சனி, 27 நவம்பர், 2010

கேதார் யாத்திரை முடிவு

கேதார் யாத்திரை ஜூலை மாதம் போய் வந்தோம். இப்போது நடப்பது நவம்பர் மாதம். நான்கு மாதத்திற்கு மேல் ஒரு பயணப்பதிவை தொடர்வது பதிவுலக தர்மங்களின்படி நியாயமல்ல. ஆகவே இந்தப்பதிவுடன் இந்தப்பயணத் தொடரை மங்களகரமாக முடித்துக்கொள்கிறேன்.

மறுநாள் ரிஷிகேசத்திற்கு சென்று விட்டு, அதற்கடுத்த நாள் புறப்பட்டு டில்லி வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஒரு நாள் ஆக்ரா போய்வந்தோம். படங்களை தனி பதிவாகப் போடுகிறேன்

அடுத்த நாள் டில்லியிலிருந்து புறப்பட்டு பிளேன் சவாரியாக கோவை வந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்ததும் செய்த முதல் காரியம் ரசம் சாதம் சாப்பிட்டதுதான்.

சுபம்.