செவ்வாய், 12 ஜனவரி, 2016

என் ஆசிரியரைக் கண்டேன் - பாகம் 1






இந்த இரு படங்களிலும் நடுவில் இருப்பவர்தான் என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.டாக்டர் டி. டேனியல் சுந்தரராஜ் அவர்கள். அவர்களுக்கு இப்போது 96 வயதாகிறது. ஆனாலும் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தன் வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். இது தவிர கிறிஸ்தவ பஜனைக் கூட்டங்கள் நடத்துகிறார். ஏழைக்குழந்தைகளுக்கு அன்னதானமும் செய்கிறார். வயதானவர்களை வாரம் ஒரு முறை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு யோசனைகள் சொல்லுகிறார்.

மேலும் பல கிறிஸ்தவ மதபோதனைகள் அடங்கிய புத்தகங்களும் எழுதி வெளியிடுகிறார்.  இவர் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரெத் என்னும் இடம். நாசரெத் என்பது இஸ்ரேலில் உள்ள ஒரு புனித ஊர். அதன் நினைவாக இங்கு வந்த கிறிஸ்தவ மத போதகரான மர்கோஸ்சிஸ் என்பவர் ஒரு ஊரை 18 ம் நூற்றாண்டில் ஸ்தாபித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஆங்கிலத்தில் ஒரு சிறு குறிப்பு.

Canon Arthur Margoschis

He came to Nazareth in 1876 as a youth missionary. He has started an orphanage for children. Rev. Margoschis rendered to not only god’s ministry but also medical services and social services. His period of ministry is called the golden era of Nazareth church. He extended the back portion of the church. He started the scheme “Future provides funds”. He completed twenty five years of service in 1901 and the silver jubilee was celebrated in 1903 according to the wishes of the congregation. In 1903 the government honored him with a medal “Saviour Hindu” for his services. The Bishop of Madras made him one of the honor canons of Madras Diocese praising his devotion and knowledge. People call him “the father of Nazareth for his services to the welfare of Nazareth congregation. According to the census taken in 1901 the members were 1482 in member. He believed that this world exceed 2000 soon. So he decided a new gig church. But that plan could not be fulfilled during his time and it was executed after 20 years. His tomb is in the church premises.

அவரின் நினைவாக கட்டப்பட்ட சர்ச்.


நான் கல்லூரியில் 1953 ல் சேர்ந்த பொழுது, திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் தாவரவியல் உதவிப் பேராசிரியராக இருந்தார்கள். தவிர மாணவர் மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்கள். நீண்ட நெடிய உயரம். ஒரு பார்வையிலேயே பயத்தை உண்டு பண்ணும் பார்வை. மாணவர்களின் ஒழுக்கத்தில் மிகவும் கட்டுப்பாடானவர். அவர் வரும்போது அவர் பாதையில் நாங்கள் எதிர் செல்லாமல் மாற்றுப் பாதையில்தான் செல்வோம். அவ்வளவு பயம் கலந்த மரியாதை.

மாணவர்கள் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டால்தான் அவர்கள் பிற்காலத்தில் நல்ல குடிமகன்களாக விளங்குவார்கள் என்ற ஆழ்ந்த கொள்கையுடையவர். அது உண்மை எனப் பிற்காலத்தில்தான் எங்களுக்கு விளங்கியது. அப்படிப்பட்டவர் ஒரு காலகட்டத்தில் இளகிப் போனார். கண்டிப்பு மாறி கனிவு மேலோங்கியது.

நான் உதவி விடுதிக்காப்பாளனாக இருந்தபோது அவர் என் மேலதிகாரியாக இருந்தார். என் கடமை உணர்வையும் பதவிக்கு விசுவாசமாக இருந்ததையும் பார்த்து என் மேல் மிகுந்த அன்புடன் இருந்தார். நான் சில உதவிகள் கேட்டபோது, அவை கொஞ்சம் நடைமுறைகளுக்கு வித்தியாசமாய் இருந்த போதிலும் எனக்காக அவைகளைச் செய்தார். வேறு யாரும் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.

பிற்காலத்திலும் அவர் எந்தப் பதவியில் இருந்த போதிலும், நான் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கக்கூடிய சலுகையை அளித்திருந்தார்.
அவரைப் பின்பற்றியே நானும் என் ஆசிரியப் பணியில் கட்டுப்பாடுதான் முக்கியம் என்று வலியுறுத்தி வந்தேன்.

கடந்த இரண்டு வருடங்களாகவே அவரைச் சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் மனதினுள் இருந்து வந்தது. சமீபத்தில் அவருடைய மருமகனும் என்னுடைய மாணவரும், என் கூடப் பணிபுரிந்தவருமான திரு.டாக்டர். அகஸ்டின் செல்வசீலன் தன்னுடைய முகப்புத்தகத்தில் திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களுடைய போட்டோவைப் பகிர்ந்திருந்தார்.

அதைப் பார்த்தவுடன் என் எண்ணம் வலுவடைந்து திரு. அகஸ்டினிடம் கலந்து பேசி, அவரும் நாசரெத் போகும்போது என் வருகையையும் வைத்துக்கொள்ளுமாறு ஒரு தேதியைத் தேர்ந்தெடுத்தோம். 7-1-16 தேதி அவ்வாறு நிச்சயமானது. உடனே ஆன்லைனில் திருநெல்வேலிக்கு போகவர டிக்கட் பதிவு செய்தேன்.



