சனி, 28 ஆகஸ்ட், 2010

அமெரிக்கப் பிரஜைகள் ?


பதிவர் கண்ணகியின் சொல்லத்தான் நினைக்கிறேன் பதிவில் சொன்ன ஒரு கருத்து.
//நாம தண்ணி கொண்டுவந்து கொடுத்தாக்கூட வேண்டாங்க்என்கிறார்கள்....சுடுதண்ணீர்தான்என்று சொன்னபிறகு தயக்கத்துடன் குடிக்கிறார்கள்...//
உண்மை.
இது உள்ளூர்க்காரர்கள் பண்ணும் அழும்பு. நம்மூர்க்காரங்களே அமெரிக்காவுல போயி கொஞ்ச வருஷம் இருந்து விட்டு நம்மூருக்கு வந்தாங்கன்னா அவங்க பண்ற அழும்பு இருக்கிறதே அது ரொம்ப அக்கிரமுங்க.
என்னுடைய கதையைக்கேளுங்கள்.
என் நண்பரின் மகள், அமெரிக்காவில் செட்டில் ஆனவள், தன்னுடைய மகளுடனும், அப்பா, அம்மாவுடனும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் வருகிறார்களென்று தெரிந்தவுடனேயே கை கால்களையெல்லாம் டெட்டால் போட்டுக்கழுவி விட்டு வெந்நீர் கொதிக்கவைத்து ஆறவைத்து அதைத்தனியாகவும், அதில் ஜூஸ் தனியாகவும் கலக்கி வைத்திருந்தோம்.
வீட்டிற்கு வந்தவர்கள் என்ன சொல்லியும் அந்த தண்ணீரையோ, ஜூஸையோ குடிக்கவில்லை.
இரண்டு மாதம் கழித்து நாங்கள் ஒரு பெரிய ஓட்டலில் "கெட்டுகெதர்" வைத்திருக்கிறோம், நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். நாங்கள் ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லிப் போகவில்லை. என்னுடைய தன்மானம் என்னைப்போக விடாமல் தடுத்தது.
ஆனால் எல்லோரும் அப்படியில்லை. போன வாரம் இன்னொரு நண்பரின் அமெரிக்க குடியுரிமை வாங்கிய மகள், மாப்பிள்ளை, பேத்தி ஆகியோர் இங்குள்ள என் நண்பரின் வீட்டுக்கு ஒரு வார விடுமுறையில் வந்திருந்தார்கள். நான் அவர்களை என் வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தேன். எந்தவித பந்தாவும் இல்லாமல் வீட்டுக்கு வந்து இரண்டு மணிநேரம் இருந்து நாங்கள் கொடுத்த கேசரி, இட்லி (முருங்கைக்காய் சாம்பார் - அந்தப்பேத்திக்கு பிடிக்கும் என்று தெரிந்து அதை வைத்திருந்தோம்), தயிர் சேமியா ஆகியவற்றை எந்த பிகுவும் பண்ணாமல் சாப்பிட்டுவிட்டுச் சென்றார்கள். மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
அந்தப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு “கெட்டுகெதர்” பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள். சந்தோஷமாகப்போய் வந்தோம். படங்களைப் பாருங்கள்.