சனி திசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி திசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஜூன், 2013

நீங்கள் குடி பெயர்ந்தீர்களா, சனி உங்களைப் பிடித்துவிட்டான்.


ஏழரை நாட்டு சனி என்று கேள்விப்படாதவர்கள் இருக்கமாட்டார்கள். இந்தச் சனி பிடித்தால் ஒருவனைப் படாதபாடு படுத்தும் என்று கேள்வி. நமது புராண நாயகன் நளச்சக்கரவர்த்தியை சனி எப்படிப் பிடித்தான் என்று அறிந்திருப்பீர்கள். ஒரு நாள் அவன் கைகால் கழுவும்போது குதிகாலில் ஒரு இடத்தில் கால் நனையவில்லை. சனி, நளனை அது வழியாகப் பிடித்தான் என்பது புராணக் கதை.

இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் துர்ப்பாக்கிய வசமாக வீடு மாற்ற நேர்ந்தால் அப்போது உங்களை சனி பிடித்துக்கொள்ளுவான் என்பது மட்டும் தெரியும். வேறு ஊருக்குப் போய்விட்டீர்கள் என்றால் உங்களை ரெட்டைச் சனி பிடித்துக்கொண்டான் என்று அர்த்தம்.

நீங்கள் இவ்வாறு வீடு மாற்றியவுடன் செய்யவேண்டியவை:

1. ரேஷன் கார்டை புது விலாசத்திற்கு மாற்றவேண்டும்.

2. கேஸ் கனெக்ஷனை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

3. தபால் ஆபீசில் உங்கள் தபால்களை புது விலாசத்திற்கு அனுப்பச்சொல்லி கடிதம் கொடுக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு உங்கள் கடிதங்களை புது விலாசத்திற்கு அனுப்புவார்களா என்பது வேறு விஷயம்.

4. பேங்க் அக்கவுன்டுகளை உங்கள் புது வீட்டிற்குப் பக்த்தில் உள்ள கிளைக்கு மாற்றவேண்டும்.

5. உங்கள் டிரைவிங் லைசன்சில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும்.

6. உங்களை வாகன ரிஜிஸ்ட்ரேஷன் அட்டையில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும். அந்த வாகனத்திற்குண்டான இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டிலும் விலாசத்தை மாற்றவேண்டும்.

7. உங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஸ்கூல் மாற்றவேண்டும்.

8. லேண்ட் லைன் டெலிபான் வைத்திருந்தால் அதை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

இன்னும் விட்டுப் போனவை இருக்கலாம். எனக்கு நினைவு வந்தவரை குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பதிவு எழுதவேண்டிய அளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன. அப்படி எழுதினால் உங்களில் பலரை, தற்கொலை செய்து கொள்ளத்தூண்டிய பாவம் என்னை வந்து சேரும் என்ற பயத்தினால் எழுதாமல் விடுகிறேன்.