கதிர்வீச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதிர்வீச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஜனவரி, 2015

கதிர்வீச்சும் மனிதர்களும்

                                                    
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்காக்காரன் அணுகுண்டு போட்டான். அதனுடைய கதிர்வீச்சுகளின் தாக்கம் இன்றும் அங்கு இருக்கிறது. அதனால் அந்த இடம் மனிதர்கள் வாழ லாயக்கில்லை.

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை நம்பிக் கொண்டிருக்கும் செய்தி இதுவே. அதாவது கதிர் வீச்சு என்றாலே மனிதர்களுக்கு ஆபத்து என்றுதான் நம்புகிறோம். இது ஓரளவிற்குத்தான் உண்மை. அவர்கள் கதிர் வீச்சு என்றால் என்ன? அது என்ன செய்யும் என்கிற விஞ்ஞான உண்மைகளை அறியாதவர்கள் ஆவார்கள்.

இயற்கையில் எல்லாப் பொருள்களும் கதிர்வீச்சை வெளிப்படுத்துகின்றன. இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் கதிர் வீச்சை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. மனிதனும் அவ்வாறே கதிர் வீச்சினை வெளிப்படுத்துகிறான். இதில் நாம் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் அந்த கதிர்வீச்சின் திறன் அதாவது சக்தி எவ்வளவு இருக்கிறது என்ற தகவல்தான்.

சக்தியைப் பொறுத்து கதிர்வீச்சில் மூன்று வகைகள் இருக்கின்றன. ஆல்பா, பீட்டா, காமா என்பவை அந்த மூன்று வகை. இதில் ஆல்பா வகை கதிர் வீச்சுக்கள் நம்மை ஒன்றும் செய்யாது. நமது மேல் தோலே அவைகளைத் தடுத்து விடும். பீட்டா வகை கதிர் வீச்சு நம் உடலுக்குள் செல்லும் ஆனால் பெரும் தீங்கு விளைவிக்காது. எக்ஸ்ரே கதிர் வீச்சுகள் இவ்வகைப் பட்டவை.

காமா வகை கதிர் வீச்சுகள்தான் ஆபத்தானவை. இவை நம் உடலுக்குள் சென்றால் அங்கு பல நாட்கள் தங்கியிருந்து பல தீங்குகளை ஏற்படுத்தும். இந்த காமா வகை கதிர்வீச்சுகளினால் தீங்குகளைத் தவிர சில நன்மைகளும் உண்டு. புற்று நோய் வைத்தியத்தில் இந்த காமா வகை கதிர் வீச்சுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டுகளில் இருந்து இந்த காமா வகை கதிர் வீச்சுகளே அதிகம் வெளிப்பட்டன. தவிர அந்த கதிர் வீச்சகளின் அளவும் மிக அதிகமாக இருந்தது. இதுவே அன்றைய நாசத்திற்குக் காரணம்.

கதிர் வீச்சுகளைக் கண்டு மனிதன் அஞ்சுவதற்கு முக்கிய காரணம் இவைகளினால் ஏற்படும் தீங்குகள் மட்டுமல்ல. இந்தக் கதிர் வீச்சுகள் மண்ணுக்குத் தெரியாது என்பதுதான் பயத்திற்கு முக்கிய காரணம். தெரியாத தேவதையை விடத் தெரிந்த சைத்தானே மேல் என்று சொல்வதற்குக் காரணம் இதுதான்.

தெரிந்தவைகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வது சுலபம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரியை எவ்வாறு எதிர் கொள்வது? இதுவே நாம் கதிர்வீச்சைக் கண்டு அஞ்சுவதற்குக் காரணம்.

கதிர் வீச்சுகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ஒரே வழி, அப்படிப்பட்ட கதிர் வீச்சுகள் இருக்கும் இடங்களுக்குப் போகாமல் இருப்பதுதான். அப்படிப்பட்ட இடங்களில் தகுந்த எச்சரிக்கை அறிவிப்புகள் இருக்கும். அதை பொருட்படுத்தாமல் நடந்து கொண்டால் அது அவரவர்கள் தலைவிதி.