தேவலோக டூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவலோக டூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 மார்ச், 2016

13. இமிக்ரேஷன் விசா

முதல் ட்ரிப்பில் போய் வந்த அனைத்துப் பதிவர்களும் தங்கள் தங்கள் தளங்களில் தேவலோகத்தை வானளாவப் புகழ்ந்திருந்தார்கள். அதைப் படித்த மற்ற பதிவர்கள் தங்களை ஏன் கூப்பிடவில்லை என்று கோபமாக பதிவுகள் போட்டார்கள். இப்படியாக ஒரு வாரம் முழுவதும் தேவலோகத்தைப் பற்றிய பதிவுகள்தான் இடப்பட்டன.  சினிமா விமர்சனப் பதிவுகள் காணாமல் போய்விட்டன.

ஓரிரு நாளில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஜனங்கள் வரத்தொடங்கினார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைத்து வரப்பட்டு என் ரூமுக்கு கொண்டுவரப்பட்டார்கள். அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு, எனக்கு திருப்தியானவுடன், அவர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். பிறகு அவர்களை பேங்குக்கு சென்று பணத்தைக் கட்டி விட்டு அந்த செலானைக் கொண்டுவரச்சொன்னேன்.

அவர்கள் பணம் கட்டி வந்தவுடன் செலானை வாங்கி அவர்களுடைய ஒப்பந்தத்தில் பின் பண்ணி  தேவலோகத்திற்குப் போகும் தபால் பையில் போட்டேன். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை இமிக்ரேஷன் விசா பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, அவர்களுக்கு விருந்து கொடுத்து, பிறகு அவர்களைத் திருப்பி அனுப்பினேன்,

முதல் நாள் பத்துப் பேர்கள் மட்டுமே வந்தார்கள். நாளாக நாளாக கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்ததைப் பார்த்ததும், இன்டர்நெட்டில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஒரு தளம் ஆரம்பித்தோம். இமிக்ரேஷன் விசா வேண்டுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். அவர்களுக்கான நாள் மற்றும் நேரம் அலாட் செய்யப்பட்டு இன்டர்நெட்டில் வெளியிடப்படும். அதன்படிதான் வரவேண்டும் என்று நிர்ணயித்தோம்.

இப்படியாக ஆறு மாதத்தில் 1500 பேர்களுக்கு விசா கொடுத்திருப்போம். வரவு செலவு கணக்குகளைப் பார்த்தோம். மொத்த வரவு 1,50,000 கோடி அதாவது ஒன்றரை லட்சம் கோடி. இதில் இந்திய அரசுக்கு வரி கட்டினது 75,000 கோடி. மீதி 75,000 கோடியில் எங்கள் ஊதியமாக எடுத்துக் கொண்டது  15,000 கோடி. இதில் என் பங்கு 7500 கோடி. பொதுவிற்கும் செக்குவிற்கும் ஆளுக்கு 3750 கோடி.

இப்படி கணக்குப் பார்த்ததில் எங்கள் ஊதியத்தொகையைக் கண்டு மலைத்துப் போய் விட்டோம். இந்தப் பணத்தை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பொதுவைக் கூப்பிட்டு, வெளியில் போய் ஒரு நல்ல ஆடிட்டர், அனுபவம் மிக்க ஒரு வக்கீல், இவ்வளவு பணத்தை டீல் பண்ணக்கூடிய ஒரு அரசியல்வாதி ஆகியோரைக் கூட்டிக்கொண்டு வரும்படி அனுப்பினேன்.

அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று உபசரித்த பிறகு விவரங்களைச் சொன்னோம். அரசியல்வாதி எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் தொகையைச் சொன்னவுடன் அவர் "பூஊஊஊ, இவ்வளவுதானா, இதற்கா என்னை வரச்சொன்னீர்கள், முதலிலேயே விவரத்தைச் சொல்லியிருந்தால் நான் என் வட்டச் செயலரை அனுப்பியிருப்பேனே, அவரே இந்த மாதிரி தொகைகளை எல்லாம் டீல் பண்ணியிருப்பாரே என்றார்.

