ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

டீலா நோடீலா

இன்று காலை மார்க்கெட்டில் காய் வாங்கிக்கொண்டு இருந்தேன். பக்கத்து கடையிலிருந்து திடீரென்று ஒரு குரல் – “டீலா,நோ டீலா” என்று கேட்டது. எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என்னடா இது, காலங்கார்த்தாலயே மார்க்கெட்டிலே இந்த ஷோ நடக்குதா என்று எட்டிப்பார்த்தேன். ஒன்றுமில்லை. பக்கத்து வெங்காயக்கடைக்காரர் ஒருத்தருக்கு விலை சொல்லியிருக்கிறார். அவர் கொஞ்சம் தயக்கம் காட்டியிருக்கிறார். உடனே கடைக்காரர் “டீலா,நோ டீலா” என்று கேட்டு பேரத்தை முடிக்க அவசரப்படுத்தியிருக்கிறார். டி.வி. சீரியல் எப்படி மக்களைச் சென்றடைகிறது பார்த்தீர்களா.




மார்க்கெட்டிலிருந்து திரும்பி வரும்போது என்னுடைய கற்பனைக்குதிரை ஓட ஆரம்பித்தது. இந்த “டீலா நோடீலா” வை எங்கெல்லாம் பிரயோகம் ஆகலாம் என்று யோசித்தேன்.
1. காலேஜ் படிக்கும் பையன் அவன் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா, அம்மா, என் கூட படிக்கும் பையன்கள் எல்லாம் பைக் வைத்திருக்கிறார்கள் அம்மா, அப்பாகிட்ட சொல்லி எனக்கும் ஒரு பைக் வாங்கிக்கொடுக்க சொல்லம்மா, என்கிறான். அம்மா சொல்கிறாள், திடீரென்று அவ்வளவு பணத்திற்கு அப்பா என்ன செய்வார் என்கிறாள்.
பையன் கத்துகிறான்- “டீலா,நோடீலா” – எனக்கு இப்பவே கேட்டுச்சொல்லு.

2. மனைவி கணவனிடம் மெதுவாக,
ஏனுங்க அடுத்த மாதம் என் மாமா பையன் கல்யாணம் வருதுங்க.

ஆமா, அதுக்கென்ன இப்போ?




கட்டிட்டு போறதுக்கு நல்லதா ஒரு புடவையும் இல்லீங்க, ஒரு பட்டுப்புடவை வாங்கலாங்க.

இங்கெ எங்க காசு கொட்டுக்கிடக்குது, நெனச்சப்ப பட்டுப்புடவை வாங்க.

“டீலா,நோடீலா”, நேரா சொல்லுங்க.

3. பள்ளிப்பையன் சக மாணவனிடம், டேய் இண்ணைக்கு சினிமா போகலாமா?

சக மாணவன் –பார்க்கலாம்.

முதல் மாணவன்- டேய் டீலா,நோடீலா?


உலகம் ரொம்ப வேகமாப்போய்ட்டிருக்கு, நம்மாலதான் அதுகூட ஓடமுடியலை.

11 கருத்துகள்:

  1. நாடு நல்லாயிருக்கட்டுமிங்க. இனிமே இப்படித்தான் இருக்குமுங்கோ.

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவை நன்றாக இருக்கிறது. ஆனாலும் எப்ப பார்த்தாலும் பெண்கள் புடவை வாங்குவதைப்பற்றி எழுதாவிட்டாலெ ஆண்களுக்கு பொழ்து விடியாதோ?

    பதிலளிநீக்கு
  3. மனைவிக்கு புடவை வாங்குவது பற்றி எழுதாவிட்டால் உங்களுக்கு பொழுது போகாதோ?

    பதிலளிநீக்கு
  4. சின்னம்மணிக்கு,
    சம்மாரம்னு வந்துட்டா புடவையைப்பற்றி எழுதாட்டா எப்படி?

    பதிலளிநீக்கு
  5. மசக்கவுண்டனுக்கு,
    நாமளும் நல்லா ஓடிப்பழகிக்கோணும் கவுண்டரே

    பதிலளிநீக்கு
  6. மட்டக்களப்பு உருத்திரா அவர்களே,
    வருகைக்கு நன்றி.
    இங்கே எப்பவும் எல்லாமுக்கும் டீல்தான். நோடீலே கிடையாது.

    பதிலளிநீக்கு
  7. தமிழ் நாட்டின் நாகரீகமும், பண்பாடும், அதற்கும் மேலாக தமிழ் படும் பாடும் கண்டு கண்ணீர் வடிக்கத்தான் வேண்டும்.

    இதுதான் வேகமெனின் விவேகம் எங்கே?

    இப்படியே போனால்....???????

    பதிலளிநீக்கு
  8. "ஞானவெட்டியான்" சொன்னது -

    //தமிழ் நாட்டின் நாகரீகமும், பண்பாடும், அதற்கும் மேலாக தமிழ் படும் பாடும் கண்டு கண்ணீர் வடிக்கத்தான் வேண்டும்.

    இதுதான் வேகமெனின் விவேகம் எங்கே?

    இப்படியே போனால்....???????//

    காலமாற்றத்தை தடுக்கும் சக்தி நம்மில் யாருக்கும் இல்லை. மாறுதல்களை ஏற்றுக்கொள்ள நம்மைப்போன்றவர்களால் முடியவில்லை.

    இதைத்தான் தலைமுறை இடைவெளி என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. //இதைத்தான் தலைமுறை இடைவெளி என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.//

    கண்டிப்பாக .........

    பெரிய திரை சின்ன திரை... நல்ல விஷயத்தை கத்துக்கணுமோ அதை சீக்கரம் கத்துக்க மாட்டாங்க நம்ம ஊரு மக்கள் .... இந்த மாதிரி விசயமெல்லாம் சீக்கரம் பிரபலபடுதுவாங்கள்............

    பதிலளிநீக்கு