சனி, 17 அக்டோபர், 2015

கரும்பு தின்னக் கூலி


                            Image result for கரும்பு

இந்த மாதிரி கரும்பு தின்னக்கூலி கொடுப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கரும்பையே காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டும். அதை சும்மா கொடுத்து அதைத் தின்பதற்குக் கூலியும் கொடுக்கிறார்கள் என்றால் கசக்கவா செய்யும்?

இப்படி ஒருவர் இந்தக் கலிகாலத்தில் செய்கிறார். அவர்தான் தமிழ் வலைப் பதிவர்களின் ஜாம்பவான், திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


                                    My Photo

அவர் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவைகளில் 40 சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதியவர்கள் சுமார் 255 பேர்களுக்குப்  பரிசு வழங்கியது தமிழ் பதிவுலக சரித்திரத்திலேயே ஒரு மகத்தான சாதனை. அத்தனை பரிசுப்பணமும் அவருடைய சொந்தப் பணம். இதற்காக அவர் யாரிடமும் எந்தவிதமான நன்கொடையும் வாங்கவில்லை.

இந்தப் போட்டியின் முடிவில் அவர் கடந்த மார்ச் மாதம் அவர் பதிவில் வெளியிட்ட இன்னொரு போட்டியின் அறிவிப்பைப் பாருங்கள்.

மீண்டும் ஓர் மிகச்சுலபமான பரிசுப்போட்டி அறிவிப்பு

02.01.2011 முதல் 31.03.2015 வரை நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும் [மீள் பதிவுகள் உள்பட சுமார் 750] ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ளவர்களுக்கு + இனி புதிதாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஓர் சிறப்புப்பரிசு அளிக்கப்பட உள்ளது.

மேற்படி போட்டிக்கான ஒருசில எளிய நிபந்தனைகள்:

என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் தங்களுடைய சற்றே மாறுபட்ட பின்னூட்டம் 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் இடம் பெற வேண்டும். 

’அட’ ’ஆஹா’ ‘அருமை’ ’அசத்தல்’ ’பாராட்டுக்கள்’ ‘வாழ்த்துகள்’ ’படித்தேன்’ ‘ரசித்தேன்’ என்ற ஓரிரு வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லாமல், அந்தந்த பதிவுகளுக்கு சற்றேனும் சம்பந்தம் உள்ளதாகவும், சற்றே சுவையான, மாறுபட்ட, வித்யாசமான கருத்துக்கள் கொண்ட பின்னூட்டமாகவும் அவை அமைந்தால் போதுமானது. 

பிறர் கொடுத்துள்ள பின்னூட்டங்களையே COPY and PASTE செய்து தங்களின் பின்னூட்டமாக அளித்தல் கூடவே கூடாது.

என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் 
தங்களின் பின்னூட்டங்கள்
இடம்பெற வேண்டிய 
இறுதி நாள்: 31.12.2015 



இந்தப் போட்டியில் எந்தக் கஷ்டமும் இல்லை. அவருடைய பதிவுகள் படிப்பதற்கு மிகவும் சுவையானவை. அதை ஏற்கெனவே நான் படித்து பின்னூட்டங்களும் போட்டிருக்கிறேன். அப்படி பின்னூட்டங்கள் போடாமல் விட்டுப்போன பதிவுகளுக்கு இப்போது பின்னூட்டம் போட்டேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னூட்டங்கள் போட்டு அவருடைய போட்டியை முடித்து விட்டேன்.

இந்தப் போட்டியை முழுவதும் முடித்த முதல் பதிவர் நான்தான். அதனால் எனக்கு ஸ்பெஷலாக போட்டியின் கடைசி நாள் வராவிட்டாலும் கூட போட்டிக்கான பரிசை திரு. வைகோ அவர்கள் எனக்காக தயார் செய்து வைத்திருந்தார். நான் புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிற்குப் போகும்போது திருச்சியில் அவர் வீட்டிற்குப் போனதைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

அப்போது அவர் அந்தப் பரிசை, முழுசாக ஆயிரம் ரூபாய், புது ஐம்பது ரூபாய் நோட்டுகளாகத் தேர்ந்தெடுத்து அவைகளை அழகாக கலை நுட்பத்துடன் ஒரு அட்டையில் அடுக்கி, வாழ்த்துச் செய்தியுடன் எனக்குக் கொடுத்தார்.




