புதன், 6 மே, 2009

தங்கத்தமிழும் அரசியலும்

‘’தமிழுக்காக என் உயிரையும் கொடுப்பேன்.’’
‘’தமிழ் மொழிதான் என் மூச்சு, அதைக்காப்பற்றத்தான் நான் உயிரோடு இருக்கிறேன்’’
இந்த வசனங்களை கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல்வாதிகளும் அடிக்கடி பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். குறிப்பாக பேசுவதற்கு வேறு விஷயங்கள் இல்லாதபோது இந்த விஷயம் அலசப்படும். ஒருவர் இதைப்பற்றி பேசிவிட்டால் மற்றவர்கள் எல்லோரும் நான் என்ன அவனுக்கு சளைத்தவனா என்று ஒவ்வொருவரும் இந்த தமிழனின் தன்மானத்தைப் பற்றி பேசுவார்கள்.
அடுத்த அரசியல்வாதியை கேவலப்படுத்த இந்த தமிழை ஒரு ஆயுதமாகப்பயன்படுத்தும் கட்சிகளும் உண்டு. ‘’அவன் தமிழனே அல்ல, அவன் பக்கத்து மாநிலத்திலிருந்து குடி பெயர்ந்தவன், அவன் வீட்டில் ..... மொழி பேசுகிறான் தெரியுமா?’’ இந்த தாக்குதலுக்கு பதிலே கிடையாது.
அந்த வகையில்தான் ஈழத்தமிழனின் பிரச்சினையும். ‘’நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு’’. இந்த வகையில் ஈழத்தமிழனுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் சேவை செய்து அவனைக்காப்பாற்றி வருகிறார்கள். 13ம் தேதி எலக்சன் முடிந்து 16ம் தேதி முடிவுகள் வெளியானவுடன் நடக்கப்போகும் குடுமிப்பிடி சண்டையில் ஈழப்பிரச்சினை காணாமல் போகும்.
தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக