ஞாயிறு, 19 ஜூலை, 2015

நான் ஒரு பக்காத் திருடன்.

                                              Image result for thief

நண்பர் திரு நடனசபாபதி அவர்கள் அவருடைய வகுப்புத் தோழர் ஒருவருக்கு ஏற்பட்ட தொல்லைகளைப் பற்றி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்.

என் வகுப்புத்தோழர் ஒருவர் வேளாண் விரிவாக்க அலுவலராக பணி ஆற்றியபோது, ஆண்டு இறுதிக்குள் நிலக்கடலை விதைகளை வாங்க அனுமதிக்கப்பட்ட தொகையை அவர் செலவழிக்கவேண்டும் என்று அவரது மாவட்ட வேளாண் அலுவலர்
கட்டாயப்படுத்தியிருக்கிறார். விதை கிடைக்காத நிலையில் ஒரு விவசாயி ஒரு மாதம் கழித்து அறுவடை செய்து தருவதாக சொன்னதின் பேரில் அவரிடம் வாங்கியதுபோல் கணக்கு காட்டி அதை இருப்பில் ஏற்றிக்கொண்டு அவரது பெயருக்கு காசோலை வழங்கவும் செய்துவிட்டார். பின்பு அந்த விவசாயி சொன்னபடி விதைக்கடலையை கொடுக்க மறுத்ததும் அதற்கான பணமான ரூபாய் 4000 த்தை இவர் கட்டவேண்டியதாகிவிட்டது. அப்போது (1966-67) அவருக்கு மாத சம்பளமே ரூபாய் 303 தான்.
நீங்கள் சென்ற பதிவுக்கான பின்னூட்டத்தில் சொன்னதுபோல் அதிர்ஷ்டமும் துணை புரிய வேண்டும். 

இதில் அந்த வேளாண் அலுவலருக்குப் போதிய அனுபவம் இல்லாததினால் இந்த மாதிரி சிக்கலில் சிக்கிக்கொண்டார். அவர் இந்த நடவடிக்கையை எப்படிச் செய்யவேண்டும் என்று அவருடைய மேலதிகாரியிடமே ஆலோசனை கேட்டிருக்கவேண்டும். அல்லது அந்த ஆபீசில் இருக்கும் ஆபீஸ் தலைமை கிளார்க்கிடம் கேட்டிருக்கலாம். அல்லது ஒரு மூத்த சக பணியாளரிடம் ஆலோசனை செய்திருக்கலாம். எப்படியோ தவறு நேர்ந்து விட்டது.

அலுவலக நடவடிக்கைகளின் விதி முறைகளை அவர் நன்கு அறிந்து வைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்குமென்றால், அந்த விவசாயி, அரசு விவசாய இலாக்காவின் நடைமுறைகளை நன்கு அறிந்தவராக இருந்திருப்பார். அந்த வேளாண் அலுவலர்களின் உதவி அலுவலர்களே செக் வந்த விஷயத்தை அவரிடம் கூறியிருப்பார்கள். அந்த விவசாயியை அலுவலகத்திற்கு வந்து செக்கை வாங்கிக் கொள்ளுமாறு தூண்டியிருக்கலாம்.

அந்த விவசாயி ஆபீஸ் நடைமுறைகளை நன்கு அறிந்தவராதலால் இந்த மாதிரி செக் வந்த பிறகு அதை உரியவர்களிடம் கொடுக்காமல் தள்ளிப்போடுவது விதி முறைகளுக்கு எதிரானது என்று அறிந்து வைத்திருப்பார். அவர் விவசாய அலுவரிடம் வந்து பவ்யமாக செக் வந்து விட்டதாமே, அதைக் கொடுத்தால் என்னுடைய அறுவடைக் கூலி கொடுப்பதற்கு வசதியாயிருக்கும். அறுவடை முடிந்ததும் நான் கடலையை சப்ளை செய்து விடுகிறேன் என்று சொல்லியிருப்பார், இந்த விவசாய அலுவலர் மறுத்திருந்தால் அந்த விவசாயி இவரை மிரட்டியிருக்கலாம்.

எப்படி மிரட்டியிருப்பார் என்றால், உங்கள் ஆபீஸ் ரெக்கார்டுகள் பிரகாரம் நான் கடலை சப்ளை செய்து பில் கொடுத்ததாக பதிவு செய்திருக்கிறீர்கள். அந்தப் பில்லுக்கான செக் இப்போது உங்கள் மேல் ஆபீசிலிருந்து வந்திருக்கிறது. அதை நீங்கள் எனக்கு இப்போது கொடுக்காவிட்டால் நான் அந்தச் செக்கைக் கொடுப்பதற்காக லஞ்சம் கேட்கிறார் என்று உங்கள் பேரில் உங்கள் பெரிய அதிகாரிக்கும் உங்கள் மந்திரிக்கும் பெட்டிஷன் எழுதுவேன். உங்கள் வேலை போய்விடும் என்று மிரட்டியிருப்பார். இவர் பயந்து போய் செக்கைக் கொடுத்திருப்பார்.