முன்பக்கம்


பின்பக்கம்

இவைகளை நான் பெரும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவேன்.

இவ்வளவு அலங்காரமாக நம் கோபு சார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு எனக்கு வழங்கப்பட்டுள்ள பரிசு, என் ஒருவனே ஒருவனுக்கு மட்டுமே அல்ல. 

வேறு சில வெற்றியாளர்களுக்கும், இந்தப்போட்டியில் இறுதி வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களுக்குமாக, திரு. கோபு சார், அழகாக வடிவமைத்து தன்னிடம் இப்போதே ரெடியாக வைத்துள்ளார். 

அவற்றையும் என் கண்களால் அவரின் வீட்டில் நான் இருந்தபோது கண்டு மகிழ முடிந்தது.  

தலா ரூபாய் ஆயிரம் வீதம் அவர் இவ்வாறு அழகாக அலங்கரித்து வடிவமைத்து வைத்துள்ள வெற்றியாளர்களில் என் நினைவில் நிற்கும் ஒருசிலர்:

1) ’பூந்தளிர்’ வலைப்பதிவர் திருமதி. சிவகாமி அவர்கள்.

2) ’மனம் (மணம்) வீசும்’ வலைப்பதிவர் திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்

3) ‘மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

இவர்கள் இன்னும் சில பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டம் போடவேண்டியிருக்கிறது. அதை அவர்கள் போட்டி முடிவு தேதிக்குள் முடித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

இவர்கள் அனைவரும் இறுதியில் வெற்றிபெறவும், ரூ. 1000 வீதம் நம் அன்புக்குரிய திரு. கோபு சாரிடமிருந்து பரிசினைப்பெறவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வளவு பரந்த உள்ளம் கொண்ட வைகோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பதிவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்படியே நான் சுலபமாக வெல்லக்கூடிய இதே மாதிரி போட்டிகளையும் அவ்வப்போது அறிவிக்க அவருக்கு கிருபை செய்ய வேண்டுமாய் கூடுதல் பிரார்த்தனையும் இறைவனுக்கு வைக்கிறேன்.

22 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் ஸார். வைகோ அவர்களின் உற்சாகத்தையும், உழைப்பையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    பதிலளிநீக்கு
  2. திரு வை.கோ அவர்களின் ஈடுபாடும், உத்தியும், தொழில்நுட்பமும், வாசகர்களை எழுதத் தூண்டவைக்கும் ஆர்வமும் மிகவும் பாராட்டத்தக்கதாகும். அசராமல் தொடர்ந்து சாதித்து வரும் அவரைப் பற்றிய தங்களின் பதிவுக்கு நன்றி. அவருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
    http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

    பதிலளிநீக்கு
  4. தான் பெற்ற இன்பம்
    வலைப்பதிவர் எல்லாம் பெற
    மனமுவந்து பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ஆம் அப்பா உங்கள் பரிசை பார்த்த போது நினைத்தேன் எத்தனை கலைநயத்துடன் அப்பரிசை தந்துள்ளார்கள் என...மகிழ்ச்சி அப்பா..நீங்கள் பரிசு பெற்றமைக்காக..

    பதிலளிநீக்கு

  6. கரும்பையும் சுவைத்து ‘கூலி’ யையும் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! பரிசளித்த பரந்த மனம் கொண்ட திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்! பரிசு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப சந்தோசமுங்க ஐயா. ரூவா நோட்டெல்லா எவ்ளோ சூப்பரா அடுக்கி அலங்காரமா வச்சிருக்காக. குருஜிக்கு ரொம்ப தாராள பெரிய மனசுங்க.

    பதிலளிநீக்கு
  8. திரு வை கோ சார் சற்றே வித்தியாசமானவர் போட்டியும் சரி அதை நடத்திய விதமும் சரி அவரைத் தனித்துக் காட்டுகின்றன/ பரிசு பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் ஐயா. உங்கள் இருவரின் அசராத உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. பரிசை வழங்கிய வை.கோபால கிருஸ்ஃணன் அவர்களுக்கும், பரிசு வாங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. பதிவின் தலைப்பும், முதலில் காட்டியுள்ள படமும் மிகவும் அருமையான தேர்வுகள். அதற்கான என் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    தங்களின் இந்தத்தள்ளாத வயதிலும், மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும், முழு அர்ப்பணிப்புடனும், மிகவும் சிரத்தையாகவும், சற்றும் தொய்வின்றியும், படு ஸ்பீடாகவும், நான் அறிவித்திருந்த புதுப்போட்டியினில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ள தங்களுக்கு நான் அளித்துள்ள பரிசுத்தொகை, வெறும் சுண்டைக்காய் அளவு மட்டுமே என்பதனை மிகவும் தாழ்மையுடன் இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்.