அப்படீங்களா, எங்களுக்கு அனுபவம் போதாதாகையால் உங்களை வரவழைத்து விட்டோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரைத் தாஜா பண்ணினேன். பிறகு எல்லோரும் கலந்து ஆலோசித்தோம். இந்தப் பணத்தில்  எனக்கு 500 ஏக்கர் நிலமும், மற்றவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 250 ஏக்கர் நிலமும் அவரவர்கள் ஊர்களில் வாங்கிப்போடுவது என்று முடிவு செய்தோம்.

அரசியல்வாதி ஊருக்குப் போனதும் தனது வட்டத்தை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பிப் போனார்கள். மறுநாள் "வட்டம்" தனது எடுபிடிகளுடன் வந்தார். விஷயத்தைக் கேட்டார். இவ்வளவுதானே. ஒரு வாரத்தில் முடித்துக் கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார்.

பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் பணத்தை முழுவதையும் வட்டத்திடம் கொடுக்கச் சொன்னோம். அவர் அந்தப் பணத்தை இரண்டு லாரிகளில் ஏற்றி வட்டத்துடன் அனுப்பினார்.

பிறகு நடந்ததுதான் நாங்கள் எதிர்பாராதது! விவரங்கள் அறியக் காத்திருங்கள்.

திங்கள், 28 மார்ச், 2016

12. தேவலோகத்திற்கு சுற்றுலா





இந்தியாவில் தனிமனித வாழ்க்கை சுபிட்சமாக மாறத்தொடங்கியது. எங்கும் எதிலும் முன்னேற்றம் தென்பட்டன. அமெரிக்கா, இந்தியாவைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தது. அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவுடன் சுமுக உறவை நீட்டித்தன. இந்தியாவின் அனைத்து எல்லைகளிலும் வெளிநாட்டிலிருந்து யாரும் ஊடுறுவ முடியாதபடி வேலிகள் அமைக்கப்பட்டன.

பாகிஸ்தான் தன் உளவு வேலைகளையும் சதித்திட்டங்களையும் நிறுத்திக்கொண்டு விட்டது. காஷ்மீரில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வர ஆரம்பித்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக இணக்கம் காட்டினார்கள். தீவிர வாதம் அடியோடு மறைந்து விட்டது.

வடகிழக்கு மாகாணங்களில் சைனா தன் தலையீட்டை நிறுத்தி விட்டது. அந்த மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

ராஜபக்க்ஷே வாலைச்சுருட்டிக்கொண்டு, இலங்கையில் வசிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுத்துவிட்டார். வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்த அனைத்து இலங்கை அகதிகளும் தாய்நாடு திரும்பிவிட்டார்கள். பிரபாகனுக்கு ஆங்காங்கே நினைவுச்சின்னங்கள் வைக்கப்பட்டு வை.கோ. வைக்கொண்டு திறந்து வைக்கப்பட்டன. பிரபாகரன் நினைவாக ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது.

பொதுவைக் கூப்பிட்டு, இனி நம் சொந்த வேலைகளைக் கவனிக்கலாமா என்றேன். அவர்கள் என்னவென்று தெரியாமல் விழித்தார்கள்.

நான் சொன்னேன், பொது, நம் நாட்டில் ஏகப்பட்ட பேர் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் எப்பேர்ப்பட்ட முட்டாள்தனமான திட்டம் சொன்னாலும் பணத்தைக் கொட்டிக்கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

என்னுடைய திட்டம் இதுதான். நமது தூதரகத்திலிருந்து இந்தியர்களுக்கு தேவலோகத்திற்கு செல்ல இரண்டு விதமான விசா கொடுக்கப்படும்.

ஒன்று: டூரிஸ்ட் விசா. மூன்று பகல், இரண்டு இரவு அவர்களைத் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நாம் போட்டிருக்கும் நகர்களைக் காட்டுவோம். அங்கு தங்க, சுற்றிப் பார்க்க எல்லா வசதிகளும் செய்து தரப்படும். விசா சார்ஜ் ஒரு கோடி ரூபாய். இதில் 50 சதம் வரியாக இந்திய அரசுக்கு கொடுத்துவிடுவோம்.

இந்த டூர் நமது தேவ்லோக் ஏர்லைன்ஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை கோயமுத்தூர் ஏர் போர்ட்டிலிருந்து புறப்படும். திங்கட்கிழமை செல்பவர்கள் புதன்கிழமை திரும்புவார்கள். வியாழக்கிழமை புறப்படுபவர்கள் சனிக்கிழமை திரும்புவார்கள். இதற்கான விமானக் கட்டணம் மற்றும் ஊர் சுற்றிப் பார்க்கும் செலவுகள், உணவு, தங்கும் வசதிகள் எல்லாவற்றிற்கும் மொத்தமாக பத்து கோடி ரூபாய். இதற்கு உள்ளூர் வரிகள் தனி.

