போட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 அக்டோபர், 2015

கரும்பு தின்னக் கூலி


                            Image result for கரும்பு

இந்த மாதிரி கரும்பு தின்னக்கூலி கொடுப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கரும்பையே காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டும். அதை சும்மா கொடுத்து அதைத் தின்பதற்குக் கூலியும் கொடுக்கிறார்கள் என்றால் கசக்கவா செய்யும்?

இப்படி ஒருவர் இந்தக் கலிகாலத்தில் செய்கிறார். அவர்தான் தமிழ் வலைப் பதிவர்களின் ஜாம்பவான், திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


                                    My Photo

அவர் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவைகளில் 40 சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதியவர்கள் சுமார் 255 பேர்களுக்குப்  பரிசு வழங்கியது தமிழ் பதிவுலக சரித்திரத்திலேயே ஒரு மகத்தான சாதனை. அத்தனை பரிசுப்பணமும் அவருடைய சொந்தப் பணம். இதற்காக அவர் யாரிடமும் எந்தவிதமான நன்கொடையும் வாங்கவில்லை.

இந்தப் போட்டியின் முடிவில் அவர் கடந்த மார்ச் மாதம் அவர் பதிவில் வெளியிட்ட இன்னொரு போட்டியின் அறிவிப்பைப் பாருங்கள்.

மீண்டும் ஓர் மிகச்சுலபமான பரிசுப்போட்டி அறிவிப்பு

02.01.2011 முதல் 31.03.2015 வரை நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும் [மீள் பதிவுகள் உள்பட சுமார் 750] ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ளவர்களுக்கு + இனி புதிதாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஓர் சிறப்புப்பரிசு அளிக்கப்பட உள்ளது.

மேற்படி போட்டிக்கான ஒருசில எளிய நிபந்தனைகள்:

என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் தங்களுடைய சற்றே மாறுபட்ட பின்னூட்டம் 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் இடம் பெற வேண்டும். 

’அட’ ’ஆஹா’ ‘அருமை’ ’அசத்தல்’ ’பாராட்டுக்கள்’ ‘வாழ்த்துகள்’ ’படித்தேன்’ ‘ரசித்தேன்’ என்ற ஓரிரு வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லாமல், அந்தந்த பதிவுகளுக்கு சற்றேனும் சம்பந்தம் உள்ளதாகவும், சற்றே சுவையான, மாறுபட்ட, வித்யாசமான கருத்துக்கள் கொண்ட பின்னூட்டமாகவும் அவை அமைந்தால் போதுமானது. 

பிறர் கொடுத்துள்ள பின்னூட்டங்களையே COPY and PASTE செய்து தங்களின் பின்னூட்டமாக அளித்தல் கூடவே கூடாது.

என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் 
தங்களின் பின்னூட்டங்கள்
இடம்பெற வேண்டிய 
இறுதி நாள்: 31.12.2015 



இந்தப் போட்டியில் எந்தக் கஷ்டமும் இல்லை. அவருடைய பதிவுகள் படிப்பதற்கு மிகவும் சுவையானவை. அதை ஏற்கெனவே நான் படித்து பின்னூட்டங்களும் போட்டிருக்கிறேன். அப்படி பின்னூட்டங்கள் போடாமல் விட்டுப்போன பதிவுகளுக்கு இப்போது பின்னூட்டம் போட்டேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னூட்டங்கள் போட்டு அவருடைய போட்டியை முடித்து விட்டேன்.

இந்தப் போட்டியை முழுவதும் முடித்த முதல் பதிவர் நான்தான். அதனால் எனக்கு ஸ்பெஷலாக போட்டியின் கடைசி நாள் வராவிட்டாலும் கூட போட்டிக்கான பரிசை திரு. வைகோ அவர்கள் எனக்காக தயார் செய்து வைத்திருந்தார். நான் புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிற்குப் போகும்போது திருச்சியில் அவர் வீட்டிற்குப் போனதைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

அப்போது அவர் அந்தப் பரிசை, முழுசாக ஆயிரம் ரூபாய், புது ஐம்பது ரூபாய் நோட்டுகளாகத் தேர்ந்தெடுத்து அவைகளை அழகாக கலை நுட்பத்துடன் ஒரு அட்டையில் அடுக்கி, வாழ்த்துச் செய்தியுடன் எனக்குக் கொடுத்தார்.




