிய ஆவலாய்க் காத்துக்கொண்டு இருக்கிறார். அவரை மேலும் காக்க வைப்பதில் நியாயமில்லை. ஆகவே இந்தக்கதையை தொடருகிறேன். விக்கிரமாதித்தன் கதை என்ன ஆயிற்று என்று உங்களில் சிலர் கேட்பது காதில் விழுகிறது. அதையும் அவ்வப்போது நடுநடுவில் எழுதுகிறேன். ஒரு மாற்றம் இருந்தால்தானே சுவை இருக்கும்.
ஒரு சுபயோக சுபதினத்தில், அதாவது 1956 ம் வருடம் சுதந்திர தினத்தன்று வேலைக்குச் சேருவதற்காகப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்டிற்கு சென்றேன். என் அத்தை-மாமா, கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருக்கிறார் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அவர் கோவையில் ட்ரிப் எடுக்கும் நேரத்தை முதலிலேயே கேட்டு வைத்திருந்தேன். சரியாக அரை மணி நேரம் முன்பாக பஸ் ஸ்டேண்ட் சென்றுவிட்டேன். மாமா பஸ் நின்றுகொண்டிருந்தது. ஒரு ஆளைப்பிடித்து பெட்டியை முன் சீட்டுக்குப்பக்கத்தில் வைத்தேன். சாதாரணமாக அவ்வளவு பெரிய பெட்டியை பஸ் டாப்பில்தான் ஏற்றவேண்டும். ஆனால் நான் டிரைவரின் மருமானல்லவா, அதனால் இந்த சலுகை. மாமா காபி குடித்துவிட்டு வந்தார். டைம் ஆனவுடன் பஸ் புறப்பட்டது.

சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து பொள்ளாச்சி போய் சேர்ந்தோம். அங்கிருந்து வேறு பஸ்ஸில் ஏறி ஆனைமலை போகவேண்டும். நான் இதற்கு முன் ஆனைமலை போனதில்லை. மாமா ஆனைலை போகும் பஸ்ஸின் டிரைவரைப் பிடித்து விவரம் சொல்லி என்னை அவர் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். என்ன விவரம் என்றால், பையன் ஆனைமலையில் வேலைக்கு சேரப்போகிறான். அவன் ஊருக்குப்புதிது. அங்கு யாரையாவது பிடித்து அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறு ஏற்பாடு பண்ணுங்கள், என்கிற விவரம்தான்.
ஆனைமலை பஸ் புறப்பட்டது. போகும் வழியில் பெரும் மழை. எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை. எப்படியோ ஆனைமலை வந்து சேர்ந்தோம். மழை விட்டுவிட்டது. பஸ் டிரைவர் ஒரு ஆளைக்கூப்பிட்டு என்னைக்காண்பித்து இவரை அந்த ஆபீசுக்கு கூட்டிக்கொண்டு போய்க் காண்பி என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். அன்று சுதந்திர நாளானதால் ஆபீஸ் லீவு. இருந்தாலும் ஆபீசர் வீடும் ஆபீசும் ஒன்றாக இருந்ததால் அவரைப்பார்த்தேன். அவர், சரி, நாளைக்கு டூட்டியில் சேர்ந்து கொள்ளலாம், இன்று நீ தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனி என்று சொல்லி ஒரு பியூனைக் கூட அனுப்பினார். அந்த ஊரில் ஒரு விவசாய டெமான்ஸ்ரேட்டர் உண்டு. அவர் ஒரு வீட்டின் முன்புற அறையில் தங்கி இருந்தார். அந்த வீட்டிலேயே இன்னொரு அறையும் இருந்தது. பியூன் அதை எனக்குப்பேசி என்னைக்குடி வைத்தான்.

