வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பதிவர்களே உஷாராக இருங்கள்

பல பதிவர்கள் பல புதிய புரொக்ராம்களைப் பற்றி உயர்வாக தங்கள் பதிவுகளில் எழுதுகிறார்கள். அவர்கள் நல்ல எண்ணத்துடன்தான் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்றுதான் எழுதுகிறார்கள். சில சமயம் அந்த புரொகிராம் எழுதின கம்பெனியே பதிவர்களைத் தொடர்புகொண்டு எங்கள் புரொகிராம் பற்றி உங்கள் பதிவில் எழுதினால் உங்களுக்கு அந்த புரொகிராமை இலவசமாகத் தருகிறோம் என்றும் ஆசை காட்டுவதுண்டு. என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அந்தப் புரொகிராம் உங்களுக்கு மிகமிக அவசியம் என்றால் ஒழிய அதை தரவிறக்கவேண்டாம்.

அடுத்ததாக அந்த வேலையைச் செய்யும் புரொகிராம் ஏற்கனவே உங்களிடம் இருந்தால் (உதாரணத்திற்கு, ம்யூசிக் பிளேயர்கள்) புது புரொகிராமுக்கு போகவேண்டாம்.

மிக அவசியம் என்று தோன்றும் புரொகிராம்களை நாலு நண்பர்களிடம் விசாரித்துவிட்டு தரவிறக்கவும்.

அல்லது கம்ப்யூட்டரை கண்டெம்ன் பண்ணுவதாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் தரவிறக்குங்கள் நண்பர்களே.