கனாக்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனாக்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஜூலை, 2012

கனவுலகில் இந்திய ஜனாதிபதியாக நான்-பாகம் 2

முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.





போன பகுதியில் என்னுடைய பிரின்சபல் செக்ரடரி மயங்கி விழுந்துவிட்டார் என்று பார்த்தோம். பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவர் முகத்தில் தெளித்து மயக்கம் தெளியவைத்தோம். என்ன, செக்ரடரி, இப்படி காபரா படுத்தி விட்டீர்களே என்றேன். அது ஒண்ணுமில்லைங்க சார், நீங்க டிக்டேட் செய்த ஆர்டரைக் கேட்டதும் என்னையறியாமல் மயக்கம் வந்துவிட்டது என்றார்.

செக்ரடரி, இதுக்கே இப்படி மயக்கம் போட்டா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கே, தைரியமா இருங்க என்று சொல்லி அவரைக் கூப்பிட்டுக் கொண்டு நான் குடியிருக்கப்போகும் வீட்டைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினேன். காலை 10 மணிக்குப் புறப்பட்டவன் மதியம் 1 மணி ஆகியும் பாதியைக்கூடப் பார்த்து முடிக்கவில்லை. பசி வந்து விட்டது.

செக்ரடரி, பசிக்குதே, சாப்பிட்டுவிட்டு மீதியைப் பார்க்கலாம் என்றேன், அவருக்கும் பசி போலும். உடனே ஒத்துக்கொண்டார். இருவரும் டைனிங்க் ஹாலைத் தேடிப்போனோம். அதற்கே அரை மணி நேரம் ஆயிற்று. சாப்பிட உட்கார்ந்தோம். அரை டஜன் ஆட்கள் ஒவ்வொரு ஐட்டமாக மொத்தம் 64 வகை பதார்த்தங்கள் கொண்டுவந்து பரிமாறினார்கள்.

என்னய்யா, தினமும் இப்படித்தானா என்றேன். ஆமாம் என்றார்கள். அப்படியானால் இவ்வளவையும் சமைப்பதற்கு நிறைய ஆட்கள் வேண்டுமே என்றேன். செக்ரடரி, எஸ் சார், 24 சீப் குக்குகளும் 62 அசிஸ்டன்ட் குக்குகளும் இருக்கிறார்கள் என்றார். அப்போதே ஸ்டெனோவைக் கூப்பிட்டு, இனி சாப்பாட்டில் சாதம், ஒரு சாம்பார், ஒரு ரசம், ஒரு பொரியல், தயிர், ஊறுகாய் இவை மட்டும் இருந்தால் போதும். ஒரு தமிழ்நாட்டு சமையல்காரர், ஒரு வேலைக்காரி இரண்டு பேர் மட்டும் போதும். மற்றவர்களையெல்லாம் நல்ல ஓட்டலில் சேர்த்து விடவும் என்று ஆர்டர் டிக்டேட் செய்தேன்.

 சரி. இத்தனை குக்குகளும் சேர்ந்து எத்தனை பேருக்கு சமைப்பார்கள் என்று கேட்டேன். செக்ரடரி கொஞ்ச நேரம் கால்குலேட்டரை எடுத்து கணக்குப் போட்டுவிட்டு, சார், மொத்தம் 7245 பேருக்கு சமையல் செய்வார்கள் என்றார். எனக்கே தலை சுற்றி வந்து விட்டது. அவ்வளவு பேர் எங்கிருந்து வருவார்கள் என்று கேட்டேன்.

அவர் சொன்னது:    செக்ரடரிகள் 2492, செக்யூரிடிகள் 3246, மற்ற வேலைக்காரர்கள் 1507 ஆக ஒத்தம் 7245, என்று கண்க்கு சொன்னார். உங்களைத்தவிர மற்ற செக்ரடரிகளை ரிடையர் பண்ணியாச்சு. அதே மாதிரி, 10 செக்யூரிடி ஆட்களை மட்டும் வைத்துக்கொண்டு மீதி ஆட்களை போலீஸ் டிபார்ட்மென்டுக்கு அனுப்பிவிடவும். மற்ற வேலைக்காரர்களில், மொகல் கார்டனைப் பார்த்துக்கொள்ளவும், மற்ற செடிகொடிகளைப் பார்த்துக்கொள்ளவும் ஒரு 10 பேர் மட்டும் போதும். மிச்ச ஆட்களை எல்லாம் அவர்கள் ஊருக்குப் போக டிக்கட் வாங்கிக்கொடுத்து ரயில் ஏற்றி விடவும். இந்த இரண்டிற்கும் உடனடியாக ஆர்டர் டிக்டேட் செய்தேன்.

