ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

உருமாலை கட்டுதல்






 
சீர்கள் செய்வதற்கு சீர்க்காரி வேண்டுமென்று போன பதிவிலசொல்லீர்ந்தனுங்களாஅது யாருன்னாமுழுக்காதங்கூட்டத்துபொம்பளயா இருக்கோணும்தன் குழந்தைகளுக்கு காது குத்திமுழுக்காத சீர்எழுதிங்க சீர் இந்த ரெண்டும்பண்ணீருக்கோணும்கட்டுக்களுத்தியா இருக்கோணும்சிலகல்யாணங்களுக்கு யாராவது இன்னோரு சீர்க்காரி கூட சேர்ந்துசீர் பண்ணி பழகியிருக்கோணும்அப்படிஇருக்கிறவங்களைத்தான் சீர்க்காரின்னு சொல்லுவாங்க.கல்யாணத்துல அவங்கதான் எல்லாச் சீர்களையும்பண்ணோணுமுங்கநம்ம ஊட்டுப்பையனும் (நாசிவன்)தொணைக்கு இருந்து இப்பிடி இப்பிடி செய்யுங்கன்னு வளிசொல்லுவானுங்க.

ஈரோட்டுக்கு கெளக்கே வளிமொறை வேற மாதிரிங்கஅங்கஅருமைக்காரங்க” ன்னு இருப்பாங்கஅவங்கதான் இந்தசீரெல்லாம் செய்வாங்ககோயமுத்தூர்ல முகூர்த்தத்துக்குஅய்யரத்தான் வச்சுக்குவாங்கபொண்ணூட்டு அய்யருதான்முகூர்த்தத்துக்கு வருவாருங்கசேலம் பக்கமெல்லாம் இந்தஅருமைக்காரங்களேதான் முகூர்த்த சமயத்துல தாலியஎடுத்துக்கொடுத்து மாப்பிள்ள தாலி கட்டுவாருங்கஹோமம்வளர்த்தறதுமந்தரம் சொல்றது எல்லாம் இல்லீங்கமுந்திகாலத்துல எல்லாம் இந்த அருமைக்காரங்க சொந்தக்காரங்கள்லஇருப்பாங்கஅவங்க இந்தக்காரியங்களையெல்லாம் ஒறவுமொறைக்காக சும்மாதான் செய்வாங்ககாசு கேக்கறதயெல்லாம்கேவலமா நெனைப்பாங்கஆனாஇப்பெல்லாம் இந்தஅருமைக்காரங்க பணம் ஆயரக்கணக்குல கேக்கறதாசொல்றாங்கஅதோட அவங்க பண்ற ரவுசு இருக்குதுங்களே,அது பொறுக்கமுடியாமெ இருக்கும்காலம் மாறுதுங்கஆனாகோயமுத்தூர்ல சீரு பண்றவங்க யாரும் இந்த மாதிரிகாசெல்லாம் கேக்க மாட்டாங்க.

என்னென்ன சீரெல்லாம் செய்யோணுமுன்னு சொல்லீட்டுவாரனுங்ககொஞ்சம் குனிப்பா பாத்துக்கோணுங்க,தூங்கிப்போயிடாதீங்கமொதல்ல மாப்பிள்ளக்கி உருமாலைகட்ற சீருங்கஇந்த சீரு தாய் மாமன்தான் செய்யோணுமுங்க.பளய காலத்துல மாப்பிள்ள பையனை மாமன் அவங்கஊட்டுக்கே கூட்டிட்டுப்பாயித்தான் இந்த சீரைச்செய்வாங்க.இப்பெல்லாம் கல்யாண ஊட்டுலயே இந்தச்சீரை செஞ்சுடறாங்க.