ஒரு ட்ரிப்புக்கு 200 பேர் வீதம் வாரத்திற்கு 400 பேர் மட்டுமே செல்ல முடியும். டிக்கெட்டுகள் அந்த அளவிற்குத்தான் கொடுப்போம். அதிகப் பேர் வந்தால் அவர்களுக்கு அட்வான்ஸ் புக்கிங்க் செய்யப்படும். டூர் கட்டணத்தை வாங்க கோவையில் தேவலோக பேங்கின் கிளை ஒன்றை ஆரம்பிப்போம். இதற்காக ஒரு 50 ஏக்கர் நிலம் வாங்கி, மயனை விட்டு ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டி விடலாம்.                                                    

இரண்டாவது இமிக்ரேஷன் விசா: இது ஒருவருடைய ஆயுள் காலத்திற்குப் பின்தான் அமுலுக்கு வரும். ஒருவர் தன் ஆயுள்காலம் முடிந்தவுடன் யமலோகம் போய் தனக்குண்டான பாவபுண்ணிய பலன்களை அனுபவித்த பின், இந்த விசா அமுலுக்கு வரும். அவர்களுக்கான குடியிருப்பு ரெடியாக இருக்கும். அங்கு அவர்களை அழைத்துச் சென்று, குடியமர்த்தப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவலோக கிரீன் கார்டு கொடுக்கப்படும்.

இந்த குடியிருப்புக்கான விலை மற்றும் விசா சார்ஜ் மொத்தம் 100 கோடி ரூபாய். பணம் முழுவதையும் ரொக்கமாக இந்திய ரூபாயிலோ அல்லது அமெரிக்க டாலராகவோ அல்லது ஐரோப்பிய யூரோவாகவோ கட்டலாம். வேறு எந்தக் கரன்சியும் வாங்கப் படமாட்டாது. செக்குகள், பாங்க் டிராப்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

இந்தப் பணத்தை ரொக்கமாக நமது தூதரகத்திலுள்ள தேவலோகப் பேங்கில் கட்டவேண்டும். பணம் கட்டும்போது ஒரு ஒப்பந்தம் போடப்படும். அந்த ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள்.

1. எக்காரணம் கொண்டும் விசா கட்டணம் திருப்பித்தரமாட்டாது.

2. இந்த விசா வாங்கிய செய்தியை யாரிடமும் சொல்லக் கூடாது.

3. இந்த சமாசாரத்தில் எக்காரணம் கொண்டும் காவல் துறைக்கு புகார் கொடுக்கக் கூடாது.

4. அப்படி யாராவது புகார் கொடுக்கலாம் என்று நினைத்தவுடனேயே அவர்கள் யமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

5. தினம் பத்து பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும். அதிகம் பேர் விண்ணப்பித்தால் அவர்கள் வெய்ட்டிங்க் லிஸ்டில் வைக்கப்படுவார்கள்.

6.  75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விசாவிற்கு தகுதியானவர்கள்.

இந்த ஒப்பந்தத்தில்  ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி விடுங்கள். ஒப்பந்தத்தின் காப்பி அவர் யமலோகம் சென்றவுடன் கொடுக்கப்படும். இங்கு அதன் காப்பி இருக்கக் கூடாது.


இமிக்ரேஷன் விசாவில் 50 சதம் இந்திய அரசுக்கு வரியாக செலுத்தி விடுவோம். மீதியுள்ள விசா கட்டணத்தில் நம் ஊதியம் போக மிச்சமிருக்கும் பணத்தை அன்றன்று  தேவலோக பிராஞ்சிற்கு அனுப்பி விடவேண்டும்.

இந்த இமிக்ரேஷன் விசா கட்டணத்தில் 10 சதம் நம்முடைய உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக்கொள்வோம். அதாவது ஒரு விசாவிற்கு 10 கோடி. அதில் எனக்கு 50 சதம். உங்களுக்கு, ஆளுக்கு 25 சதம். அவரவர்கள் பங்கை அன்றன்றே எடுத்துக் கொண்டு விடவேண்டும். நாம் தூதரக அதிகாரிகளானதால் நமக்கு வருமான வரி கிடையாது. இந்தப் பணத்தை இங்கேயுள்ள தேவலோகப் பேங்கில் அவரவர்கள் அக்கவுன்ட்களில் போட்டு வைப்போம்.

