செயல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஏப்ரல், 2011

செயல்களும் விளைவுகளும்



கடமைகள், தேவைகள், ஆசைகள் இவற்றை நிறைவேற்றுவதற்கான எண்ணங்கள் மனதில் தோன்றி செயல்களாக வெளிப்படுகின்றன. இச்செயல்களின் விளைவுகளே மனிதனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றன.
 
நாம் செய்யும் செயல்களுக்கு நாம் எதிர்பார்க்கும் விளைவுகளே எப்போதும் ஏற்படுவதில்லை. விளைவுகள் நாம் எதிர்பார்த்தபடி இருந்தால் இன்பமும் எதிர்மறையாக இருந்தால் துன்பமும் அடைகிறோம். இதைத் தவிர்க்கவே பகவான் கீதையில் சொன்னார்: “உன் கடமையைச் செய். விளைவுகளை என்னிடம் விட்டுவிடு” ஆனால் அவ்வாறு விளைவுகளை விருப்பு வெறுப்பில்லாமல், பகவத்பிரசாதம் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் சாதாரண மக்களுக்கு இல்லை.

மேலும் இந்தக் காரண-காரிய-விளைவுத் தொடர்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த வேறுபாடுகளுக்கு யார் காரணம்? இந்தக்கேள்விக்கு விடை தெரிந்தவனே ஞானி.