செவ்வாய், 27 நவம்பர், 2012

நம்பள்கியின் கேள்விக்கு பதில்.


வருத்தத்திற்குரிய நிகழ்வு.
டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா, இந்த வருத்தம் ஏன் தினமும் இறக்கும் 5000 இந்தியக் குழந்தைகளிடம் யாருக்கும் இல்லை; அதுதான் என் கேள்வி?

நீங்கள் இதற்க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா; எனக்கு பல பெரிய மனிதர்கள் "இந்தியாவில்" சிந்திப்பது இன்றும் புரியவில்லை; உங்களையும் சேர்த்துதான் இந்தக் கேள்வி.
'
ஒரு வேளை சிகப்பாக இருந்தால் "மட்டுமே" இந்திய அரசாங்கம் கேள்வி கேட்குமா? உதவி செய்யுமா? நீங்கள் பெரிய மனிதர்; நீங்கள் இதற்க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...

[[
பழனி.கந்தசாமி said...வருத்தத்திற்குரிய நிகழ்வு.]]


நம்பள்கியின் இந்தக் கேள்வியை இன்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் பிறந்து இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து இன்று அமெரிக்க சிகப்புத்தோல்களுக்கு சேவை புரியும் நீங்கள் இந்த 5000 குழந்தைகளின் இறப்புக்காக என்ன செய்தீர்கள் என்று சொல்லிவிட்டு, அப்புறம் எங்களைக் கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறோம்.