புதன், 2 டிசம்பர், 2015

சென்னை வெள்ளம்.

                                      Image result for சென்னை வெள்ளம்
சென்னையில் குடியிருப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சென்னையில் இருக்கும் பதிவர்கள் அங்கு நிலவும் நிலையை முடிந்த அளவு பதிவுகளில் தெரிவித்தால் நாங்கள் நிலைமையைத்தெரிந்து கொள்வோம்.

உணவு, குடி நீர், தங்குமிடம் இந்த மூன்றும்தான் அவசியத்தேவை. ஆனாலும் செய்திகளும் தேவை.

மின்சாரம் இல்லை. தொலைதொடர்பு சாதனங்கள் வேலை செய்யவில்லை. கணினி வேலை செய்யும் இடங்களில் உள்ள பதிவர்கள் சென்னை நிலைமையைத் தெரிவியுங்கள்.

சென்னை இன்று இருக்கும் நிலையில் வெளியூரில் இருக்கும் தனி நபர்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை எனக் கருதுகின்றேன். அரசு மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளுக்கு சேவை மனப்பான்மை கொண்ட குழுக்கள் ஏதாவது உதவி செய்ய முடியும். மக்களின் அனுதாபத்தை சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.