வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஜெருசலேமின் கண்ணீர் சுவர்


ஒரு காலத்தில் இஸ்ரேல் யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆதார பூமியாக இருந்திருக்கிறது. ஏறக்குறைய இரு மதத்தினவரும் ஒரு கலாச்சாரத்திலிருந்து பிறந்திருக்கலாம்.

ஆகவே இஸ்ரேலில் இரு மதத்தினவர்களுக்கும் வழிபாட்டு ஆலயங்கள் இருந்திருக்கின்றன. கால ஓட்டத்தில் இரு மதத்தினவருக்கும் ஏற்பட்ட மோதல்களில் யூதர்களின் ஒரு ஆதி கோயில் அழிக்கப் பட்டு விடுகிறது. அதன் ஒரு பகுதி மட்டும் - அதாவது மேற்குப்பகுதியில் உள்ள சுவர் மட்டும் மிஞ்சுகிறது.

இது பிற்காலத்தில் யூதர்களின் வழிபாட்டு ஸ்தலத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறுகிறது. இந்த சின்னம் ஒரு தோல்வியின் சின்னமாதலால் பழங்காலத்தில் மக்கள் இங்கு வந்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். நாளாவட்டத்தில் இது ஒரு சடங்காக மாறி விட்டது. அங்கு வரும் அனைத்து யூத மக்களும் (பிற்காலத்தில் கிறிஸ்துவ மக்களும்) இதை ஒரு புனித ஸ்தலமாக மாற்றி விட்டார்கள். அது போக இங்கு வருபவர்கள் கண்ணீர் விடவேண்டும் என்பதும் ஒரு பழக்கமாக மாறிப்போனது.

இதுதான் மேற்கு சுவர் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Western Wall என்றும்,  மக்கள் இங்கு வந்து கண்ணீர் விடுவதால் Wailing Wall என்றும் பெயர் பெற்று விட்டது.   இன்றளவும் ஜெருசலேம் வரும் மக்கள் இந்த இடத்திற்கு தவறாமல் போகிறார்கள். இங்கு கண்ணீர் விடுவதால் தங்கள் பாவங்கள் நீங்குவதாகவும் மனக்கவலைகள் மறைவதாகவும் நம்புகிறார்கள்.

சுற்றுலா சென்றவர்களை இந்த இடத்திற்கு தவறாமல் கூட்டிக்கொண்டு போய் இந்த சுவற்றைக் காண்பிக்கிறார்கள். நானும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு வந்தேன் (!). கண்ணில் அப்போது தூசி விழுந்து விட்டது. கிறிஸ்தவ அன்பர்கள் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். கண்ணீர் விட்டது உண்மை.

பிறகு பெத்தலஹேம் (இயேசு கிறிஸுது பிறந்த இடம்) கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே ஒரு தேவாலயம் இருக்கிறது. சமீப காலத்தில் கட்டியதாக இருக்கவேண்டும். அதன் பக்கத்தில் ஒரு மாட்டுத்தொழுவம் இருக்கிறது. அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. இங்குதான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்று சொன்னார்கள்.

இத்தகைய இடங்களுக்குப் போகும்போது நம் மன நிலைதான் அந்த இடங்களை புனித ஸ்தலங்களாகப் பாவிக்க உதவுகிறது. நம்புக்கை இல்லாதவர்கள் இத்தகைய இடங்களுக்குப் போவது வீண்.

இங்கிருந்து பார்த்தால் ஒரு சிறிய மலை தெரிகிறது. இந்த மலையில்தான் இயேசு கிறிஸ்து தன் பத்துக் கட்டளைகளை செதுக்கினார் என்று சொன்னார்கள். அப்படியா என்று கேட்டுக்கொண்டோம்.

