புதன், 9 மார்ச், 2016

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !

                                                  Image result for பதிவர்கள்

ஒரு காலத்தில் (இப்பத்தானுங்க 2015 ல, அதாவது பத்து மாசத்துக்கு முன்னால) நான் இருந்த இருப்பன்ன? இன்றிருக்கும் இருப்பென்ன? நினைச்சுப் பாக்கவே ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

 நான் ஒரு பதிவு போட்டா ஆயிரம் பேருக்குக் குறையாமப் பாப்பாங்களே.

31-5-15 அன்று நான் எழுதிய "அந்தக் காலத்து சினிமாத் தியேட்டர்கள்." என்ற பதிவிற்கு வந்த பார்வையாளர்கள் 1523 பேர்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் நான் எழுதியிருக்கும் "தேவலோக நகர்வலம்" என்ற பதிவிற்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் வெறும் 260 பேர்கள். இத்தனைக்கும் அந்தப் பதிவு நல்ல நகைச்சுவையான பதிவு.

பதிவர்கள் எல்லாம் எங்கே காணாமல் போனார்கள்?

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் என் தமிழ்மணம் ரேங்க் 10 ல் இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 260 பார்வையாளர்கள் மட்டுமே பார்த்திருக்கும் ஒரு தளம் பத்தாவது ரேங்கில் இருக்கிறது என்றால், நூறு, இருநூறு ரேங்கில் இருக்கும் தளங்களுக்கு எத்தனை பார்வையாளர்கள் வந்திருப்பார்கள்?

நான் நினைப்பது என்னவென்றால் இன்னும் ஓரிரு வருடங்களில் பதிவு எழுதுபவர்கள் என்னைப்போன்ற சில கிழடுகள் மட்டுமே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.