சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 மார்ச், 2015

இ.பி.கோ. செக்ஷன்கள் தெரியுமா?

                                    Image result for வரதட்சிணைக் கொடுமை
இ.பி.கோ. 406 செக்ஷன் அப்படீன்னா என்னன்னு தெரியுமா? தெரியாதவரைக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இதுதான் கணவன்களைப் பழிவாங்க மனைவிகள் பிரயோகிக்கும் ஆயுதம். என்னை, என் புருஷன் வரதட்சினைக் கொடுமை செய்கிறான் என்று போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பெண், புகார் கொடுத்தால் போதும். உங்களை இந்த இ.பி.கோ. 406 செக்ஷன் படி குற்றம் சாட்டி கம்பி எண்ண விட்டு விடுவார்கள்.

அதே மாதிரி வருமான வரிக்காரர்களும் பல செக்ஷன்கள் வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது செக்ஷன் 245 ம் 143 ம் ஆகும். அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கேளவிப்பட்டிருப்பீர்கள். இந்த வருமான வரிக்காரர்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். நின்றுதான் கொல்வார்கள்.

செக்ஷன் 245 என்பது கொலை செய்வதற்கான முன் அறிவிப்பு. செக்ஷன் 143 உங்களைக் கொலை செய்யப் போகிறோம் என்று சொல்லும் இறுதி அறிவிப்பு. வருமான வரிக்காரர்களுக்கும் ஆடிட்டர்களுக்கும் ஒரு எழுதாத உடன்படிக்கை இருக்கிறது. எப்படி நீதி மன்றத்தில் எதுவாக இருந்தாலும் ஒரு வக்கீல் மூலமாகத்தான் நீங்கள் உங்கள் வாதத்தைச் சொல்ல முடியுமோ அதே மாதிரி வருமான வரி இலாக்காவிலும் நீங்கள் எதைச் சொல்ல வேண்டுமென்றாலும் ஒரு ஆடிட்டர் மூலமாகத்தான் சொல்ல முடியும்.

உங்களுக்கு எத்தனை சட்டம் தெரிந்திருந்தாலும் சரி, நீங்கள் நேரில் போய் உங்கள் சமாச்சாரத்தைச் சொன்னால், நீங்கள் எதற்கு சார் அலைகிறீர்கள், ஒரு ஆடிட்டர் கிட்ட இதை விட்டுடுங்கோ, அவர் கவனிச்சுப்பார், என்பார்கள்.

நான் சமீபத்தில் இந்த 245 =143 செக்ஷன் விவகாரத்தில் சிக்கிக்கொண்டேன். எல்லாம் என்னுடைய கொழுப்பினால்தான். எப்படியோ எனக்கு கொலைக்கான உத்திரவு வந்து விட்டது. இது மூன்று வருடத்திற்கு முன்பு நான் சமர்ப்பித்த வருமானவரி கணக்கு சம்பந்தப்பட்டது.

வருமான வரி கட்டுவதில் ஒரு நுட்பம் பலரும் அறியாதிருக்கலாம். உங்கள் வருட வரி 10000 ரூபாய்க்கு அதிகமாக வரும் போலிருந்தால் அதை தவணை முறையில், செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மாதங்களில் கட்டவேண்டும். அப்படிக் கட்டாவிட்டால் அதற்கு அபராத வட்டி கட்டவேண்டும்.

மாதாமாதம் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த வரி மாதாமாதம் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது. என்னை மாதிரி ஓய்வு பெற்றவர்கள் தாங்களாகவேதான் இந்த வரியைக் கட்டவேண்டும். நான் 10000 க்கு அதிகமான வரியை ஒரே தவணையில் கட்டினதால் அதற்கு அபராத வட்டி போட்டு 143 நோட்டீஸ் வந்து விட்டது. தொலைகிறது, கட்டி விடலாம் என்று கட்டி விட்டேன்.

அப்புறம் என்ன செய்யவேண்டும் என்றால் அதுதான் ஒரு குழப்பமான சமாச்சாரமாக இருக்கிறது. கூகுளில் தேடினால் ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். சரி, சாமியிடமே போயிடுவோம் என்று வருமானவரி ஆபீசுக்கே போனபோதுதான் இந்தக் கூட்டணி விவகாரம் தெரிந்தது.

நானும் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தன் அல்லவா? அவ்வளவு சீக்கிரம் சர்க்கார் தர்பாரை விட்டு விடுவேனா என்ன? சர்க்கார் நடைமுறையில் ஒரு சூட்சுமம் என்னவென்றால் வாய் வார்த்தையாக என்ன பேசினாலும் பிந்நாளில் அது செல்லுபடியாகாது. நான் அப்படிச் சொல்லவேயில்லை என்று சாதித்து விடுவார்கள்.

ஆனால் எந்த சமாச்சாரமானாலும் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்து விட்டால் அது தன் பாட்டுக்கு தன் வேலையைச் செய்யும். ஆனால் அந்தக் காகிதம் கொடுத்ததற்கு நீங்கள் அத்தாட்சி வாங்கியிருக்கவேண்டும். இந்த நடைமுறையை நான் நன்கு அறிவேன்.

அதனால் நான் ஒரு கடிதம் எழுதி, நீங்கள் கேட்ட நிலுவையைக் கட்டிவிட்டேன், அதனால் என்னுடைய கொலைத் தண்டனையை ரத்து செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதி, அதனுடன் நான் பணம் கட்டின அத்தாட்சியுடன் வருமானவரி ஆபீசில் கொடுத்து விட்டேன்.

ஆனாலும் வருமானவரி ஆபீசைச் சும்மா குறை சொல்லக்கூடாது. என்னுடைய கடிதத்தை வாங்கிக்கொண்டதாக ஒப்புதல் கொடுத்து விட்டார்கள். ஆனாலும் என்னுடைய கொலை நோட்டீஸ் சமாச்சாரம் இத்துடன் முடியுமா அல்லது ஒரு ஆடிட்டருக்கு கப்பம் கட்டித்தான் ஆக  வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.