செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

எப்போ வருவானோ எந்தன் கலி தீர...

இது ஒரு கவிதை ( அப்படீன்னு நெனச்சுத்தான் எழுதியிருக்கிறேன். எனக்கும் கவிதைக்கும் காத தூரம். இருந்தாலும் நேற்று குளிக்கும்போது இந்தக் கவிதை உதயமாயிற்று. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பெருநோக்கில் இதைப் பதிவிடுகிறேன்)


விநாடிகள் நிமிடங்களாக

நிமிடங்கள் மணிகளாக

மணிகள் நாட்களாக

நாட்கள் வாரங்களாக

வாரங்கள் மாதங்களாக

மாதங்கள் வருடங்களாக

வயதோ கூடிக்கோண்டிருக்கிறது

வாழ்வோ குறுகிக்கொண்டிருக்கிறது

ஆனால்

அவனைத்தான் காணோம்

எப்போ வருவானோ

எந்தன் கலி தீர...