முதலில் டூரிஸ்ட் விசா மட்டுமே கொடுங்கள். இமிக்ரேஷன் விசா பற்றிய விஷயம் தேவலோகத்தில் டூர் வருபவர்களுக்கு மட்டும் வாய் வார்த்தையாக பரவட்டும்.

மறுநாள் இந்திய தினசரிகள் அனைத்திலும் இந்த டூரிஸ்ட் விசா பற்றிய விளம்பரம் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரமாக வெளி வந்தது.

விளம்பரம் வெளிவந்து சிறிது நேரத்திலேயே ஜனங்கள் தூதரகத்திற்கு வர ஆரம்பித்தார்கள். தங்களுக்கு டூரிஸ்ட் விசா வேண்டும் என்றார்கள். வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக ஒரு பந்தல் போட்டு எல்லோரையும் உட்காரவைத்தோம். அவர்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள், பானங்கள், டி.வி. அனைத்து வசதிகளும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டன.

யமனிடமிருந்து தேவையான ஆட்களை வரவழைத்து ஜரூராக விசாக்கள் கொடுக்கப்பட்டன. முதல் நாளே 5000 பேருக்கு டூரிஸட் விசா கொடுத்தோம்.

கோவையில் பேங்கும் விமான சர்வீசின் ஆபீசும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரியிடம் தேவலோகப் போக்குவரத்துக்கான அனுமதிகள் வாங்கப் பட்டுவிட்டன. தேவலோகப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

முதல் வெள்ளோட்டப் பயணத்தில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், கட்சித்தலைவர். முக்கிய அதிகாரிகள் மற்றும் தமிழ் மணத்தில் முதல் 20 ரேங்க் வைத்திருக்கும் பதிவர்கள் இவர்களை ஏற்றிக்கொண்டு போனோம்.

அங்கு அவர்களுக்கு ராஜோபசாரம் நடந்தது. இதுவரை பூலோகத்தில் யாரும் சாப்பிட்டிராத உணவு வகைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்குவதற்கு கொடுக்கப்பட்ட அறைகள் அரேபிய சுல்தான்கள் தங்கும் அறைகள் போலிருந்தன. அந்த விடுதிகளில் இல்லாத சௌகரியங்களே இல்லை.

அவர்கள் தேவலோகத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்களைப்போல் அவர்கள் தங்கள் ஆயுளில் பார்த்ததில்லை என்னும்படியாக இருந்தன. ஒவ்வொரு பஸ்சிலும் முப்பது பேர்கள்தான். வழிகாட்டுவதற்கு ஒவ்வொரு பஸ்சிற்கும் ஒரு தேவலோக அப்சரஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருந்தோம். அவ்வப்போது குடிப்பதற்கும் கொறிப்பதற்கும், வறுத்த முந்திரி, பாதாம்பருப்பு, ஆல்மண்ட், நல்ல திராக்ஷை ரசம், ஆப்பிள் ஜூஸ், மேங்கோ ஜூஸ், இப்படி  ஏதாவது கொடுத்துக்கொண்டிருந்தோம்.

இரவானதும் அவர்கள் தங்கும் விடுதிகளில் பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவைகளில் முக்கியமானவை ரம்பை-ஊர்வசி நாட்டியம்தான். இரவு விருந்தில் நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொன்றையும் ருசி பார்ப்பதற்குள்ளேயே பசி தீர்ந்து விட்டது. பல விதமான தீர்த்தங்கள் கொடுக்கப்பட்டன.


இவைகளை எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன்  90 சதம் பேர்கள் (பதிவர்களில் 100 சதம்) அங்கேயே படுத்து விட்டார்கள். காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களை எல்லாம் யம கிங்கரர்கள் தூக்கிக்கொண்டுபோய் அவரவர்கள் அறையில் படுக்க வைத்தார்கள்.

