சளி பிடித்தல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சளி பிடித்தல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 பிப்ரவரி, 2013

மூக்கு - ஒரு வாதனை

வாதிப்பது = வாதனை. மூக்கு நம்மை எப்படி வாதிக்கும் அல்லது நாம் எப்படி அதை வாதிக்கிறோம் என்பது ஒரு பெரிய சமாசாரம்.

"மூக்குள்ள வரைக்கும் சளி இருக்கும்" என்பது பழமொழி. "சளிப் பிடித்த மூக்குடன் வெளியில் போகாதே" என்பது புதுமொழி.

தெனாலிராமன் காளியுடன் செய்த வேடிக்கை ஞாபகம் இருக்கும். மனிதர்களுக்குள்ள ஒரு மூக்கில் சளி பிடித்தாலே எங்களால் சமாளிக்க முடியவில்லையே. காளிக்கு இருக்கும் ஆயிரம் மூக்குகளிலும் சளி பிடித்தால் இரண்டு கைகள் எப்படிப் போதும் என்பதுதான் தெனாலிராமனின் கேள்வி.

சளியும் தும்மலும் சாகும் வரைக்கும் என்று சொல்வார்கள். சில மாவட்டங்களில் இதை "தடுமன்" என்றும் சொல்வார்கள். எப்படி சொன்னாலும் சளி பிடித்தால் மூக்கை அடிக்கடி சிந்த வேண்டி வரும். நீங்கள் வீட்டில் இருக்கும்போது இதை எப்படி செய்தாலும் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் பொது இடங்களில் கொஞ்சம் நாகரிகத்துடன் இருக்கவேண்டும்.

நாலுபேர் மத்தியில் இருக்கும்போது மூக்கை சிந்த வேண்டி வந்தால், அவர்களை விட்டு விலகிச்சென்று, உங்கள் காரியத்தை முடித்துவிட்டு, பிறகு அவர்களிடம் வரவேண்டும். அங்கேயே இதைச்செய்வது காட்டுமிராண்டித்தனம். அதேபோல் உணவு விடுதியில் சாப்பிடும்போதும் இதே முறைதான்.

சளி பிடித்தால் கூடவே தும்மலும் வரும். தும்மல் வந்தால், அந்த இடத்தை விட்டு விலகி, தும்மிவிட்டு, பிறகு அங்கு வருவதுதான் நாகரிகம். முடியாத பட்சத்தில் முகத்தை ஒரு துண்டு அல்லது கர்சீப்பால் நன்கு மூடிக்கொண்டு தும்மலாம். அப்படி இல்லாமல் எல்லோர் மீதும் ஸ்ப்ரே செய்வது நம் வழக்கம். உங்களுக்கு எது சௌகரியமோ அப்படி செய்து கொள்ளவும்.

மூக்குக்கும் காதுக்கும் ஒரு ட்யூப் கனெக்ஷன் இருக்கிறது. இது எவ்வளவு பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. மூக்கை மிகவும் பலமாக சிந்தினால் காது ஜவ்வு கிழிந்து போய்விடும் அபாயம் உள்ளது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

பொதுவாக ஒரு டிப்ஸ். சளி பிடித்தால் பேசாமல் வீட்டில் இருந்துகொள்வது உத்தமம்.