ஞாயிறு, 17 மே, 2009

2009 தேர்தல் முடிவுகள்

ஆஹா, தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. முடிவுகள் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும். என்னைப்பொருத்த வரையில் இந்த முடிவுகள் எனக்கு சாதகமானவையே. எப்படியென்றால் மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அரசு ஊழியர்களின் சம்பள சீரமைப்பு நடக்கும். எனக்கும் அதனால் லாபம் உண்டு. ஆகவே இந்த தேர்தல் முடிவுகளை நான் வரவேற்கிறேன்.
இது சுயநலம் அல்லவா என்று கேட்கலாம். எனக்கு உரிமையானதைப் பெறுவது எப்படி சுயநலமாகும்? அடுத்தவனை ஏமாற்றி தன்னுடைய காரியத்தை செய்வதுதான் சுயநலம் என்று நான் நினைக்கிறேன். கருத்துக்கள் மாறுபடலாம்.
ஆக மொத்தம் தேவ.......யாக்களுக்கு இந்த தேர்தல் முடிவு மிகவும் ஏமாற்றமாக இருக்கும். குறிப்பாக வன்னியர் தலைவர் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. இந்த ஆள் முக..வை விட்டு ஜெ. யைப்பிடித்தது முற்றிலும் தன் சுயநலத்திற்காகவே. கொள்கையாவது மண்ணாங் கட்டியாவது! இந்த ஆள் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் மண்ணைக்கவ்வியது பலருக்கு திருப்தி அளிக்கும். எனக்கும் அவ்வாறே.
‘’கொங்கு முன்னேற்றப் பேரவை’’ என்று புதிதாக ஒரு கட்சியை கவுண்டர்கள் சார்பில் ஆரம்பித்தார்கள். முதலில் இது ‘’கொங்கு வேளாளக்கவுண்டர்கள் முன்னேற்றப் பேரவை’’ என்றுதான் ஆரம்பித்தார்கள். நானும் போயிருந்தேன். ஆரம்பித்த நாளே பல்டி அடித்து வேளாளக்கவுண்டர்கள் பெயரை நீக்கி கொங்கு முன்னேற்றப் பேரவை என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள். இதை எதற்காக ஆரம்பித்தார்கள், ஏன் பெயர் மாற்றம் செய்தார்கள் என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. இந்த மாதிரி ஜாதிக்கட்சிகளில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்த்தில்லை. இப்போதும் இல்லை. ஆகவே இந்த கட்சியும் மண்ணைக்கவ்வியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
எப்படியோ, இன்னும் 5 வருடத்திற்கு வண்டி ஓடும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
தொடரும்......

வியாழன், 14 மே, 2009

மக்களவைத்தேர்தலும் மாக்களும்.

இன்னுமொரு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் நான் பார்த்தது என்னவென்றால் ஒருவரும் உண்மை பேசவில்லை. கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் வழி. ஏனென்றால் எல்லோரும் சொல்வது என்னவென்றால், இந்த கூட்டணி தேர்தலுக்கு மட்டுமே. தேர்தல் முடிந்த பிறகு நிலைமையைப் பொருத்து யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டு சேர்ந்து கொள்வோம் என்று. ஆக மொத்தம் யார் அதிகமாக காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முந்தி விரிக்க தயார். இப்படிப்பட்ட தே....யாக்கள் ஆட்சிக்கு வந்து நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்யப்போகிறார்கள்.

என்ன சேவை தெரியுமா? மக்களின் தலையை மொட்டை அடிக்கும் சேவைதான். இந்த மகத்தான சேவையில் யார் கூட்டுக்கு வந்தாலும் சரியே, நாங்கள் கூட்டு வைத்துக்கொள்வோம். இதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் கொள்கை. இது தவிர இன்னுமொரு சேவை கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் செய்யப்போவது என்னவென்றால், தேசசேவை. தேசசேவை என்றால் என்னவென்று சிலருக்கு புரியாமல் இருக்கலாம். அது என்னவென்றால் நம் நாட்டை எதிரிகள் ஆக்ரமிப்பு செய்வதை தடுப்பது. எப்படி என்றால் எங்கு எல்லாம் பூமிகள் கேட்பாரற்று கிடக்கிறதோ அவைகளையெல்லாம் காபந்து பண்ணுவது. எப்படி? அந்த பூமிகளை அப்படியே விட்டு வைத்திருந்தால் பாகிஸ்தான் போன்ற நாடுகள் படையெடுத்து வந்து அவைகளை ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள். ஆகவே அவைகளை தன் சொந்தப்பொருப்பில் வைத்திருந்து காப்பாற்றி வருங்கால சந்த்தியின்றுக்கு கொடுப்பார்கள். வருங்கால சந்த்தியினர் என்றால் யாரென்று தெரியாதவர்கள் அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கு போட்டுக்கொள்ளலாம்!

