தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 நவம்பர், 2015

விதியின் விளையாட்டு-கடவுளைக் கண்டேன்.

                                                   Image result for பரமசிவன் பார்வதி

விதி ஒரு மனிதனை எந்த வகையில் எந்த ரூபத்தில் தாக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சமும் எதிர் பார்க்காத நேரத்தில்தான் அது தன் வேலைகளைக் காட்டும். பாருங்கள் நான் சிவனேயென்று நானுண்டு என் பதிவுகளுண்டு என்று இருந்தேன்.

எனக்கு விதி கில்லர்ஜி ரூபத்தில் அதன் வேலையைக் காட்டிவிட்டது. கீழே கொடுத்துள்ள ஸ்கிரீன் ஷாட்டைப் பாருங்கள்.


இந்த லிஸ்டில் நான்காவது பெயரைப் பாருங்கள். இதில் "அன்பிற்குரிய" என்ற அடைமொழி வேறு. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஆத்திர அவசரத்திற்கு அவரது பதிவைக் "காப்பி பேஸ்ட்" செய்யலாம் என்றால் ஒரு அட்சரத்தைக்கூட காப்பி பண்ண முடியாமல் மந்திரம் போட்டு வைத்திருக்கிறார். இதில் அன்பு எங்கே வந்தது?

அவரைப் பழி தீர்க்க எனக்கு ஒரே வழிதான் இருக்கிறது. அதைத்தான் இப்போது செய்யப்போகிறேன். நான் எப்படியோ கைலாசத்தில் பரமசிவன் முன்னால் நிற்கிறேன்.

அவர் பக்தா என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். நான் பலமுறை அவரைத் தண்டனிட்டு நமஸ்கரித்து வேண்டிய வரம் என்னவென்றால்.

பிரபோ, நான் வசிக்கும் பூவுலகில் எனக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் முன்பே கொடுத்து விட்டீர்கள். அதுவே போதும். ஆனால் இப்போது புதிதாக ஒரு பிரச்சினை கில்லர்ஜி என்றி ஒருவரால் ஏற்பட்டிருக்கிறது. அதை மட்டும் தீர்த்து வைத்தால் போதும் என்றேன்.

அவர் அந்தக் கில்லர்ஜியினால் உனக்கு என்ன பிரச்சினை என்றார். அது வந்து பிரபோ நான் என் பாட்டுக்கு பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தேன். அவர் என்னை உடனடியாக உங்களை பேட்டி கண்டு விட்டு வந்து விபரங்களைச் சொல்லுமாறு என்னை நச்சரிக்கிறார் என்றேன்.

பரமசிவனும் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றார். அதற்கு ஒன்றே ஒன்று செய்தால் போதும் பிரபுவே. அவர் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தால் அந்தக் கம்ப்யூட்டரின் கீபோர்டில் எழுத்துகள் மாயமாய்ப் போகவேண்டும். இது ஒன்றுதான் நான் கேட்கும் வரம் என்றேன்.

சிவனாரும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதித்து என்னைத் திரும்பவும் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இனி மேல் கில்லர்ஜி பதிவுகள் எழுதமாட்டார். அப்படி எழுதினால் நான் பரமசிவன் மேல் நம்பிக்கைத் துரோகத்திற்காக கேஸ் போடுவேன்.