ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஒரு முக்கிய அறிவிப்பு

இந்த பிளாக்கைத்தொடரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
 
என்னுடைய இந்த "சாமியின் மன அலைகள்" என்கிற பிளாக்கு நான் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது. எனக்குத்தெரிந்த புத்திமதி எல்லாம் சொல்லிப்பார்த்து சலித்துப்போய் எக்கேடும் கெட்டுப்போ என்று கை கழுவி விட்டேன். யாரும் சிபாரிசுக்கு வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய சொற்படி நடக்கும் வேறொரு பிளாக்கை சீக்கிரம் தத்தெடுத்து விடுகிறேன். அதையும் என்னுடைய விருப்பத்திற்கு பழக்க சிறிது நாள் பிடிக்கும். அதன் பிறகு பதிவுகளைத்தொடருகிறேன். இந்த பிளாக்கில் உள்ளவைகளையும்  ஒவ்வொன்றாக மறுபதிவு செய்கிறேன். அது வரையிலும் இந்த பிளாக்குக்கு தண்டச்சோறு போடுகிறேன்.

அன்பர்கள் யாவரும் வழக்கம்போல் தங்களுடைய ஆதரவை தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிரமங்களுக்கு மன்னிக்கவும். வேறு வழி தெரியாததால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

உங்கள் ஆதரவை வேண்டும் அன்பன், தாத்தா,
ப.கந்தசாமி.

பின் குறிப்பு: என்னுடைய இன்னொரு பிளாக்கான  "மசக்கவுண்டன் கிறுக்கல்கள்"  அதுவும் இதோடு சேர்ந்து கொழுப்பெடுத்துத் திரிகிறது. எல்லாம் இந்த "விண்டோஸ்-7" O.S.  நிறுவியதின் விளைவுகள். அதையும் இதனுடன் சேர்த்து கை கழுவப்போகிறேன். காலுக்கு சேராத செருப்பை கழட்டி எறி என்று பெரியவர்கள் சொல்லிப்போயிருக்கிறார்கள். மூத்தோர் சொல்லைக் கடைப்பிடிப்பதே நமது கொள்கை.