முன்பக்கம்


பின்பக்கம்

இவைகளை நான் பெரும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவேன்.

இவ்வளவு அலங்காரமாக நம் கோபு சார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு எனக்கு வழங்கப்பட்டுள்ள பரிசு, என் ஒருவனே ஒருவனுக்கு மட்டுமே அல்ல. 

வேறு சில வெற்றியாளர்களுக்கும், இந்தப்போட்டியில் இறுதி வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களுக்குமாக, திரு. கோபு சார், அழகாக வடிவமைத்து தன்னிடம் இப்போதே ரெடியாக வைத்துள்ளார். 

அவற்றையும் என் கண்களால் அவரின் வீட்டில் நான் இருந்தபோது கண்டு மகிழ முடிந்தது.  

தலா ரூபாய் ஆயிரம் வீதம் அவர் இவ்வாறு அழகாக அலங்கரித்து வடிவமைத்து வைத்துள்ள வெற்றியாளர்களில் என் நினைவில் நிற்கும் ஒருசிலர்:

1) ’பூந்தளிர்’ வலைப்பதிவர் திருமதி. சிவகாமி அவர்கள்.

2) ’மனம் (மணம்) வீசும்’ வலைப்பதிவர் திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்

3) ‘மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

இவர்கள் இன்னும் சில பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டம் போடவேண்டியிருக்கிறது. அதை அவர்கள் போட்டி முடிவு தேதிக்குள் முடித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

இவர்கள் அனைவரும் இறுதியில் வெற்றிபெறவும், ரூ. 1000 வீதம் நம் அன்புக்குரிய திரு. கோபு சாரிடமிருந்து பரிசினைப்பெறவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வளவு பரந்த உள்ளம் கொண்ட வைகோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பதிவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்படியே நான் சுலபமாக வெல்லக்கூடிய இதே மாதிரி போட்டிகளையும் அவ்வப்போது அறிவிக்க அவருக்கு கிருபை செய்ய வேண்டுமாய் கூடுதல் பிரார்த்தனையும் இறைவனுக்கு வைக்கிறேன்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

மணற்கேணி போட்டிகள்

சிங்கைப் பதிவர்கள் குழுமம் 2009ம் ஆண்டு கட்டுரைப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மூன்று பதிவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து விருது வழங்கியது பதிவர்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.

அதேபோல் 2010 ம் ஆண்டுக்கும் கட்டுரைப் போட்டி அறிவிப்பு வெளியாகி பலரும் கட்டுரைகளை அனுப்பினார்கள். நானும் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன்.

இக்கட்டுரைகள் யாவும் தகுந்த நடுவர்களால் ஆய்வு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தெரிந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்று சில பதிவுகள் மூலமாக அறிந்தேன். ஆனால் இந்த முடிவுகள் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. ஏனெனில் எனக்கு இதுவரையில் எந்த தகவலும் வந்து சேரவில்லை.

போட்டிகள் நடத்தும் அமைப்பாளர்கள் போட்டி முடிவுகளை பதிவுகளில் வெளியிடுவதோடு இல்லாமல் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முடிவு விவரங்களை அனுப்புவது தேவை என்று கருதுகிறேன்.

ஏனென்றால் மிகுந்த முயற்சியில் தயாரிக்கப்பட்ட கட்டுரைகளை அந்தந்த பதிவர்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி உபயோகித்துக் கொள்ளலாம் அல்லவா? இதை மணற்கேணி அமைப்பாளர்கள் உடனடியாக கவனித்து ஆவன செய்வார்கள் என்று நம்புகிறேன்.