அவர்கள் புறப்படும் நாள் வந்தது. ஒருவருக்கும் புறப்படவே மனது இல்லை. இங்கேயே இருந்து விடுகிறோமே என்றார்கள். அப்போது அவர்களுக்கு "இமிக்ரேஷன் விசா" வைப்பற்றி நாரதர் ஒரு வகுப்பு எடுத்தார். அன்வரும் ஒரே குரலில் நாங்கள் திரும்பிப் போனதும் முதல் வேலையாக இந்த விசாவை வாங்குவோம் என்று பதிவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஏகமனதாகச்சொன்னார்கள்.

 இப்படியாக அனைவரையும் பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தோம்.

சனி, 30 மார்ச், 2013

12. தேவலோகத்திற்கு சுற்றுலா






இந்தியாவில் தனிமனித வாழ்க்கை சுபிட்சமாக மாறத்தொடங்கியது. எங்கும் எதிலும் முன்னேற்றம் தென்பட்டன. அமெரிக்கா, இந்தியாவைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தது. அனைத்து வெளிநாடுகளும் இந்தியாவுடன் சுமுக உறவை நீட்டித்தன. இந்தியாவின் அனைத்து எல்லைகளிலும் வெளிநாட்டிலிருந்து யாரும் ஊடுறுவ முடியாதபடி வேலிகள் அமைக்கப்பட்டன.

பாகிஸ்தான் தன் உளவு வேலைகளையும் சதித்திட்டங்களையும் நிறுத்திக்கொண்டு விட்டது. காஷ்மீரில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வர ஆரம்பித்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக இணக்கம் காட்டினார்கள். தீவிர வாதம் அடியோடு மறைந்து விட்டது.

வடகிழக்கு மாகாணங்களில் சைனா தன் தலையீட்டை நிறுத்தி விட்டது. அந்த மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.

ராஜபக்க்ஷே வாலைச்சுருட்டிக்கொண்டு, இலங்கையில் வசிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுத்துவிட்டார். வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்த அனைத்து இலங்கை அகதிகளும் தாய்நாடு திரும்பிவிட்டார்கள். பிரபாகனுக்கு ஆங்காங்கே நினைவுச்சின்னங்கள் வைக்கப்பட்டு வை.கோ. வைக்கொண்டு திறந்து வைக்கப்பட்டன. பிரபாகரன் நினைவாக ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது.

பொதுவைக் கூப்பிட்டு, இனி நம் சொந்த வேலைகளைக் கவனிக்கலாமா என்றேன். அவர்கள் என்னவென்று தெரியாமல் விழித்தார்கள்.

நான் சொன்னேன், பொது, நம் நாட்டில் ஏகப்பட்ட பேர் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் எப்பேர்ப்பட்ட முட்டாள்தனமான திட்டம் சொன்னாலும் பணத்தைக் கொட்டிக்கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

என்னுடைய திட்டம் இதுதான். நமது தூதரகத்திலிருந்து இந்தியர்களுக்கு தேவலோகத்திற்கு செல்ல இரண்டு விதமான விசா கொடுக்கப்படும்.

ஒன்று: டூரிஸ்ட் விசா. மூன்று பகல், இரண்டு இரவு அவர்களைத் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு நாம் போட்டிருக்கும் நகர்களைக் காட்டுவோம். அங்கு தங்க, சுற்றிப் பார்க்க எல்லா வசதிகளும் செய்து தரப்படும். விசா சார்ஜ் ஒரு கோடி ரூபாய். இதில் 50 சதம் வரியாக இந்திய அரசுக்கு கொடுத்துவிடுவோம்.

இந்த டூர் நமது தேவ்லோக் ஏர்லைன்ஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை கோயமுத்தூர் ஏர் போர்ட்டிலிருந்து புறப்படும். திங்கட்கிழமை செல்பவர்கள் புதன்கிழமை திரும்புவார்கள். வியாழக்கிழமை புறப்படுபவர்கள் சனிக்கிழமை திரும்புவார்கள். இதற்கான விமானக் கட்டணம் மற்றும் ஊர் சுற்றிப் பார்க்கும் செலவுகள், உணவு, தங்கும் வசதிகள் எல்லாவற்றிற்கும் மொத்தமாக பத்து கோடி ரூபாய். இதற்கு உள்ளூர் வரிகள் தனி.