திட்டப்படியே பயணித்து திருநெல்வேலியில் தங்கி அங்கிருந்து  மற்றுமொரு ரயில் பிடித்து நாசரெத்திற்கு போய் சேர்ந்தேன். டாக்டர் அகஸ்டின் வேறொரு இடத்திற்குப் போய் விட்டு வருவதில் கொஞ்சம் லேட் ஆகும் என்றார். நான் அவரைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களுடைய விலாசத்தைச் சொன்னேன். ஆட்டோ டிரைவர் சரியாக அவர் வீட்டு வாசலில் கொண்டு போய் நிறுத்தினார்.

வாசலைத் திறந்தவுடனேயே திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு அன்புடன் என் பெயரைச்சொல்லி வரவேற்றார். நான் கண் கலங்கிப்போனேன். இவ்வளவு வருடங்கள் கழித்தும் என்னை நினைவு வைத்திருக்கிறாரே என்ற ஆனந்தம் என் கண்ணில் நீரை வரவழைத்தது.


நான் திருநெல்வேலியில் தங்கின விடுதி

தொடரும்....

18 கருத்துகள்:

  1. தற்சமயம் 96 வயதான தங்களின் ஆசிரியரை தாங்கள் நேரில் சென்று சந்தித்த நிகழ்வும், அது சம்பந்தமான படங்களும், மற்ற செய்திகளும் மிகவும் வியக்க வைக்கின்றன. இதன் தொடர்ச்சியான பகுதி-2 ஐ ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. உங்களை [நம்மளை] வளர்த்த ஆசியர்கள்/ஆசிரியைகள்...
    இவர்களை தேடிப் பார்த்து போவதே மிகுந்த சந்தோசம்!
    நானும் உங்களை மாதிரித்தான்! அந்த முயற்சியை எல்லோரும் செய்யமாட்டார்கள்--You are great!

    இன்றும் நான் இந்தியா வந்தால் பாலக்காடுக்கு போகாமல், "என் ஆசிரியையை" பார்க்காமல் போகமாட்டேன். என்னை விட ஐந்து வயது தான் மூத்தவர் என்றாலும் எனக்கு அறுவை சிகிச்சை கற்றுக் கொடுத்த ஆசிரியை! இவர்களை நான் என்றும் மறவேன். இன்றும் இந்தியா வந்து அவர்களை சந்திக்காமல் போனால் என் மனது நிறைவு அடையாது.

    இப்ப அவர்கள் சொல்லிகொடுத்த மருத்துவத்தை விட....
    அவர்கள் செய்யும் தேங்காய் எண்ணையில் செய்யும் அவியலுக்கு, பழம் பொறிக்கு நான் என்றும் அடிமை!

    பின்குறிப்பு:
    ஏனோ அவர்கள் தனி மரமாகவே இருந்து விட்டார்கள். அவர்கள் பெரிய டாக்டர் என்று சொல்வதை விட நல்ல சமையல் செய்வார்கள் என்று நான் சொல்வதே சிறப்பு: அவர்களுக்கு நிகர் அவரே!

    பதிலளிநீக்கு
  3. சத்தம் இல்லாமல் திருநெல்வேலிக்கு ஒரு பயணம். அதிலும் தனது கல்லூரி ஆசிரியரைத் தேடி. கண்டிப்பான ஆசிரியரிடம் உருவான கண்டிப்பான மனிதர் (ஆசிரியர்) நீங்கள்..

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியரை நினைவுகூரும் விதம் அருமையாக இருந்தது. அவருடனான உங்களது சந்திப்பும் அதனைப் பற்றிய பகிர்வும் நாங்கள் உங்கள் மேல் கொண்டுள்ள மரியாதையை மேலும் உயர்த்தியது. நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் உள்ளன என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

    பதிலளிநீக்கு
  5. மனம் நெகிழ்ந்தது. முக நூலிலேயே புகைப்படங்கள் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டவர் என்பதை நிருபித்து விட்டீர்கள்.மாணவன் தன்னை இன்னும் மறக்காமல் இருக்கிறான் என்பது ஆசிரியருக்கு பெருமை. ஆசிரியர் எப்போதோ படித்த மாணவனை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார் என்றால் மாணவனுக்கும் பெருமை. நீண்ட தூரம் பயணம் செய்து கற்பித்த ஆசிரியறை காணச் செய்யும் மாண்பு உண்மையில் நெகிழ வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான ஆசிரியர்... கொடுத்து வைத்த மாணவர் நீங்கள்...

    பதிலளிநீக்கு
  8. முனைவர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் பற்றி எனது அண்ணன் சிவசுப்ரமணியன் அவர்கள் மூலம் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் மாணவர்களுக்காக வெளியிட்டிருந்த கையேட்டையும் படித்திருக்கிறேன்.பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை மறக்காமால் நேரில் பார்த்து மரியாதை செய்த தங்களுக்கு என் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஆச்சர்யமான விடயம் ஐயா வாழ்த்துகள் இந்த எண்ணம் எல்லோருக்கும் வருவதில்லை
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  10. மனம் நெகிழ்ந்தது ஐயா
    ஆசிரியரை வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  11. ஆசிரியர்களை சந்திப்பதில் அலாதி இன்பம் கிடைக்கத்தான் செய்கிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. இத்தனை ஆண்டுகள் கழித்து ஆசிரியரைப் போய் பார்ப்பதிலிருந்து அவரைப் பற்றிய (உங்களையும் சேர்த்து தான்) மதிப்பு அதிகமாகிறது. வாத்தியார்னா இப்படித் தான் இருக்கணும். இருவருக்கும் வாழ்த்துகளும், மரியாதையும்.

    பதிலளிநீக்கு
  13. ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள். வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு