கல்யாண சீர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்யாண சீர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

கொங்கு கல்யாணத்தில் பட்டினிச்சீர் செய்தல்



கல்யாணத்தன்னிக்குஅதாவது தாலிகட்டறதுக்கு முன்னத்து நாள் காலைலிருந்துமாப்பிள்ளையும் பொண்ணும் விரதம்இருக்கோணும்விரதம்னா ஒண்ணும்சாப்புடக்கூடாதுஇது எதுக்குன்னாபொண்ணுமாப்பிள்ளை ரெண்டு பேரும் அன்னிக்கு காலைலஇருந்து மறுச்சு நாளு முகூர்த்தம் முடியற மட்டும் வயித்தைஆரோக்கியமா வச்சுக்கோணும்அதுக்காகத்தான்.

அன்னிக்குப் பொளுதோட பட்டினித்தண்ணி ஊத்திபட்டினிச்சீர்செய்வாங்கஎல்லா முக்கிய சொந்தக்காரங்களும் வந்தபொறவுபையனைக்கூட்டிட்டு வந்து வாசல்ல ஒருமுக்காலியப் போட்டு அதுல உக்கார வைப்பாங்கஎந்த சீருசெய்யறதா இருந்தாலும் சீர்க்காரிதான் போய் பையனையோபொண்ணையோ கூட்டிட்டு வரணுமுங்கஅப்படி கூட்டிட்டுவர்றப்போ கையில தண்ணியோட ஒரு சொம்புஇருக்கணுமுங்க.

வாசல்ல முக்காலிலமாப்பிள்ளைப் பையனஉக்கார வச்சு.மொதல்லே மூணுதடவை தண்ணிசுத்திப்போடோணுமுங்க.தண்ணியெ சருகுச்சட்டின்னு ஒரு பாத்திரம் இருக்குமுங்க.அதுலதான் தண்ணிய கைல எடுத்து மூணு தரம் பையனைச்சுத்திப் போடணுமுங்கபொறவுஅந்தச் சருகுச் சட்டியிலபுதுசாச் சமைச்ச சோறு எடுத்துட்டுஅந்தச் சோத்தில ஒரு கைஎடுத்துட்டு பையன் தலையச்சுத்தி கீற போடணுங்கஇப்படிமூணு தபா போடணுங்கஅப்பறம் அந்த சருகுச் சட்டியைநல்லாக்கழுவி விட்டு இன்னும் கொஞ்சம் சோறுஎடுத்துக்கோணுமுங்கஇப்ப அந்த சோத்துக்குள்ள ஒருதணலைப்போட்டு சோத்தால மூடணுங்கபொறவு அந்தச்சோத்துல ஒரு கை எடுத்து பையன் தலைய சுத்தி கீளபோட்டுனனுங்கஇப்படி மூணு தபா செய்யோணுங்க.

அப்பறம் இன்னும் கொஞ்சம் சோறு எடுத்துட்டு அதுக்குள்ளகொஞ்சம் மஞ்சப்பொடியும் சுண்ணாம்பும் போட்டுகலக்கோணுங்கசோறு பூராவும் செகப்பா ஆயிடுமுங்கஅந்தச்சோத்தை கொஞ்சம் எடுத்து பையன் தலையைச்சுத்தி கீழபோட்டுடனுங்கஇப்படி மூணு தபா பண்ணோனுங்க.இதெல்லாம் பையனுக்கு ஒரு விதத்துல திருஷ்டிகளிக்கறதுக்குத்தானுங்க.

அப்புறம் பக்கத்துல குண்டாவுல தண்ணி கொண்டுவந்துவச்சிருப்பாங்கஅந்தக்காலத்தில பச்சத்தண்ணிதான்வைப்பாங்கஇப்போ எல்லாம் வெந்தண்ணி வைக்கிறாங்க.அந்தத் தண்ணியெ சருகுச்சட்டியில எடுத்து பையன் தலைலஊத்தி குளிப்பாட்டுவாங்கமொறைப் புள்ளைங்க பக்கத்துலநின்னு மஞ்சத்தண்ணி கலக்கு ஊத்துவாங்கநாசிவன்பக்கத்தில இருந்து பையனை நல்லா குளிப்பாட்டி உடுவானுங்க.