    தங்களை 10.10.2015 அன்று மீண்டும் நேரில் நம் இல்லத்தில் சந்திக்க நேர்ந்ததில் நாங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.

    இதனை இவ்வாறு தனிப்பதிவாக இங்கு வெளியிட்டு சிறப்பித்ததற்கும், புதுக்கோட்டையில் நம் அன்புக்குரிய பதிவர்கள் மதுரை Mr. S. Ramani Sir, தங்களுக்குப் புதுக்கோட்டையில் கிடைத்துள்ள புதையலான புதிய அன்பு மகள் Mrs. M. Geetha Madam போன்ற ஒருசிலரிடம் பெருமையாகக் காட்டி மகிழ்ந்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

    என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தத் தள்ளாத வயதிலும்,//

      எந்த வயதிலும் என்னைத் "தள்ள" வேண்டாம்.

      தள்ளுதல் = ஒதுக்குதல்

      நீக்கு
    2. பழனி. கந்தசாமி ஞாயிறு, 18 அக்டோபர், 2015 ’அன்று’ 7:28:00 பிற்பகல் IST

      //தள்ளுதல் = ஒதுக்குதல்//

      நான் ஏற்கனவே, எனக்கு மிகவும் பிடித்தவரான தங்களை, என் மனதுக்குள் [இதயத்திற்குள்] ஒதுக்கிக்கொண்டு விட்டேன், சார்.

      சந்தித்த வேளையில் ...... சிந்திக்கவே இல்லை ...... தந்துவிட்டேன் என்னை ! :)
      Please Refer: http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html

      நீக்கு
  12. மூத்த வலைப்பதிவர் அய்யா திரு V.G.K அவர்கள் எதையும் வித்தியாசமாக புதுமையாக செய்ய நினைப்பவர். வலைப்பதிவர்களுக்கு அவர் நடத்திய விமர்சனப் போட்டிகளே இதற்கு சாட்சி. தமிழ் வலைப் பதிவர்களின் ஜாம்பவான் என்று நீங்கள் அவரைப் பாராட்டியது சரிதான். வெற்றி பெற்று பரிசுத் தொகையைப் பெற்ற உங்களுக்கும் இனி பெறப் போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. பதிவர் வை. கோபாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பரிசினை வென்றமைக்கு நல்வாழ்த்துகள்!

    ஐயா வை. கோ. அவர்கள் போட்டி மேல் போட்டி வைத்து, நமக்கு பரிசுப் பணம் மென்மேலும் அனுப்பியே நம்மை அலுப்பு ஏற்பட வைத்துவிடுவார். ஆனால், அவருக்கு சுறுசுறுப்புதான் எப்போதும்...
    எட்டாத மனசு கொண்டவர். அதாவது உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
    அவர்கள் மேலும் பல போட்டிகள் நடத்திட,
    பரிசுகள் வழங்கிட, ஆரோக்கியமாய் நீடூழி வாழ்ந்திட என்றும் வாழ்த்துகிறேன், பிரார்த்திக்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  14. இது முன்னமே தெரிஞ்சிருந்தா கண்ணு முழுச்சி அவர் பதிவ படிச்சிருப்பனே.

    பதிலளிநீக்கு
  15. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் , ஐயா!
    பரிசு கொடுத்து பாராட்டிய கோபு மாமாவிற்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  16. எப்படியும் அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை வாங்கிவிடலாம் என்று பார்க்கிறேன். அது சரி, எவ்வளவு பேருக்கு அப்படி வழங்குவார் என்று ஏதேனும் தகவல் உண்டா? - இராய sசெல்லப்பா

    பதிலளிநீக்கு
  17. முனைவர் பரிசு பெறுவதில் முதல்வரானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேன்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா!!!

    பதிலளிநீக்கு