அந்த விவசாயி மலை முழுங்கி மகாதேவனாக இருந்திருப்பான். இவரை நன்றாக ஏமாற்றி விட்டான். இந்த மாதிரி சிக்கலில் இருந்து சூதானமாகத் தப்பிக்க நீங்களும் ஒரு திருடனாக இருக்கவேண்டும். அதாவது திருடர்களின் குணங்களை நன்கு அறிந்திருக்கவேண்டும். இந்த வேளாண் அலுவலர் என்ன செய்திருக்கவேண்டுமென்றால்-

1. கடலை சப்ளை செய்த பில் அந்த விவசாயியிடம் இருந்து வாங்கும்போதே இன்னொரு கடிதத்தில் இந்த பில்லில் குறிப்பிட்டுள்ள கடலையை நான் இன்னும் சப்ளை செய்யவில்லை. அறுவடை முடிந்ததும் கடலையை சப்ளை செய்து விட்டு செக்கை வாங்கிக்கொள்கிறேன் என்று எழுதி அவரிடம் கையெழுத்து வாங்கி, இரண்டு சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கி வைத்திருந்திருக்கவேண்டும்.

2. இவருடைய மேலதிகாரிதான் செக் போட அதிகாரம் பெற்றவராயிருப்பார். அவரிடம் , சார் இந்த பில்லுக்கு செக் போட்டு இங்கேயே வைத்திருங்கள். நான் அந்த விவசாயி கடலையை சப்ளை செய்த பிறகு வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கவேண்டும். பில் பாசாகி செக் போட்ட விவரம் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கவேண்டும்.

அப்படி அந்த விவசாயி கடலையைக் கொடுக்காவிடில் அவரிடம் வாங்கிய கடிதத்தை வைத்து நடந்தவைகளை விவரமாக எழுதி மேலதிகாரிக்குத் தெரிவித்து விட்டால் வேலை முடிந்தது. அரசுக்கு எந்தப் பணமும் நட்டமாகவில்லை. நடைமுறைகளில் ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. ஒரு எச்சரிக்கை கடிதம் வரும் அவ்வளவுதான்.

இந்த குயுக்தி எல்லாம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒருவரும் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் நான் முதல் முதலாகச் சேர்ந்த ஆபீசில் என் மேல் அதிகாரியே சில திருட்டுகளைச் சொல்லிக்கொடுத்தார்.

சென்னை மாநகராட்சியில் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் மஸ்டர் ரோல் ஊழல் என்று ஒன்று பிரபலமாகப் பேசப்பட்டது அநேகருக்கு நினைவிருக்கலாம். தினக்கூலி வாங்கும் ஆட்களுக்கு ஒரு பட்டியல் உண்டு. அதற்கு மஸ்டர் ரோல் என்று பெயர். சென்னை மாநகராட்சியில் தினமும் எப்படியும் இருநூறு முன்னூறு ஆட்கள் தேவைப்படும். அப்படி முன்னூறு ஆட்களை எடுக்கும்போது கூட இருபத்தைந்து ஆட்களை எடுத்ததாக கணக்குக் காட்டினால் யாரும் கண்டு பிடிக்க முடியாது.

இதை கூட்டாக எல்லோரும் சேர்ந்து செய்து, வெளியில் தெரிந்து பிரபலமாகப் பேசப்பட்டது. அப்போது நான் நினைத்துக் கொள்வேன். நான் பார்க்காத மஸ்டர் ரோலா, நான் செய்யாத ஊழலா என்று நினைத்துக் கொள்வேன். நான் பொள்ளாச்சியில் பண்ணை மேலாளராக இருந்தபோது தினம் எப்படியும் இருபது முப்பது பேரை வேலைக்கு எடுப்போம். கூட நாலைந்து பேரைச் சேர்த்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

இப்படி நானே, கைசுத்தம் என்று இன்றைக்குப் பீற்றிக்கொள்ளும் நானே, செய்திருக்கிறேன். ஆனால் அது எனக்காகச் செய்ததில்லை. என்னுடைய மேலதிகாரியே சொல்லி நான் செய்து அந்தப் பணத்தை அவரிடம் கொடுத்திருக்கிறேன். அதிலிருந்து ஒரு பைசா கூட நான் எடுத்ததில்லை. அங்குதான் நான் இந்த மஸ்டர் ஊழலைக் கற்றுத் தேர்ந்தேன்.

