குணவக்கிரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குணவக்கிரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூன், 2011

சாருவின் உரையாடல்கள்

சாருவின் உரையாடல்கள் என்று பல பதிவுகளில், பல உரையாடல்கள் (படிக்கவே கூசும்படியானவை), வெளிவந்துள்ளன. அவைகள் உண்மையாக இருக்குமானால் என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் இந்த அளவிற்கு செயல்பட்ட அந்தப் பெண்ணிற்கும் என் கண்டனத்தை உரித்தாக்குகிறேன். ஒரு பெண் இந்த அளவிற்குப் போயிருக்கக் கூடாது.

செவ்வாய், 24 மே, 2011

மனித வாழ்வில் வக்கிரங்கள்



நடைமுறை வாழ்வில் பலதரப்பட்ட மனித இயல்புகளைப் பார்க்கிறோம். பெரும்பாலானவை நடைமுறை பண்புகளுக்கும் நாகரீகத்திற்கும் ஒத்துப் போகின்றன. சில சமயங்களில் மனித மனங்களின் வக்கிரங்களும் வெளிப்படுகின்றன. ஆனால் அதை நாம் வெளிச்சம் போட்டு விளம்பரம் செய்வதில்லை.

உண்மைதான் என்றாலும், எல்லா உண்மைகளையும், எல்லா இடங்களிலும் சொல்ல முடியாது. சொல்லத் தேவையுமில்லை. உண்மைகளையும் மறைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. இது ஒரு வகை நாகரிகம் அல்லது ஒரு வகை பண்பு என்று கூறலாம்.

பத்திரிக்கைகளில் பல செய்திகள் போடுகிறார்கள். சில செய்திகளைப் பார்த்துவிட்டு அடுத்த செய்திக்குப் போய்விடவேண்டும். அந்த செய்திகளைப் பற்றி விளம்பரப்படுத்த வேண்டியதில்லை. அதுவும் பதிவுலகம் மூலமாக இதைச் செய்ய வேண்டியதில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 


ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

ஆசிரியர்களின் ஒரு வருந்தத்தக்க குணம்!

பெரும்பாலான ஆசிரியர்களுக்கு உண்டான ஒரு கெட்ட குணத்தை எவ்வளவு பேர் அறிவீர்கள் என்று எனக்குத்தெரியவில்லை. அது உண்மையிலேயே கெட்ட குணம்தானா என்றும் நிச்சயமாக சொல்வதற்கில்லை. இருந்தாலும் என் மனச்சாட்சி என்னை மிகவும் நச்சரிப்பதால் இந்த உணர்வை வெளியேற்றியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளேன். அதற்குத்தான் இந்தப்பதிவு.

நான் ஏறக்குறைய ஒரு இருபது ஆண்டுகள் விவசாய இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். என்னுடைய முப்பதாவது வயதில் இந்த ஆசிரியவேலை ஆரம்பித்தது.  என்னுடைய இளம் வயதில் ஒருவன் ஒரு வேலையை நல்ல முறையில் செய்து முடித்தான் என்றால், அவனுடைய பெற்றோர்களோ, ஆசிரியர்களோ அவனைப் பெரிதாகப் பாராட்ட மாட்டார்கள். அவன் செய்த காரியத்தில் குறை ஒன்றும் சொல்லாமல் இருந்தாலே அதைப்பாராட்டு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் எவ்வளவு நல்ல மார்க்கு வாங்கியிருந்தாலும், "சரி, அடுத்த தேர்வில் இன்னும் அதிக மார்க்குகள் வாங்கு" என்றுதான் சொல்வார்களே தவிர அந்த மார்க்கைப் பாராட்ட மாட்டார்கள்.

இந்த மாதிரி ஏன் பெரியவர்கள் அன்று நடந்துகொண்டார்கள் என்றால், ஒருவனைப் பாராட்டிவிட்டால் அவனுக்கு தலைக்கனம் வந்துவிடும். பிறகு அவன் மெத்தனமாக நடந்து கொள்வான், அது அவன் முன்னேற்றத்தை தடுக்கும் என்பது அன்றைய காலத்து கருத்து. ஆகவே பாராட்டு ஒருவனின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்து விடும் என்பதினால் ஒருவரும் பாராட்டை சம்பந்தப்பட்டவனின் முன்பாகச் சொல்லமாட்டார்கள். அவனில்லாதபோது அடுத்தவர்களிடம் அவனைப்பற்றி உயர்வாகப் பேசுவார்கள். அக்கம்பக்கத்தவர் அவனைப்புகழ்ந்தாலும் கூட அதை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் என்ன உலகத்தில் யாரும் செய்யாததைச் செய்து விட்டான் எட்றுதான் சொல்வார்களே தவிர அந்த புகழ்வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள் அந்தக்காலத்தில் கிடையாது.

வயதானவர்களும் அப்படித்தான் யார் என்ன செய்தாலும் அதில் குறைதான் கண்டுபிடிப்பார்களே ஒழிய ஒரு வார்த்தை கூட நன்றாகச் செய்தாய் என்று வராது. அதனாலேயே இளைஞர்கள் யாரும் வயசானவர்களை மதித்து ஒன்றும் சொலவதில்லை. அப்போதும் என்னை யாரும் மதித்து ஒன்றையும் சொல்வதில்லை என்று புலம்புவார்களே தவிர அதற்கு என்ன காரணம் என்று யோசிக்கமாட்டார்கள்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் எனக்கும் இந்த வியாதி இருக்கிறது.  குறிப்பாக ஒரு நல்ல பதிவைப்பார்த்தால் "நல்ல பதிவு" என்று ஒரு டெம்பிளேட் கமென்ட் மட்டும்தான் போட மனது வருகின்றதே ஒழிய, அதை நாலு வார்த்தைகளால் பாராட்டுவோமே என்கிற மனது வரமாட்டேன் என்கிறது. நோய் இருக்கிறது என்பது தெரிந்துவிட்டபடியால் அதற்கு வைத்தியம் செய்வது சுலபம்தானே. வைத்தியம் ஆரம்பித்து விட்டேன்.