சூதாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூதாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சூதாட்டம் சட்டபூர்வமானதா?



சூதாட்டம் என்றால் என்ன? நாம் வெற்றியடைவோமா இல்லையா என்ற நிச்சயம் இல்லாத நிலையில் ஒரு பந்தயத்தில் பணம் கட்டி ஈடுபடுவது. இதில் பல மாதிரிகள் இருக்கின்றன. குதிரைப் பந்தயம், லாட்டரிச்சீட்டு, சீட்டாட்டம், கோழிச்சண்டை இப்படி பல வகைகளில் சூதாட்டம் நடைபெறுகின்றன. இவைகளில் சில சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளன. ஆகையால் அவைகளில் ஈடுபடுபவர்கள் திருட்டுத்தனமாக செயல்பட வேண்டியிருக்கிறது.

ஏன் சில சூதாட்டங்களுக்கு அனுமதியும் மற்றவைகளுக்கு மறுப்பும் இருக்கிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஏன் மக்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் பலரும் சொல்லும் பதில்அதில் ஒரு போதை இருக்கிறதுஎன்பார்கள். அது ஓரளவு உண்மைதான். சூதாடிப் பழகியவனுக்கு அது இல்லாமல் இருப்பது கடினம்.
சூது என்று வந்தாலே அதில் லாபம் நஷ்டம் இரண்டும் இருப்பது இயற்கை. லாபத்தைவிட நஷ்டம் அடைந்தோரின் எண்ணிக்கைதான் மிக அதிகம். (பார்க்க: மகாபாரதம்) அதனால்தான் பழங்காலம் முதற்கொண்டு சூதை வெறுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மனித மனம் எது விலக்கப்பட்டிருக்கிறதோ அதன் மீதுதான் அதிக விருப்பம் கொள்கிறது.

பணம் வைத்து சீட்டு விளையாடுதல் உலகம் முழுவதும் நடக்கிறது. இதை சூது என்கிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் பல சூதாட்டங்கள் சட்டபூர்வமாக நடக்கின்றன. ஆனால் அதை சூது என்று யாரும் சொல்வதில்லை.

பங்கு வர்த்தகம் என்று ஒன்று உலகில் இருக்கிறது. எத்தனை பேருக்கு அதில் அனுபவம் உண்டு என்பது தெரியவில்லை. அந்த வர்த்தகத்தில் நிறையப் பேர் பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்ற செய்தி பல பத்திரிக்கைகளில், புத்தகங்களில் இருக்கிறது. இதை நம்பி இந்த பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் பலர் ஓட்டாண்டி ஆனதைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பங்கு வர்த்தகம் இந்த மாதிரி நம்பினவர்களைக் கைவிட்டுவிடும் என்று கூறி இதற்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தார்கள். யார்? உங்களிடம் பணம் உள்ளது, அது ஒரே இடத்தில் இருந்தால் துருப் பிடித்து விடும், ஆகவே அதை அடிக்கடி இடம் மாற்றி வைக்கவேண்டும், என்று ஆசை வார்த்தை கூறும் கில்லாடிகள் பலர் இந்த உலகில் உண்டு. இடம் மாற்றி வைக்கவேண்டும் என்பதின் அர்த்தம் என்னவென்றால், உங்களிடம் உள்ள பணம் எங்களிடம் வரவேண்டும் என்பதுதான்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதுதான் பரஸ்பர நிதி என்று சொல்லப்படும் மியூட்சுவல் பண்ட். இது ஒரு பக்காவான சூதாட்டம் என்று பலர் உணர்வதில்லை. இதை அரசு சட்டபூர்வமாக ஆக்கி இருக்கிறது. பல பேங்குகள், மற்றும் பிரபல நிதி நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.
இதை நம்பி பணம் போட்டு நஷ்டமடைந்தவர்கள் பலர். ஏன் நஷ்டம் வருகிறது? பேங்கில் சேவிங்க் அக்கவுன்டில் வைத்திருந்தாலும் நாலு பர்சன்ட் வட்டி வருமே, இதில் ஏன் நஷ்டம் வரவேண்டும். இதன் காரணங்களைக் கூறினால் என்னை குண்டர் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளும் வாய்ப்பு இருப்பதால் தவிர்க்கிறேன். எனக்கு இப்போது இருக்கும் உடல்நிலையில் ஜெயில் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது.

ஜனங்களே, மனதை சபலத்திற்கு ஆளாக்காதீர்கள்.