 சரி, நாளையில் இருந்து நான், என் மனைவி, சமையல் ஆட்கள் இரண்டு பேர் ஆக 4 பேருக்கு மட்டும் சமையல் செய்தால் போதும். நீரும் மற்றவர்களும் வீட்டில் இருந்து லஞ்ச் கட்டிக்கொண்டு வந்துவிடவும், என்று சொல்லி அதையும் ஆர்டர் போட உடனடியாக உத்திரவு கொடுத்தேன்.


சாப்பிட்டுவிட்டு திரும்பவும் வீட்டைப்பார்க்க கிளம்பினோம். ஒரு இடத்தில் ஏகப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. செக்ரடரியிடம் ஏன் கார் கம்பெனிக்கெல்லாம் இங்கு ஷோ ரூம் வைக்க இடம் கொடுத்திருக்கிறீர்கள்  என்று கேட்டேன். அவர், சார் இவையெல்லாம் ஷோரூம் கார்கள் இல்லை, எல்லாம் ஜனாதிபதியின் உபயோகத்திற்குண்டான கார்கள் என்றார். என்னய்யா, ஜனாதிபதி ஒருத்தர்தானே, அவர் ஒரு காரில் மட்டும்தானே போகமுடியும், அப்புறம் எதற்கு இவ்வளவு கார்கள் என்றேன்.


சார், வெளிநாட்டில் இருந்து முக்கியஸ்தர்கள் வந்தால் அவர்களுக்கு கார் தேவைப்படும். தவிர ஜனாதிபதி வெளியில் போகும்போது, ஒவ்வொரு தடவைக்கும் ஒவ்வொரு கார் உபயோகப்படுத்துவோம். செக்யூரிடி காரணமாக இப்படி நடைமுறை, என்றார். செக்யூரிடியைத் தூக்கி குப்பைத்தொட்டியில் போடுங்கள். வெளிநாட்டுக்காரனுங்களுக்காக ஒரு கார் இருக்கட்டும். எனக்கு ஒரு மாருதி ஆல்டோ போதும். நானே செல்ப் டிரைவிங்க் பண்ணிக் கொள்வேன். ஒரு ஆட்டோ ரிக் ஷா மட்டும் என்வீட்டு அம்மா, மற்றும் வேலைக்காரங்க வெளியில் போக வர இருக்கட்டும். அதுக்கு ஒரு டிரைவர், வெளிநாட்டுக்காரனுக்கு ஒரு டிரைவர் வைத்துக்கொண்டு மீதி டிரைவர்களை எல்லாம் தமிழ்நாடு ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று ஆர்டர் போட்டேன். அங்கதான் அவனுங்களுக்கு நல்லா தூங்கறதுக்கு வசதிகள் உண்டு என்றேன்.


அப்ப மற்ற கார்களையெல்லாம் என்ன செய்வது என்று செக்ரடரி கேட்டார். அவைகளையெல்லாம் அயல்நாட்டுத் தூதரகங்களுக்கு அவர்கள் கேட்ட விலைக்கு கொடுத்துவிடுங்கள் என்றேன்.


இப்படியாக ஒரு வழியாக ஜனாதிபதி வீட்டை ஒழுங்கு படுத்தினேன். 


மறு நாள் ஒரு மந்திரி சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று செக்ரடரியிடம் சென்னேன். அவர் தலையைச் சொறிந்தார். என்னய்யா விஷயம், தலையைச் சொறிகிறீர்களே என்றேன்.  சார், பிரதம மந்திரி இப்போதுதான் ஜிக்ஜிக்ஸ்தான் போனார். மற்ற மந்திரிகளில் பாதி பேர் பல வெளிநாடுகளுக்கு, பல ஜோலிகளுக்காகப் போய் விட்டார்கள். மீதிப்பேர் பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக அவரவர் ஊருக்குப் போயிருக்கிறார்கள் என்றார்.


அப்ப அவங்க டிபார்ட்மென்ட் வேலைகளையெல்லாம் யார் பார்த்துக்கொள்வார்கள் என்றேன். அந்தந்த டிபார்ட்மென்ட் செக்ரடரிகள் பார்த்துக்கொள்வார்கள் சார், என்றார். அப்படியானால் அவர்களையெல்லாம் நாளைக்கு இங்கே வரச்சொல்லுங்கள். கூடவே முப்படைகளின் தளபதிகளையும் வரச்சொல்லுங்கள். பல முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டும், என்றேன். 


அப்படியே எல்லா மந்திரிகளையும் தலைநகருக்கு உடனே வரச்சொல்லுங்கள். இப்போதே தகவல்கள் போகவேண்டும் என்றேன்.


இதற்குள் இரவு ஆகி விட்டதால் எல்லோரும் தூங்கப்போனோம்.