ஒரு ட்ரிப்புக்கு 200 பேர் வீதம் வாரத்திற்கு 400 பேர் மட்டுமே செல்ல முடியும். டிக்கெட்டுகள் அந்த அளவிற்குத்தான் கொடுப்போம். அதிகப் பேர் வந்தால் அவர்களுக்கு அட்வான்ஸ் புக்கிங்க் செய்யப்படும். டூர் கட்டணத்தை வாங்க கோவையில் தேவலோக பேங்கின் கிளை ஒன்றை ஆரம்பிப்போம். இதற்காக ஒரு 50 ஏக்கர் நிலம் வாங்கி, மயனை விட்டு ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டி விடலாம்.                                                      

இரண்டாவது இமிக்ரேஷன் விசா: இது ஒருவருடைய ஆயுள் காலத்திற்குப் பின்தான் அமுலுக்கு வரும். ஒருவர் தன் ஆயுள்காலம் முடிந்தவுடன் யமலோகம் போய் தனக்குண்டான பாவபுண்ணிய பலன்களை அனுபவித்த பின், இந்த விசா அமுலுக்கு வரும். அவர்களுக்கான குடியிருப்பு ரெடியாக இருக்கும். அங்கு அவர்களை அழைத்துச் சென்று, குடியமர்த்தப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவலோக கிரீன் கார்டு கொடுக்கப்படும்.

இந்த குடியிருப்புக்கான விலை மற்றும் விசா சார்ஜ் மொத்தம் 100 கோடி ரூபாய். பணம் முழுவதையும் ரொக்கமாக இந்திய ரூபாயிலோ அல்லது அமெரிக்க டாலராகவோ அல்லது ஐரோப்பிய யூரோவாகவோ கட்டலாம். வேறு எந்தக் கரன்சியும் வாங்கப் படமாட்டாது. செக்குகள், பாங்க் டிராப்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

இந்தப் பணத்தை ரொக்கமாக நமது தூதரகத்திலுள்ள தேவலோகப் பேங்கில் கட்டவேண்டும். பணம் கட்டும்போது ஒரு ஒப்பந்தம் போடப்படும். அந்த ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள்.

1. எக்காரணம் கொண்டும் விசா கட்டணம் திருப்பித்தரமாட்டாது.

2. இந்த விசா வாங்கிய செய்தியை யாரிடமும் சொல்லக் கூடாது.

3. இந்த சமாசாரத்தில் எக்காரணம் கொண்டும் காவல் துறைக்கு புகார் கொடுக்கக் கூடாது.

4. அப்படி யாராவது புகார் கொடுக்கலாம் என்று நினைத்தவுடனேயே அவர்கள் யமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

5. தினம் பத்து பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படும். அதிகம் பேர் விண்ணப்பித்தால் அவர்கள் வெய்ட்டிங்க் லிஸ்டில் வைக்கப்படுவார்கள்.

6.  75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விசாவிற்கு தகுதியானவர்கள்.

இந்த ஒப்பந்தத்தில்  ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி விடுங்கள். ஒப்பந்தத்தின் காப்பி அவர் யமலோகம் சென்றவுடன் கொடுக்கப்படும். இங்கு அதன் காப்பி இருக்கக் கூடாது.


இமிக்ரேஷன் விசாவில் 50 சதம் இந்திய அரசுக்கு வரியாக செலுத்தி விடுவோம். மீதியுள்ள விசா கட்டணத்தில் நம் ஊதியம் போக மிச்சமிருக்கும் பணத்தை அன்றன்று  தேவலோக பிராஞ்சிற்கு அனுப்பி விடவேண்டும்.

இந்த இமிக்ரேஷன் விசா கட்டணத்தில் 10 சதம் நம்முடைய உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக்கொள்வோம். அதாவது ஒரு விசாவிற்கு 10 கோடி. அதில் எனக்கு 50 சதம். உங்களுக்கு, ஆளுக்கு 25 சதம். அவரவர்கள் பங்கை அன்றன்றே எடுத்துக் கொண்டு விடவேண்டும். நாம் தூதரக அதிகாரிகளானதால் நமக்கு வருமான வரி கிடையாது. இந்தப் பணத்தை இங்கேயுள்ள தேவலோகப் பேங்கில் அவரவர்கள் அக்கவுன்ட்களில் போட்டு வைப்போம்.

முதலில் டூரிஸ்ட் விசா மட்டுமே கொடுங்கள். இமிக்ரேஷன் விசா பற்றிய விஷயம் தேவலோகத்தில் டூர் வருபவர்களுக்கு மட்டும் வாய் வார்த்தையாக பரவட்டும்.

