திட்டங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திட்டங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜூலை, 2012

இந்தியா தலைகீழா மாறுது பாருங்க.

முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.


மறுநாள் கூட்டத்திற்கு தன்னுடைய புரொக்ராம்களை ரத்து செய்து விட்டு பிரதம மந்திரி வந்து விட்டார். அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட திட்டங்களை அறிவித்தேன்.
நவீனத்திட்டங்கள்.
   1.   இன்று முதல் இந்தியாவில் ஜாதி, மத பாகுபாடு இல்லை. தனிப்பட்ட நபர்கள் தங்கள் ஜாதியையும் மதங்களையும் அனுசரித்துக்கொள்ள அரசு எந்தத் தடையும் விதிக்காது. ஆனால் ஜாதி, மதங்களின் பெயரால் எந்த வித்தியாசமும் காண்பிக்கப்படாது.
   2.   இன்று முதல் எல்லா இலவசங்களும், மான்யங்களும், நல வாழ்வுத் திட்டம் என்ற பெயரில் கொடுக்கப்படும் எல்லா சலுகைகளும் ரத்தாகின்றன.
   3.   அனைத்து சாமியார்களின் பதவிகளும், சொத்துக்களும் அரசுடமை ஆகின்றன. அந்த மடங்களெல்லாம் கல்விச்சாலைகளாக மாற்றியமைக்கப்படும். அந்தந்த சாமியார்கள் அந்தக் கல்வி நிலையங்களின் தலைவர்களாக செயல்படுவார்கள். அப்படி சொத்து ஏதும் இல்லாத சாமியார்கள் இந்தக் கல்வி நிலையங்களில் அவரவர்கள் தகுதிகளுக்கு ஏற்ப வேலை செய்வார்கள்.
   4.   எந்த சாமியாருக்காவது ஏற்கனவே குடும்பம் இருந்தால் அவர்களையும் இந்த நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.
   5. குடும்பம் இல்லாத சாமியார்கள் தேவைப்பட்டால் குடும்பம் உண்டாக்கிக் கொள்ளலாம்.
   6.   கோயில்களின் சொத்துக்கும் இதே மாதிரி செய்யப்படும்.
   7.   லஞ்சம் ஒழிக்கப்படுகிறது. இதுவரை லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்துக்கள், பணங்கள் அனைத்தும் அரசுக்கு சேரும்.
   8.   ஸ்விஸ் பேங்கில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் பணம் முழுவதையும் எடுத்து, அயல் நாட்டினரிடம் இந்தியா வாங்கிய கடன்களையெல்லாம் தீர்க்கப்படும்.
   9.   இனிமேல் லஞ்சம் வாங்கினாலோ, கொடுத்தாலோ, அதற்கு கேபிடல் தண்டனை விதிக்கப்படும்.
  10. இந்தியாவில் உள்ள அனைத்து பிச்சைக்காரர்களும் நாடு கடத்தப்படுவார்கள்.
  11. எல்லாவிதமான ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பஸ் டே, ரேக்கிங்க் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.

சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆவன செய்வார்கள். எந்தவிதமான சால்ஜாப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படாது. தவறும் அதிகாரிகளுக்கு "ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்" கொடுக்கப்படும். இந்த திட்டங்களை தங்களால் முடியாது என்று கருதும் அதிகாரிகள் தங்களது ராஜீனாமா கடிதங்களை வெளியில் இருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு அப்படியே வீட்டுக்குப்போகலாம். அவர்கள் வீட்டுக்குப்போக அரசு வாகனத்தை உபயோகப்படுத்தக்கூடாது. அப்படி ராஜீனாமா கொடுத்துவிட்டுப் போகும் அதிகாரிகள் அரசு வீடுகளில் குடியிருந்தால் இன்று இரவிற்குள் காலி செய்து விடவேண்டும்.

அடுத்த கூட்டம் 66ஆறு மாதம் கழித்து கூட்டப்படும்.