இந்த சுற்றுலா பஸ்சில் அந்தக்காலத்திலேயே (1987) வாக்கி டாக்கி என்று சொல்லப்படும் போன் வைத்திருந்தார்கள். தங்கள் நடவடிக்கைகளை அவ்வப்போது தங்கள் கம்பெனிக்கு சொல்கிறார்கள். சாதாரண டெலிபோனுக்கே தவிக்கும் இந்தியாவிலிருந்து போன நான் அதை பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது நம் ஊரில் பிச்சைக்காரர்கள் கூட செல்போன் வைத்திருக்கிறார்கள்.

இப்படியாக ஜெருசலேம் பயணம் முடிந்தது. மறுநாள் டெக்னிகல் சமாச்சாரங்களைப் பார்த்தேன்.

12 கருத்துகள்:

  1. ஜெருசேலம் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தால்,
    தாங்கள் கண்ட காட்சியை நாங்களும் பார்த்திருப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் போனது 1988 ல். அப்போது டிஜிடல் காமராக்கள் எல்லாம் வராத காலம். ஆபீஸ் கேமராவில் 35 mm ஸ்லைடுகள்தான் எடுத்து வந்தேன். இந்த மாதிரி கரந்தை ஜெயக்குமார் கேட்பாரென்று ஞானக்கண் இல்லாததினால் தெரியவில்லை. அதனால் அப்போது அவைகளை சேமிக்கவில்லை. அவையெல்லாம் இப்போது எங்கே எப்படி இருக்குமோ, ஆண்டவனே அறிவார்.

      நீக்கு
  2. //நம்புக்கை இல்லாதவர்கள் இத்தகைய இடங்களுக்குப் போவது வீண்.//

    உண்மைதான். கவிஞர் கண்ணதாசன் கூட சொல்லுவார். ‘தெய்வம் என்றால் அது தெய்வம். இல்லையென்றால் அது சிலை தான்.’என்று.

    பதிலளிநீக்கு
  3. நானும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு வந்தேன் (!).

    எத்தனையோ பேர் கண்ணீர் வடித்த இடமல்லா .. இடத்தின் விஷேசம் கண்ணீர் வந்திருக்கும் ..!

    ///சுற்றுலா பஸ்சில் அந்தக்காலத்திலேயே (1987) வாக்கி டாக்கி என்று சொல்லப்படும் போன் ..! //

    பல நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே
    நவீன வசதிகள் வந்து பிரமிக்க வைக்கிறது ..!


    பதிலளிநீக்கு
  4. இது வரை அறிந்திராத பல விஷயங்கள் . நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பகிர்வு அருமை.... படங்களைப் பகிர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. // இந்த மலையில்தான் இயேசு கிறிஸ்து தன் பத்துக் கட்டளைகளை செதுக்கினார் என்று சொன்னார்கள்.// இயேசு கிறிஸ்து காலத்துக்கு முன்பே " பத்து கட்டளைகள் " வந்துவிட்டனவே, அப்படித்தானே பழைய ஏற்பாட்டில் வரும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்கள் ஆகி விட்டபடியால் என் நினைவு தவறாக இருக்கலாம். பைபிளை நன்கு படித்தவர்களைக் கேட்டுக்கொள்ளவும்.

      நீக்கு
  7. ரசித்தேன்.

    //இயேசு கிறிஸ்து காலத்துக்கு முன்பே " பத்து கட்டளைகள் " வந்துவிட்டனவே, அப்படித்தானே பழைய ஏற்பாட்டில் வரும் ? //

    அதானே!

    பதிலளிநீக்கு
  8. \\சுற்றுலா சென்றவர்களை இந்த இடத்திற்கு தவறாமல் கூட்டிக்கொண்டு போய் இந்த சுவற்றைக் காண்பிக்கிறார்கள். நானும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு வந்தேன் (!). கண்ணில் அப்போது தூசி விழுந்து விட்டது. கிறிஸ்தவ அன்பர்கள் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். கண்ணீர் விட்டது உண்மை.\\குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு, திரும்பவும் கிள்ளியது மாதிரி இருக்கு.........!!

    பதிலளிநீக்கு