செவ்வாய், 4 ஜனவரி, 2011

சதாபிஷேகம்

சதாபிஷேகம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு கால கட்டம். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து மக்கள், மருமக்கள், பேரன், பேத்திகள் எடுத்து, அவர்கள் நல்ல வசதியான நிலையில் இருக்க, தானும் தன் இல்லாளுடன் நலமாகவும் வசதிகளுடனும் இருப்பது என்பது ஒரு பூரணமான வாழ்வாகும். எல்லோருக்கும் இந்த கொடுப்பினை இருக்காது. அப்படி இருக்கும் ஒருவருக்கு அவருடைய வாரிசுகள் ஒரு விழா எடுப்பது பெரிய பாராட்டுதலுக்குரியது. அத்தகைய ஒரு விழாவுக்கு எனக்கு அழைப்புக் கிடைத்தது. என்னுடைய நண்பரின் நண்பருடைய தந்தைக்கு அப்படிப்பட்ட விழா எடுத்தார்கள். நண்பர் என்னைத் துணைக்கு அழைத்தார். நானும் இந்த விழாவைப் பார்க்க விரும்பியதால் அவருடன் சேர்ந்து போனேன். விழா காரைக்காலில் நடந்தது.

சதாபிஷேக நடைமுறைகள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சதாபிஷேக தம்பதியருக்கு எல்லா உறவினர்கள் புடைசூழ யாகபூஜைகள் செய்து அந்த புனித நீரால் அபிஷேகம் செய்வித்து, கல்யாண உறசவம் நடத்துவார்கள். நான் கலந்து கொண்ட விழாவில் தாராளமாக செலவு செய்து எல்லா உறவினர்கள், நண்பர்கள் கூடியிருக்க இந்த விழா நிறைவாக நடந்தது. இதன் பல காட்சிகளைப் பாருங்கள்.

வேதவித்துக்கள்


யாகம் செய்தவர் : Dr. சிவஸ்ரீ பால சர்வேச்வர குருக்கள்
ஸ்தாபகர், ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாசார்ய வேதசிவகாம வித்யா பீடம், காரைக்கால்.


பூர்ணாகுதி


மகாதீபாராதனை


பேத்தி


மூத்த மகனும் மருமகளும்


திருமஞ்சனம்


சதாபிஷேகத் தம்பதியினர்


தம்பதியினர் கல்யாணத்திற்கு தயார்


மாங்கல்யதாரணம்


மங்கள வாத்தியம்- திருவாரூர் திரு. சிவாந ந்தம், B.Com.
அவர்கள் குழுவினர்


ஆசீர்வாதம் வாங்க காத்திருக்கும் உறவினர்கள்.


உறவினர் கூட்டம்