பணப்பேய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணப்பேய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 நவம்பர், 2011

பணம் என்னும் பேய்


பேய் பிசாசு பிடிச்சா விடறது ரொம்பக் கஷ்டம். ( நான் மனைவியைச் சொல்றதா யாராவது நினைச்சால் அதற்கு நான் பொறுப்பில்லை ). பணமும் ஒரு பேய்தான்.

பணம் இல்லாதவன் பிணம். கொஞ்சம் பணம் இருந்தா அவன் ஏழை. நெறய பணம் இருந்தா அவன் சுகவாசி, பணக்காரன். இப்படித்தான் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் உண்மை அதுவல்ல. எவன் ஒருவன் பணத்தை தன்னுடைய மற்றும் தன்னைச் சார்ந்தவர்களுக்காக, அவர்களின் சுகத்திற்காக செலவழிக்கிறானோ அவனே சுகவாசி, அவனே உண்மையில் பணக்காரன். நாம் சேகரித்த பணம் எல்லாம் நம் பணம் அல்ல. நாம் நல்வழியில் செலவழித்த பணமே நாம் சம்பாதித்த பணம். மற்றவையெல்லாம் யாரோ சம்பாதித்த பணம்.

நாம் எல்லோரும் பணத்தை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கிறோம். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு அதன் மேல் ஆசை அதிகரிக்கிறது. இன்னும், இன்னும், இன்னும் என்று மேன்மேலும் சேர்ப்பதிலேயே மனம் செல்லுமே தவிர, அந்தப் பணத்தை எதற்காக சேர்க்க வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் போகிறது. பணப்பிசாசு அவனைப் பிடித்தது என்ற நிலை மாறி அவனே பணப்பிசாசாக மாறிவிடுகிறான்.

மேல் உலகத்திற்குப் போகும்போது இந்தப் பணத்தைக் கொண்டு போக நிச்சயம் முடியாது. நான் எல்லா பேங்குகளிலும் விசாரித்து விட்டேன். உங்கள் வாரிசுகள் நீங்கள் விட்டுப் போன பணத்தைப் பார்த்து என்ன சொல்லுவார்கள் தெரியுமா? கஞ்சப்பய, நல்லா சோறுகூட திங்காம எத்தன பணத்தை வச்சுட்டுப் போயிருக்கான் பாரு, கஞ்சப்பய, என்றுதான் சொல்லுவார்கள். இந்த பெயர் எடுக்கவா இவ்வளவு கஷ்டங்கள்?


ஆகவே, மக்களே நீங்கள் பிசாசாக எப்போது மாறப்போகிறீர்கள்? இல்லை, ஏற்கனவே ஆகிவிட்டீர்களா?