கடமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மார்ச், 2011

மனிதனின் கடமைகள்.


என்னுடைய மதியும் விதியும் என்கிற பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டம்.

Anonymous said...
But, what are all one's duties and who defines that?
இந்த பின்னூட்டம்அனானியாக வந்திருக்கிறது என்பதைத் தவிர, அதில் குறிப்பிட்டுள்ள கருத்து நன்றாகவும் ஆழமாகவும் உள்ளது.
ஒருவருடைய கடமைகள் என்னென்ன? அவைகளை யார் வரையறுக்கிறார்கள்?

மனிதன் என்பவன் தனியானவன் அல்ல. அவன் சுற்றியிருக்கும் சமூகத்தின் ஒரு அங்கம். அந்த சமூகத்தின் பல நியதிகளுக்கு அவன் கட்டுப் பட்டவன். அவனைப் பெற்றவர்களும் அவனுடைய உறவினர்களும் அந்த சமூகத்தின் அங்கத்தினர்களே. அவர்களும் அந்த சமூகத்தின் கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டவர்களே.

இந்த சமூக கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டேதான் ஒருவன் தன் தனித்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்ந்த அவன் தான் வாழும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியவனாக இருந்தால் அந்த சமூகம் அவனை ஏற்றுக்கொள்ளும். அப்படி இல்லாமல் அவன் சமூகத்திற்கு தீமை பயக்கக் கூடிய பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தால் அவனை அந்த சமூகம்/சமூக அங்கத்தினர்கள் ஒதுக்கி விடுவார்கள்

ஆகவே கடமைகள் என்பவைகளை சமூகம்தான் நிர்ணயிக்கிறது. அந்த சமூக கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டு ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை வளர்த்துக் கொள்கிறான். அப்போது அவன் தன்னுடைய கடமைகள் என்னென்ன என்பதை உணர்ந்து வரையறுத்துக் கொள்கிறான். அவ்வாறு வரையறுத்துக்கொண்ட கடமைகள் அல்லது பண்புகள் ஒருவனை மேம்படுத்துவதாகவோ அல்லது தாழ்த்துவதாகவோ அமைகின்றன. இவ்வாறு பண்புகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கே உண்டு. வேறு யாரும் அவனைக் கட்டாயப்படுத்த முடியாது.

ஒருவன் வளர்ந்த சூழ்நிலை, அவனுடைய குடும்ப பழக்க வழக்கங்கள், அவன் பழகிய சகாக்கள் ஆகிய அனைத்தும் அவனுடைய பண்புகள் எப்படி உருவாகின்றன என்பதை நிர்ணயிக்கும். கல்வி, கேள்விகளில் ஒருவன் ஈடுபாடு கொண்டிருந்தால் அவனுக்கு நற்பண்புகள் வளர வாய்ப்புகள் அதிகம். இவை எல்லாவற்றையும் விட அவன் தலையெழுத்து எவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்பது மிக மிக முக்கியம். ஆகவே அவரவர்கள் கடமை உணர்ச்சி என்பது அவரவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அடுத்தவர்கள் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.