புதன், 6 மே, 2009

தங்கத்தமிழும் அரசியலும்

‘’தமிழுக்காக என் உயிரையும் கொடுப்பேன்.’’
‘’தமிழ் மொழிதான் என் மூச்சு, அதைக்காப்பற்றத்தான் நான் உயிரோடு இருக்கிறேன்’’
இந்த வசனங்களை கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல்வாதிகளும் அடிக்கடி பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். குறிப்பாக பேசுவதற்கு வேறு விஷயங்கள் இல்லாதபோது இந்த விஷயம் அலசப்படும். ஒருவர் இதைப்பற்றி பேசிவிட்டால் மற்றவர்கள் எல்லோரும் நான் என்ன அவனுக்கு சளைத்தவனா என்று ஒவ்வொருவரும் இந்த தமிழனின் தன்மானத்தைப் பற்றி பேசுவார்கள்.
அடுத்த அரசியல்வாதியை கேவலப்படுத்த இந்த தமிழை ஒரு ஆயுதமாகப்பயன்படுத்தும் கட்சிகளும் உண்டு. ‘’அவன் தமிழனே அல்ல, அவன் பக்கத்து மாநிலத்திலிருந்து குடி பெயர்ந்தவன், அவன் வீட்டில் ..... மொழி பேசுகிறான் தெரியுமா?’’ இந்த தாக்குதலுக்கு பதிலே கிடையாது.
அந்த வகையில்தான் ஈழத்தமிழனின் பிரச்சினையும். ‘’நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு’’. இந்த வகையில் ஈழத்தமிழனுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் சேவை செய்து அவனைக்காப்பாற்றி வருகிறார்கள். 13ம் தேதி எலக்சன் முடிந்து 16ம் தேதி முடிவுகள் வெளியானவுடன் நடக்கப்போகும் குடுமிப்பிடி சண்டையில் ஈழப்பிரச்சினை காணாமல் போகும்.
தொடரும்.......

திங்கள், 4 மே, 2009

தேர்தலும் சாதாரண பிரஜையும்

2009 பாராளுமன்ற தேர்தல்களின் கடைசி கட்ட வாக்குப் பதிவுகள் தங்கத்தமிழ் நாட்டில் வருகின்ற 13ந்தேதி நடைபெறப்போகின்றது. பாண்டிச்சேரியையும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள். எனக்கு அவ்வளவாக அரசியலில் ஈடுபாடு இல்லை. எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாளனும் இல்லை. ஆனால் சுற்றிலும் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு வருகிறேன்.
நான் கொஞ்சம் படித்திருக்கிறேன் (அதாவது Ph.D. விவசாயம்). இந்த அரசியல்வாதிகளுக்கு படித்தவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை என்பது என் எண்ணம். காரணம் இந்த படித்தவன் பேசிப்பேசியே காரியத்தைக் கெடுத்து விடுவான். அடுத்தவன் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டான். காசு வேண்டுமென்று கேட்க மாட்டான். காசு கொடுத்தாலும் வாங்கமாட்டான். அவன் யாருக்கு ஓட்டு போடுவான் என்று கணிக்க முடியாது. இப்படிப்பட்டவனை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் பண்ண முடியும்?
அரசியல்வாதிக்கு வேண்டியது, கேள்வி கேட்காமல் அவன் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு, அவன் போடும் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு அவன் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடவேண்டும். அவ்வளவுதான். கூட்டங்கள் போட்டால் பேட்டா வாங்கிக்கொண்டு லாரியில் ஏறிக் கொண்டு போய் கோஷம் போட வேண்டியது. இல்லாவிட்டால் எதிர்க்கட்சி கூட்டத்தில் போய் கலாட்டா செய்து கூட்டத்தைக் கலைப்பது.
இந்தக்காரியங்கள் எதிலும் இந்த படித்த முட்டாள் இருக்கிறானே, அவன் உபயோகப்படமாட்டான். பிறகு அவனை வைத்துக்கொண்டு என்ன அரசியல் செய்து உருப்படியாவது? அது மட்டுமா! தேவையில்லாத (அதாவது அரசுயல்வாதிக்கு தேவையில்லாத) கேள்விகளைக்கேட்டு மக்களை குழப்புவான். ஒரு வேட்பாளர் சொல்கிறார்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் மும்மாரி பொழிய வைப்போம், தபிழ்நாட்டின் ஆறுகளில் பாலாய் ஓடும், எல்லோருக்கும் சாப்பாடு அவரவர் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும், யாரும் வேலைக்கு சென்று கஷ்டப்பட வேண்டியதில்லை. இப்படி எல்லாவேட்பாளர்களும் தங்களுக்கு முடிந்தவரை எல்லோர் காதிலும் பூ சுற்றுகிறார்கள். இதைக்கேட்கும் இந்நாட்டு குடிமகன்கள் (?) ஆகா, இவரல்லவோ நம்மை வாழவைக்க வந்த தெய்வம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.
இந்த படித்தவன் என்ன செய்வான். அரசியல்வாதி கூறுவதில் சொத்தை சொள்ளை கண்டு பிடித்து, மேலும் புள்ளி விவரங்கள் சேகரித்து, இந்த வேட்பாளர் சொல்வது போல் செய்யமுடியாது என்று பேசுவான். ஆனால் நம் நாட்டு குடிமக்கள் விவரமானவர்கள். இந்த படித்த முட்டாள்கள் பேச்சைக்கேடகக்கூடாது, அவர்கள் தாங்களும் பிழைக்க மாட்டார்கள், அடுத்தவனையும் பிழைக்க விடமாட்டார்கள் என்று முடிவு செய்து யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அந்தக்கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.
எனக்குத்தெரிந்து 1968 லிருந்து இப்படித்தான் நடைமுறை. நடப்பவை நடந்தே தீரும்.
தொடரும்.......