அப்பறம் ஒடம்ப எல்லாம் துண்டால தொடச்சுட்டு புது துணியமாமன் கொடுக்க மாப்புள்ளப் பையன் வாங்கீக்குவானுங்க.அப்பறம் மறைவாப்போயி புதுத்துணிகளைக் கட்டீட்டுவருவானுங்கஅப்பறம் கூட்டீட்டுப்போயி மண்டபத்துல சேருபோட்டு உக்கார வைப்பாங்கசேருக்கு முன்னால புள்ளாருபுடிச்சு வச்சுசாமி கும்பிடறதுக்கு வேண்டிய சாமானெல்லாம்வச்சிருப்பாங்க.
பையனுக்கு நெத்தில திண்ணீருசந்தனப்பொட்டுசெகப்புஎல்லாம் வச்சுதலைக்கு தலைப்பா கட்டி உடுவாங்க.இதுக்குத்தான் பேட்டா சீலைன்னு ஒண்ணு ஜவுளி வாங்கறஅன்னிக்கு வாங்கறதுங்கஅப்பறம் புள்ளாருக்கு சாம்பிராணிகாட்டிகப்பூரம் பத்திவச்சு தீபாராதனை காட்டி சாமிகும்பிடுவாங்கஎல்லாரும் சாமி கும்பிட்டுக்கிட்டு திண்ணீருவச்சுக்குவாங்கமாப்பிள்ளைப் பையனும் கும்பிட்டுக்குவானுங்க.

அப்பறம்தான் முக்கியமான வேலை இருக்குதுங்கமாப்புள்ளப்பையன் எல்லார்கிட்டவும் கும்பிடு வாங்கோணுமுங்க.முக்கியமா மாமங்காரங்கஅப்பறம் பெரியவங்கஎல்லாத்தையும் கலத்தொட்டு கும்பிடுவானுங்கஅப்படிக்கும்பிடறவங்க எல்லாம் பணம் வச்சுக்கொடுக்கோணுமுங்க.தாய்மாமன்தான் நெறயக் கொடுக்கோணுமுங்கஇப்படிகொடுக்கற பணத்தையெல்லாம் முய்க்கணக்கு நோட்டுல எழுதிவைக்கோணுமுங்கநாளைக்கு அவங்க ஊட்டுல ஒருவிசேஷம் நடந்தா இந்த முய்யை திருப்பி வைக்கோணுமுங்க.வாங்கின முய்யத் திருப்பி வைக்கலைன்னாஅதசொல்லிக்காட்டுவாங்கஅது ரொம்ப கேவலமுங்கசோத்துக்குஇல்லைன்னாலும் வாங்கின முய்யைச் செலுத்தீடணுமுங்க.

அப்றம் பொண்ணுப்புள்ளக்கும் இதே மாதிரி பட்டினிச்சீருசெய்வாங்கஒரே வித்தியாசம் என்னன்னாபுள்ளக்கி தண்ணிவாக்கமாட்டாங்கபுதுச்சாலையெல்லாம் மொதல்லேயே கட்டிவாசல்ல கூட்டீட்டு வந்து முக்காலீல உக்கார வைப்பாங்க.மத்த சாங்கியத்தையெல்லாம் செஞ்சுகுளிப்பாட்டறதுக்குபதிலாதண்ணிய சும்மா தலையச் சுத்திப்போட்டுட்டுகூட்டீட்டுப்போயிடுவாங்கஅப்பறம் சாமி குப்பிட்டுட்டுமுய்வாங்குவாங்க.


இந்த சீர் நடக்கறப்பத்தான் பையனுக்கும் பொண்ணுக்கும் கால்ல மிஞ்சி போட்டு உடுவாங்க.

அவ்வளவுதானுங்க பட்டினிச்சீரு.

சனி, 6 நவம்பர், 2010

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகள்.


அன்புள்ள வாசகப்பெருமக்களுக்கு,

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகளைப் பற்றி என்னுடைய இன்னொரு பிளாக்கில் (மசக்கவுண்டன் கிறுக்கல்கள்) எழுதி வருவது நிறையப் பேருக்குத் தெரியும். என்னை ஜாதி வெறி பிடித்தவனென்று தூற்றினாலும் பரவாயில்லை என்றுதான் இந்தப்பதிவை எழுதுகிறேன். காரணம், கவுண்டர்களின் கல்யாணங்களில் தாலி கட்டி முடித்தபிறகு "குடிமகன்" அதாவது நாவிதர், மங்கல வாழ்த்து பாட்டு சொல்வது முக்கியமானது.

பலர் கல்யாணத்தின் போது அவசரத்தின் காரணமாக இந்த மங்கல வாழ்த்தை முழுமையாகக் கேட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பாட்டு கம்பர் எழுதிக்கொடுத்ததாக நம்பப்படுகிறது. கவுண்டர்களின் கல்யாண முறைகளைப்பற்றிய முழு விவரங்களும் இந்தப்பாட்டில் இருக்கிறது.

எல்லோரும் இந்தப்பாட்டை முழுமையாக கேட்டு பயன் பெறும் வகையில், பாட்டின் வசனத்தையும் பாட்டாகப் பாடினதையும் கீழே கொடுத்திருக்கும் பதிவில் போட்டிருக்கிறேன்.
யாவரும் கேட்டு இன்புற்று, தங்கள் கருத்துகளை மறக்காமல் பின்னூட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மங்கல வாழ்த்து பாடல் – வசனமும் பாடலும்

http://masakavunden.blogspot.com/2010/11/blog-post_05.html

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.