பிறகு முதுகலைப் பட்டம் பெற்று கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்டில் சேர்ந்த பிறகு பல ஊழல்களைப் பார்த்திருக்கிறேன். பிறகு நான் பதவி உயர்வு பெற்று ஸ்டோர்ஸ் ஆபீசர் என்ற பதவியில் இருந்திருக்கிறேன். பொருட்கள் வாங்குவதில் எப்படி எப்படி திருட்டுத்தனம் செய்வார்க்ள என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

ஒரு முறை எங்கள்  துணைவேந்தரே என்னைக் கூப்பிட்டு கெமிஸ்ட்ரி லேபில் கெமிகல்ஸ் வாங்காமலேயே பில் மட்டும் வாங்கி பாஸ் பண்ணமுடியுமா என்று கேட்டார். மற்றவர்களாயிருந்தால் அவருக்குப் பயந்து கொண்டு அப்படியெல்லாம் செய்ய முடியாது சார், என்று கூறியிருப்பார்கள். நான் உண்மையைக் கூற என்றும் பயந்ததில்லை. செய்யலாம் சார். கெமிகல்ஸ் வாங்காமலேயே வாங்கியதாக கணக்குக் காட்டி அந்த கெமிகல்ஸை கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப் படுத்தியதாகக் கணக்கு காட்டினால் யாராலும் கண்டு பிடிக்க முடியாது. இது அந்தந்த அலுவலகர்களின் நாணயத்தைப் பொறுத்தது என்று சொன்னேன். அவர் இதைக் கேட்டுக் கொண்டாரே தவிர எந்த அபிப்பிராயமும் கூறவில்லை.

அன்று நான் நினைத்திருந்தால் ஒரு பக்காத் திருடனாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படி இருந்திருந்தால் இன்று, அதாவது ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் கழித்தும் உடல் நலத்தோடும் மனநலத்தோடும் இருந்திருக்க முடியாது. படுக்கையில் படுத்தால் நான் செய்த திருட்டுகள்தான் கண்முன் வரும், தூக்கம் வராது. இப்போது படுக்கையில் படுத்தால் இரண்டு நிமிடத்தில் தூங்கி விடுகிறேன்.

சனி, 18 ஜூலை, 2015

ஆடிட்டர்களின் அதிகப் பிரசிங்கித்தனம் - தொடர்ச்சி

இந்தத் தலைப்பில் நான் இட்ட பதிவிற்கு திரு வெட்டிப்பேச்சு என்பவர் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். அதில் அவர் சில குறிப்புகள் கொடுத்திருந்தார். அந்தப் பதிவிலேயே நான் பதில்களும் கூறியிருந்தேன்.
அதில் நான் குறிப்பிட்டுள்ள சில பகுதிகள் எல்லோரும் அறிந்திருக்க வேண்டியவை. பொதுவாகப் பின்னூட்டங்களை யாரும் படிக்க மாட்டார்கள் என்பதால் அந்த விவரங்களை ஒரு தனிப் பதிவாகப் போடுகிறேன்.


அது சரி, இங்கே ஆடிட்டர்கள் எங்கு அதிகப் பிரசங்கித் தனம் செய்தார்கள்?

Material
receive பண்ணுவதற்கு முன்பே அது வந்ததாக நீங்கள் ஸ்டாக் எண்ட்ரி பண்ணினது எனக்குச் சரியாகப் படவில்லை.

எனக்கென்னமோ நீங்கள் சரியான ஆடிட் குரூப்பை சந்திக்க வில்லை என்றே தோன்றுகிறது.

மேலும் அவர்களுக்கு உங்கள் மேல் நல்ல மரியாதை இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. இல்லையென்றால் அவர்கள் உங்களை தங்கள் பாஸ் மாதிரி நடத்தியிருக்க மாட்டார்கள்.

அரசு அலுவலங்களில் நீங்கள் சொன்ன குறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நீங்கள் நல்லவராய் இருக்கப்போய் ஏதும் கோளாறு இல்லை. ஆனல் உங்களைத் தவிர சற்று கோணலான ஆள் வந்து பணம் பண்ண நினைத்தாரானால் அவருக்கு நீங்கள் குறுக்கு வழி காட்டியதாய் இருக்கக் கூடாதல்லவா?

Proceedure violation is always not advisable.

