இலவச புரொக்ராம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலவச புரொக்ராம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 டிசம்பர், 2014

நான் மீண்டும் கையைச் சுட்டுக் கொண்டேன்.

                                   

                                   

மீண்டும் மீண்டும் கையைச் சுட்டுக்கொளவதே என் வழக்கமாகப் போய் விட்டது. பலமுறை பதிவுலக நண்பர்களுக்கு நான் அறிவுரை வழங்கியுள்ளேன். சொல்வார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போகாதீர்கள் என்று எல்லாருக்கும் நான் சொல்வேன். ஆனால் "எல்லோருக்கும் கௌளி சொல்லுமாம் பல்லி, அது விழுந்ததாம் கழுநீர்ப் பானையில்" என்ற மாதிரி நானும் நேற்று கழுநீர்ப்பானையில் விழுந்தேன்.

பதிவுலகில் தொழில் நுட்பப் பதிவர்கள் என்று ஒரு ஜாதி இருக்கிறது. இவர்கள் செய்யும் வேலை என்னவென்றால் எங்காவது ஒரு புது கம்பெனி ஏதாவது ஒரு புரொக்ராமைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் அதை மோப்பம் பிடித்து தங்கள் பதிவில் போட்டு விடுவார்கள். அதன் சாதக பாதகத் தன்மைகளைப் பற்றி ஒன்றும் ஆராய மாட்டார்கள். அதை நம்பி அந்த புரொக்ராமை நிறுவும் பயனாளிகளான நாம்தான் இளிச்சவாயர்கள்.

எந்த கம்ப்யூட்டர் புரொக்ராம்காரனும் பொது சேவை செய்வதற்காக கம்பெனி ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் ஒரு புரொக்ராமை இலவசமாகக் கொடுக்கிறான் என்றால் அதில் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் மறைமுகமான லாபம் இருக்கும்.

சில பெரிய கம்பெனிகள் தங்களுக்கு வரும் விளம்பரங்களுக்காக இத்தகைய புரொக்ராம்களை இலவசமாகத் தருகின்றன. ஆனால் பெரும்பாலான அடையாளம் தெரியாத கம்பெனிகள் வைரஸ்களை இனாமாகத் தருகின்றன. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் நாம் ஏமாந்து விடுவோம்.

ஆகவே நம் தொழில் நுட்ப பதிவர்கள் பரிந்துரைக்கும் புரொக்ராம்கள் 100 சதம் பத்திரமானவை என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் அதை உடனடியாக விட்டொழியுங்கள். நான் நேற்று இப்படி ஒரு புரொக்ராமை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்த பிறகு பார்த்தால் கூடவே ஒரு மோசமான வைரஸும் இறக்குமதி ஆகி கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டது.

எப்படி முயன்றாலும் அன்இன்ஸ்டால் ஆகமாட்டேன் என்றது. வேறு வழியில்லாமல் சிஸ்டம் ரெஸ்டோர் போய்த்தான் சரி செய்ய வேண்டியதாய்ப் போயிற்று. என்னுடைய கம்ப்யூட்டரின் ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஒரிஜினலாய் இருந்ததால் அதிகம் பிரச்சினை இல்லாமல் போயிற்று. இல்லையென்றால் டாக்டரிடம் போகவேண்டியதாய் இருந்திருக்கும்.

ஆகவே நண்பர்களே ஜாக்கிரதையாய் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.