படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இரு பிரயாணிகள்.


ஒரு ஆங்கிலக் கதையைத் தழுவியது.

ஒரு நாள் நன்கு படித்தவன் ஒருவன் ரயிலில் பிரயாணம் செய்தான். அவன் கூடவே ஒரு விவசாயியும் பிரயாணம் செய்தான். விவசாயியைப் பார்த்தாலே படிக்காத, உலக அனுபவம் இல்லாதவன் என்று பார்ப்பவர்களுக்குத் தோற்றமளித்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் படித்தவன் விவசாயியைப் பார்த்து நேரம் போகவில்லையே, ஏதாவது விளையாட்டு விளையாடலாமே என்றான். விவசாயியும் சரி என்று ஒப்புக்கொண்டு, என்ன விளையாட்டு விளையாடலாம் என்று கேட்டான்.

அதற்கு படித்தவன், நான் ஒரு கேள்வி கேட்பேன், அதற்கு நீ சரியான விடை சொன்னால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுப்பேன், சரியான விடை சொல்லாவிட்டால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான். அதே போல் நீ கேட்கும் கேளவிக்கு நான் சரியான பதிலை சொன்னால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும். பதில் சொல்ல முடியாவிட்டால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுக்கிறேன், என்றான்.

விவசாயியும் கொஞ்சம் யோசித்துவிட்டு, நல்ல விளையாட்டாகத்தான் தெரிகிறது. ஆனால் நீங்கள் நன்கு படித்தவர், நல்ல உலக அனுபவம் பெற்றவர், ஆகையால் உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கும். நானோ ஒரு ஏழை விவசாயி, உலக அனுபவம் பெறாதவன். ஆகையால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன். நீங்கள் நான் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் நூறு ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான்.

படித்தவன், இந்த முட்டாள் அப்படி என்ன கேள்வி கேட்டுவிடப்போகிறான் என்று எண்ணிக்கொண்டு விளையாட்டிற்கு ஒப்புக்கொண்டான். படித்தவன் படிக்காதவனைப் பார்த்து நீயே முதலில் கேள்வி கேள் என்றான்.

படிக்காதவன் "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?" என்று தன் கேள்வியைக்கேட்டான்.

படித்தவன் பல நிமிடங்கள் யோசித்தும் அவனால் பதில் கண்டு பிடிக்க முடியவில்லை. நூறு ரூபாயை எடுத்து படிக்காதவனிடம் கொடுத்து விட்டு, அவன் தன்னுடைய கேள்வியைக் கேட்டான்.  "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?"

படிக்காதவன் ஐம்பது ரூபாயை எடுத்து படித்தவனிடம் கொடுத்து விட்டு எனக்கும் விடை தெரியவில்லை என்று சொன்னான்.

படித்தவர்கள் ஏன் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வருவதில்லை என்று புரிகிறதல்லவா.