மாப்பிள்ளப் பையனைக் குளிப்பாட்டி புதுத் துணி குடுத்துகட்டுக்கச்சொல்லிஊட்டுக்குள்ளு ஆஜாரத்துல ஒருசேரைப்போட்டு பையனை உக்கார வைப்பாங்கநல்ல பெரியதுண்டு உருமாலை கட்றதுக்குன்னு வாங்கியிருப்பாங்கஅந்ததுண்டுல ஒரு மூலைல ஒரு ரூபாய் காசெ முடிஞ்சுஉடுவாங்கமாமன்காரன் அதை எடுத்து பையன் தலைலஉருமாலை (முண்டாசுகட்டி உடுவாருங்கஅந்த உருமாலைலஒரு மொழம் மல்லிகைப்பூவ சொருகி உடுவாங்கஅப்பறம்நெத்திக்கு திண்ணூறு பூசிசந்தனப்பொட்டு வச்சுசெகப்புபொட்டும் வைப்பாங்கஅப்பறம் மாப்பிள்ளைப்பையன் மாமன்கால்ல உளுந்து ஆசீர்வாதம் வாங்கீப்பானுங்கஅப்பமாமன்மாரன் அவஞ்சக்திக்கு தகுந்தாமாதிரி பணமோஇல்லேன்னா ஏதாச்சும் மோதிரமோசங்கிலியோபோடுவாருங்கஅப்பறம் ஏதாச்சும் கோயில் பக்கத்துல இருந்தாஅங்கெ போயி சாமி கும்பிட்டுட்டு வருவாங்கஇல்லைன்னாஊட்டுல இருக்கற சாமிய கும்பிட்டுக்குவாங்கஇல்லைன்னாஒவ்வொருத்தரு பையன் உக்காந்திருக்கற சேருக்குமுன்னாலயேஒரு புள்ளாரைப் புடிச்சு வச்சு அங்கயே சாமிகும்பிட்டுக்குவாங்கஇதுதாங்க உருமாலைக்கட்டு சீருங்க.

அப்பறம் கூப்பிட்டு இருக்கற ஒரைம்பரக்காரங்க எல்லாரும்உக்காந்து விருந்து சாப்புட்டுட்டு பையனைக் கூப்பிட்டுட்டுப்போய் அவன் ஊட்டுல உட்டுட்டு வருவாங்க.

இந்த சமயத்துல கல்யாண ஊட்டுல வேலைகள் எல்லாம்மும்முரமா நடந்துக்கிட்டு இருக்குமுங்கபந்தல் போட்டு பச்சஓலையெல்லாம் காட்டிடுவாங்கஅந்தப்பந்தல் ஓரத்திலகொசவன் சின்னசின்னதா பொம்மை செஞ்சு வச்சிருப்பானுங்க,அதைக்கட்டி உடுவானுங்கபண்ணயத்து ஆளுங்கவாசலுக்கெல்லாம் சாணி போட்டு வளிச்சு வுடுவாங்கஅந்தஊரு ஆசாரி வந்து மர அகப்பை சேத்துவானுங்கஎத்தன பேருமர அகப்பை பாத்திருப்பீங்கன்னு தெரியலைங்கஅப்பெல்லாம்இப்பத்த மாதிரி பெரிய கரண்டி எல்லாம் கெடயாதுங்க.தேங்காய்த்தொட்டியில சைடுல சின்னதா ரெண்டு ஓட்டைபோட்டு அதில நீளமா ஒரு மூங்கக்குச்சிய சொருகுனா,அதுதான் மர அகப்பைங்ககொளம்புமொளசாறுவைக்கறப்பவும்எடுத்து ஊத்தறப்பவும் இந்த மரஅகப்பையைத்தான் உபயோகிப்பாங்கஇந்த வேலைகள்எல்லாம் கனஜோரா நடந்துட்டு இருக்குமுங்க.

மறுச்சு நாளு அதாவது கல்யாணத்தண்ணிக்கு பந்தல்லவாளைமரம்எளனிதேங்காய்ப்பாளை எல்லாம் மொகப்புலகட்டுவாங்கஅக்கம் பக்கத்து ஊட்டுல இருந்துசாமான்செட்டுகள் இருக்கறதெயெல்லாம் கொண்டுவந்துருவாங்ககாய்கறியெல்லாம் சொந்தக்காரங்க கொண்டுவந்துருவாங்கமுகூர்த்தத்திற்கு முந்தின நாள் பொளுதோடஇருந்து சீர்களெல்லாம் பண்ணுவாங்கஅந்தப்பொளுதுக்குகல்யாணம்னு எங்கூர்ல சொல்லுவாங்கமறுச்சு நாளு தாலிகட்டறத முகூர்த்தம்னு சொல்றதுங்கஎல்லாரும் நேரத்தோடகல்யாணத்துக்கு வந்துடுங்க.
தொடரும்….