மறுநாள் பிற்பகலில் வேலையில் சேர்ந்தேன். என்னுடன் படித்த இன்னொருவனுக்கும் அதே ஆபீஸில் வேலைக்குச்சேர உத்திரவு வந்திருந்த து. அவனும் நானும் ஒன்றாகத்தான் வேலைக்கு சேர்ந்தோம். ஆபீசர் எங்களுக்கு வேலைகளைப்பற்றி சொல்லிவிட்டு, பண்ணையைச்சுற்றிக்காட்ட கூட்டிக்கொண்டு போனார். சொல்ல மறந்துவிட்டேன், என்னிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அதையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தேன். பண்ணை ஒரு கி.மீ. தூரத்தில் இருந்தது. மூன்று பேரும் சைக்கிளில் போனோம். பண்ணையை சுற்றிப்பார்த்தோம். செய்ய வேண்டிய வேலைகளைப்பற்றி பொதுவாக சொன்னார்.

காலேஜில் படித்ததிற்கும் பண்ணை வேலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆட்களை வேலை வங்குவது, பண்ணை வேலைகளை மேற்பார்வையிடுவது, பயிர் பரிசோதனை விவரங்கள் சேகரித்தல், ரிக்கார்டுகள் பராமரித்தல், ஸ்டாக் கணக்குகள் பராமரித்தல், ஆபீஸ் கடிதங்கள், ஆபீஸ் கணக்கு வழக்குகள் என்று பல வேலைகளில் மூழ்கிப்போய், நாள் கிழமை கூட மறந்து போய் விட்டன. இந்த நடைமுறைகளை எல்லாம் பொறுமையாக கத்துக்கொடுக்கவும் யாரும் இல்லை. ஆபீசர் இதைச்செய்யவேண்டும் என்றுதான் சொல்வாரேயொழிய, எப்படிச்செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க மாட்டார். அந்த வேலையை செய்து முடிக்காவிட்டால் டோஸ் விடுவார். அவ்வளவுதான்.
இப்படியாக வேலையிலேயே முழுகிப்போய் இருந்தபோது ஒன்றாம் தேதி வந்தது. சம்பள பட்டியல் போட்டு டிரெஷரிக்கு அனுப்பி பாஸ்பண்ணி, டோகன் வாங்கி, பிறகு அங்கிருந்து ஸ்டேட் பாங்க் போய் பணம் வாங்கவேண்டும். எனக்கும் சம்பளம் போட்டார்கள். என்னவோ பெரிய ஆபீஸ், பத்து பேர் அக்கவுண்ட்ஸ் பார்க்கிறர்கள் என்று கற்பனை செய்யாதீர்கள். ஒரே ஒரு கிளார்க் கம் டைப்பிஸ்ட் மட்டும்தான். நாங்கள் இரண்டு பேர் டெக்னிகல் ஸ்டாஃப். நாங்களும் கிளார்க்கும் சேர்ந்து சம்பள பட்டியல் தயார் செய்தோம்.
சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு சம்பளம் நூறு ரூபாய், பஞ்சப்படி இருபத்தி நான்கு ரூபாய், ஆக மொத்தம் நூற்றி இருபத்திநான்கு ரூபாய். முதல் மாதம் இதில் 15 / 31 பங்கு அதாவது 60 ரூபாய் சம்பளம். ஆஹா, நானும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் வேலையோ நெட்டி முறிக்கின்றது.
இந்த நிலமையில் என்கூட சேர்ந்த என் வகுப்புத்தோழனுக்கும் ஆபீசருக்கும் ஒத்து வரவில்லை. அவனுக்கு ஒருநாள் திடீர் தந்தி. “பாட்டிக்கு உடம்பு சரியில்லை. உடனே வரவும்.” இந்த தந்தியைக் காண்பித்து இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு போய்விட்டான். போனவன் போனவனே. லீவை ஒரு மாத த்திற்கு நீட்டித்துவிட்டான். எல்லா வேலையையும் நானே பார்க்க வேண்டியதாயிற்று. இதன் இடையில் என் ஆபீசரும் தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் என்று 15 நாள் லீவு போட்டுவிட்டுப் போய்விட்டார்.
அவ்வளவுதான். கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போலத்தான். எப்படி சமாளித்தேன், என்ன ஆயிற்று ?
அடுத்த பதிவில் பார்ப்போம்….