ஆனாலும் பதிவு சுவாரசியமாய் இருந்தது.
டெக்னிகல் அலுவலரை நான்-டெக்னிகல் வேலைக்குப் பயன்படுத்தினீர்கள் என்று சொல்வதற்கு ஆடிட்டர்களுக்கு அதிகாரம் இல்லை. எது டெக்னிகல் வேலை, எது நான்-டெக்னிகல் வேலை என்று பாகுபடுத்தி அலுவலர்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கும் பொறுப்பு அந்தந்த அலுவலகத் தலைவருக்கே உண்டு. உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களில் டெக்னிகல் அலுவலர்கள்தான் தலைவராக வரமுடியும். உதாரணமாக நான் (I) டெக்னிகல்லி ஒரு புரொபசர், என் வேலை வகுப்பு எடுப்பது மற்றும் ஆராய்ச்சிகளை வழி நடத்துவதுதான். ஆனால் அதற்கு உண்டான அட்மினிஸ்ட்ரேடிவ் வேலைகளை யார் செய்வார்கள்? அதை ஒரு அட்மினிஸ்ட்ரேடர் என்று ஒருவரைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால் அவர் என் வேலைகளுக்கு ஒரு முட்டுக் கட்டையாகவே இருப்பார். நான் அலுவலகத் தலைவராக இருந்தாலும் ஒரு பைசா செலவழிப்பதாக இருந்தாலும் அவரைக் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்ற நிலை உருவாகிவிடும். உலகம் முழுவதும் ஆராய்ச்சி நிறுவனங்களில் டெக்னிகல் ஆபீசருக்கு கீழேதான், அவர் ஆணைப்படிதான் அட்மினிஸ்ட்ரேடிவ் அலுவலகர்கள் வேலை செய்யவேண்டும். இதுதான் நடைமுறை.
2.   
//Procedure violation is always not advisable.//

நீங்கள் Management புஸ்தகங்களைப் படித்திருந்தால் அதில் ஒரு கொள்கையை வலியுறுத்தியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். Rules are only for guidance. An efficient Executive is one who takes sensible exceptions to the rules. Clerk will always be obstinate about rules but an Executive is not to follow the clerk.

ஒரு மாவட்டத்தில் கலெக்டர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வழக்கமாக எல்லா வேலைகளும் ரூல் பிரகாரம்தான் நடக்கும். ஒரு ஊரில் வெள்ளம் வந்து விட்டது. வெள்ளம் வரும் வழியைத் தடுத்து வெள்ளத்தை ஆற்றுக்குத் திருப்பவேண்டும். அப்போது அவர் ரூல் பிரகாரம் டெண்டர் விட்டுத்தான் அந்த வேலையை முடிக்கவேண்டும் என்று நினைத்தால் என்ன ஆகும்? உயிர்ச்சேதம், பொருட்சேதம் என்று ஏகப்பட்ட சேதங்கள் ஏற்படும். அந்த மாதிரி இயற்கை சீற்றங்களைச் சமாளிப்பதற்காக அந்தக் கலெக்டர் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் செலவு செய்யலாம். இந்த மாதிரி சமயங்களில் செய்யப்படும் செலவுகளுக்கு ஆடிட் கிடையாது என்பது பலருக்குத் தெரியாது.

அவர் அப்படி நிவாரண வேலைகள் செய்யாவிட்டால்தான்  அவர் தன் கடமையிலிருந்து தவறியவராகக் கருதப்படுவார்.

நான் ரூல் பிரகாரம் செய்யவில்லை என்று என் பேரில் குற்றம் சுமத்தினால் நான் ஏன் ஆவ்வாறு செய்தேன், அதன் அவசியம் என்ன என்று காரணங்களைச் சொல்லி என் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்தும் தன்னம்பிக்கை இருந்ததால்தான் அவ்வாறு செய்தேன். அவ்வாறு செய்வதை நான் தனிப்பட்ட முறையில் மேலதிகாரிகளிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.
3.   
//Material receive பண்ணுவதற்கு முன்பே அது வந்ததாக நீங்கள் ஸ்டாக் எண்ட்ரி பண்ணினது எனக்குச் சரியாகப் படவில்லை.//

இந்த மாதிரி செய்வது வருடக் கடைசியில் எல்லா அலுவலகங்களிலும் நடப்பதுதான். இந்த மாதிரி பட்டியல்களுக்கு Proforma Invoice என்று பெயர். அந்த வருடத்திய பட்ஜெட் காலாவதியாகாமலிருக்க இந்த மாதிரி செய்வது வழக்கம்தான். நான் இந்த வழக்கத்தைத்தான் கடைப்பிடித்தேன்.