புதன், 1 பிப்ரவரி, 2012

கூகுளின் பிளாக்.மாற்றங்கள்.

தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது. கூகுள்காரனுக்கு நம் இந்திய அரசு சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டுகளுக்கு ஒத்துக் கொண்டால் இங்கே கடை விரிக்கலாம். இல்லையென்றால் கடையைக் கட்டு என்று இந்திய அரசு சொல்லி. ஒரு காலக்கெடுவும் நிர்ணயத்து விட்டது.

இந்த செய்தியெல்லாம் பிளாக் உபயோகிப்பவர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே அறிந்த செய்திதான். இருந்தாலும் கூகுள்காரன் சொல்லாமல் கொள்ளாமல் இப்படிச் செய்துவிட்டானே என்கிற ஆதங்கம் பலருக்கு இருப்பதைப் பதிவுகள் வாயிலாக உணர முடிகிறது.

நம் பாட்டன் சம்பாதித்த சொத்து ஒன்றையும் கூகுள்காரன் பறித்துக் கொள்ளவில்லை. அவன் இடத்தை நமக்கு இலவசமாக உபயோகிக்க கொடுத்திருக்கிறான். அதற்கு அவன் என்ன நிபந்தனைகள், சட்டதிட்டங்கள் போட்டாலும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இல்லையென்றால் வேறு இடத்திற்கு குடி பெயர வேண்டும். நான் வயதான காலத்தில் வேறு இடம் பார்ப்பதாக இல்லை. இருக்குமிடமே சொர்க்கம் என்று வாழப்போகிறேன்.