வெள்ளி, 23 ஜூலை, 2010

ஒரு முக்கிய சந்திப்பு

என்னுடைய கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரையை முடித்துக்கொண்டு நேற்று இரவுதான் கோவை திரும்பினேன். யாத்திரை பற்றி விரிவாக எழுதுமுன் ஒரு முக்கிய செய்தி.

யாத்திரையின்போது இரண்டு பதிவர்களைச் சந்தித்தேன். திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் முன்னேயே ஏற்பாடு செய்திருந்தபடி டில்லி ரயில்வே ஸ்டேஷனில் பிளம்ஸ் பழங்களுடன்  அன்புடன் வந்து சந்தித்தார்.அவருடன் ஸ்டேஷனிலேயே பிளாட்பாரத்தில் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டோம். வேறு வழியில்லை. கூட்டமோ கூட்டம். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

எதிர்பாராமல் இன்னொரு பதிவரை ஹரித்துவாரில் பார்த்தேன். ஆனால் அவர் என்னைப் பார்க்கவில்லை. அதனால் ஒரு போட்டோ மட்டும் எடுத்தேன். படத்தைப் பார்க்கவும். படத்தை இந்தப்பதிவில் போட இயலவில்லை. அவர் மேல் இருக்கும் மரியாதை காரணமாக தனிப்பதிவாகப் போட்டிருக்கிறேன்.

7 கருத்துகள்:

  1. ஆஹா.. அய்யா நேத்துதான் கோவை வந்தீங்களா...

    இரண்டு நாளாக கோவையில்தான் இருக்கின்றேன். நாளைக்கு திருப்பூர், ஈரோடு போய்விட்டு ஞாயிறு அன்று சென்னை செல்கின்றேன்.

    தொலை பேசி எண் : 9677225181

    பதிலளிநீக்கு
  2. ஓஹ் சிறப்பு விருந்தினரா..அப்ப ஓக்கே....ஓக்கே..

    பதிலளிநீக்கு
  3. நினைத்தேன். இப்படி ஏதாவது........ஹரித்துவாரில் நீங்கள் படம் எடுத்த பதிவர் ...........
    இது ரொம்ப ஓவராத்தான் இருக்கு சார். பாவம் அந்த புள்ள! :)

    பதிலளிநீக்கு
  4. ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி சொன்னது:

    //ஸார்...உங்களுக்கே இது ஓவராத் தெரியலே....//

    கொஞ்சம் ஓவர்தான். ப.ரா. வைத் தூக்கத்திலிருந்து எழுப்ப வேற வழி தெரியல.

    பதிலளிநீக்கு
  5. வேலை அதிகமாய் இருந்த காரணத்தால், பயணம் முடித்து திரும்பி நீங்கள் தில்லி வந்த போது சந்திக்க முடியவில்லை. பயணம் நன்றாக இருந்திருக்கும் என நம்புகிறேன். தொடர் பற்றி விரிவாக எழுதுங்கள். படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு