பிடி கத்தரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிடி கத்தரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2013

விவசாய ஆராய்ச்சியும் மனிதர்களின் புரிதலும்.


பிடி கத்தரிக்காய் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரை.

The Bt brinjal is a suite of transgenic brinjals (also known as an eggplant or aubergine) created by inserting a crystal protein gene (Cry1Ac) from the soil bacterium Bacillus thuringiensis into the genome of various brinjal cultivars. The insertion of the gene, along with other genetic elements such as promotersterminators and an antibiotic resistance marker gene into the brinjal plant is accomplished usingAgrobacterium-mediated genetic transformation. The Bt brinjal has been developed to give resistance against lepidopteron insects, in particular the Brinjal Fruit and Shoot Borer (Leucinodes orbonalis)(FSB).Mahyco, an Indian seed company based in JalnaMaharashtra, has developed the Bt brinjal. The genetically modified brinjal event is termed Event EE 1 and Mahyco have also applied for approval of two brinjal hybrids. The Event EE 1 was introgressed by plant breeding into various local varieties by University of Agricultural Sciences, Dharwad and Tamil Nadu Agricultural University, Coimbatore. Some of the cultivars of brinjal include: Malpur local, Manjari gota, Kudachi local, Udupi local, 112 GO, and Pabkavi local.[1] It was approved for commercialization in India in 2009, but - after an apparent public outcry and rounds of debates in which representatives from Mahyco, the scientific community, and NGO's spoke on the topic - the Indian Environment Minister, Jairam Ramesh, facilitated a moratorium on its release until further, unspecified, tests were conducted.

இந்தப் பதிவில் கூறப்படும் கருத்துகள் என்னுடைய சொந்தக் கருத்துகள். அவை கசப்பாக இருக்கலாம். உங்களுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். இந்தப் பதிவைப் படித்த பின் உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடலாம்.

பெரும்பாலான மனிதர்கள் ஆட்டு மந்தை சுபாவம் கொண்டவர்கள். அதாவது அவர்கள் தலைவர்கள் அல்லது வழிகாட்டுபவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ, அவர்கள் என்ன சொன்னாலும் அதை சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

கூடங்குளம் அணு நிலையம் ஆபத்தானது என்று சொன்னால் அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். இந்தப் போராட்டம் நியாயமானது என்று பல சான்றுகள் கொடுப்பார்கள். இத்தகைய போராட்டங்கள் யாரால், எதற்காக தூண்டி விடப்படுகின்றன என்பது சிதம்பர ரகசியம்.

உலகில் எந்த ஒரு முன்னேற்றம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் குறை காண்பதற்கென்றே பலர் இருக்கிறார்கள். பிடி கத்தரி என்று ஒன்று சந்தைக்கு வந்திருக்கிறது. விவசாய ஆராய்ச்சி அல்லது பயிர்களின் மூலக்கூறுகள் பற்றி ஒன்றும் அறியாத பாமரனும் கூட இதைப்பற்றி கருத்து கூற முற்படுகிறான். அவனுக்கு சிலபல கட்டுரைகள் கைகொடுக்கின்றன.

பயிர்களை ஒட்டு சேர்த்து புதிய ரகம் கண்டுபிடிப்பது என்பது காலம்காலமாக விவசாய ஆராய்ச்சியில் கடைப்பிடிக்கப்படும் ஒரு உத்தி. இது தவிர ரசாயனங்கள் அல்லது வேறு உயிரினங்கிலிருந்து எடுக்கப்பட்ட வேதியல் பொருட்களையும் பயிரினுள் செலுத்தி புதிய ரகப்பயிர்களை உண்டாக்குவார்கள். இவைகளில் சில நல்ல மகசூலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கொண்டிருக்கும். அத்தகைய ரகப் பயிர்களை விவசாயிகளுக்குப் பரிந்துரைப்பார்கள்.

இத்தகைய ரகங்கள்தான் இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட வழி வகுத்தது. அப்படி புதிய ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ரகம்தான் பிடி கத்தரி. பிடி என்பதின் விளக்கம் (BT = biologically transformed). இது ஒரு ஆராய்ச்சி  நிறுவனத்தால் கத்தரியின் காய்ப்புழு தாக்காத ரகம் வேண்டும் என்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட ரகம். இதை ஒரு அயல் நாட்டுக் கம்பெனி மார்க்கெட் செய்கிறது.

இத்தகைய புதிய ஒட்டு ரகங்களின் விதைகளை எல்லா விவசாயியாலும் தயார் செய்து கொள்ள முடியாது. ஒவ்வொரு தடவையும் அந்தக் கம்பெனிதான் விதைகளைக் கொடுக்கவேண்டும்.

இந்த கத்தரி ரகத்தை பல விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் பரிசோதித்து இதைப் பயிரிடலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள். சில அரசியல் காரணங்களுக்காக இந்த அயல் நாட்டுக் கம்பெனியின் மேல் ஏதோ காரணத்தினால் ஏற்பட்ட விரோதத்தினால், இந்த கத்தரி ரகத்தின் பேரில் பல குற்றச்சாட்டுகள், நீதி மன்றத்தில் வழக்குகள், விவசாயிகளின் போராட்டங்கள் என்று பலவகையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த கத்தரிக்காய் ஏதோ விஷ ஜந்து, இதை சாப்பிட்டால் நேராக பரலோகம் போய்விடுவார்கள்  என்கிற மாதிரியான ஒரு மாயையை இந்த போராட்டத்திற்குக் காரணமானவர்கள்  உருவாக்கியுள்ளார்கள். இதைப்பற்றி நன்கு கருத்து கூறக்கூடிய விஞ்ஞானிகள் மௌனமாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் இந்த அரசியல் சக்திகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அல்ல. அது அவர்கள் வேலையும் அல்ல.

அப்படி அந்த விஞ்ஞானிகள் மௌனம் சாதிப்பதாலேயே இந்த போராட்டம் நியாயமானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதைப்போன்ற அபத்தமானது ஒன்றும் இல்லை.