மறுநாள் இந்திய தினசரிகள் அனைத்திலும் இந்த டூரிஸ்ட் விசா பற்றிய விளம்பரம் முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரமாக வெளி வந்தது.

விளம்பரம் வெளிவந்து சிறிது நேரத்திலேயே ஜனங்கள் தூதரகத்திற்கு வர ஆரம்பித்தார்கள். தங்களுக்கு டூரிஸ்ட் விசா வேண்டும் என்றார்கள். வந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக ஒரு பந்தல் போட்டு எல்லோரையும் உட்காரவைத்தோம். அவர்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள், பானங்கள், டி.வி. அனைத்து வசதிகளும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டன.

யமனிடமிருந்து தேவையான ஆட்களை வரவழைத்து ஜரூராக விசாக்கள் கொடுக்கப்பட்டன. முதல் நாளே 5000 பேருக்கு டூரிஸட் விசா கொடுத்தோம்.

கோவையில் பேங்கும் விமான சர்வீசின் ஆபீசும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரியிடம் தேவலோகப் போக்குவரத்துக்கான அனுமதிகள் வாங்கப் பட்டுவிட்டன. தேவலோகப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

முதல் வெள்ளோட்டப் பயணத்தில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், கட்சித்தலைவர். முக்கிய அதிகாரிகள் மற்றும் தமிழ் மணத்தில் முதல் 20 ரேங்க் வைத்திருக்கும் பதிவர்கள் இவர்களை ஏற்றிக்கொண்டு போனோம்.

அங்கு அவர்களுக்கு ராஜோபசாரம் நடந்தது. இதுவரை பூலோகத்தில் யாரும் சாப்பிட்டிராத உணவு வகைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்குவதற்கு கொடுக்கப்பட்ட அறைகள் அரேபிய சுல்தான்கள் தங்கும் அறைகள் போலிருந்தன. அந்த விடுதிகளில் இல்லாத சௌகரியங்களே இல்லை.

அவர்கள் தேவலோகத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்களைப்போல் அவர்கள் தங்கள் ஆயுளில் பார்த்ததில்லை என்னும்படியாக இருந்தன. ஒவ்வொரு பஸ்சிலும் முப்பது பேர்கள்தான். வழிகாட்டுவதற்கு ஒவ்வொரு பஸ்சிற்கும் ஒரு தேவலோக அப்சரஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருந்தோம். அவ்வப்போது குடிப்பதற்கும் கொறிப்பதற்கும், வறுத்த முந்திரி, பாதாம்பருப்பு, ஆல்மண்ட், நல்ல திராக்ஷை ரசம், ஆப்பிள் ஜூஸ், மேங்கோ ஜூஸ், இப்படி  ஏதாவது கொடுத்துக்கொண்டிருந்தோம்.

இரவானதும் அவர்கள் தங்கும் விடுதிகளில் பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவைகளில் முக்கியமானவை ரம்பை-ஊர்வசி நாட்டியம்தான். இரவு விருந்தில் நூற்றுக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொன்றையும் ருசி பார்ப்பதற்குள்ளேயே பசி தீர்ந்து விட்டது. பல விதமான தீர்த்தங்கள் கொடுக்கப்பட்டன.


இவைகளை எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடன்  90 சதம் பேர்கள் (பதிவர்களில் 100 சதம்) அங்கேயே படுத்து விட்டார்கள். காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களை எல்லாம் யம கிங்கரர்கள் தூக்கிக்கொண்டுபோய் அவரவர்கள் அறையில் படுக்க வைத்தார்கள்.

அவர்கள் புறப்படும் நாள் வந்தது. ஒருவருக்கும் புறப்படவே மனது இல்லை. இங்கேயே இருந்து விடுகிறோமே என்றார்கள். அப்போது அவர்களுக்கு "இமிக்ரேஷன் விசா" வைப்பற்றி நாரதர் ஒரு வகுப்பு எடுத்தார். அன்வரும் ஒரே குரலில் நாங்கள் திரும்பிப் போனதும் முதல் வேலையாக இந்த விசாவை வாங்குவோம் என்று பதிவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஏகமனதாகச்சொன்னார்கள்.

 இப்படியாக அனைவரையும் பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தோம்.