புத்தாண்டு வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 ஏப்ரல், 2014

புத்தாண்டில் இன்பமாக வாழ்வோம்.


எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பிறந்தாலே கூடவே புத்தாண்டு சபதங்களும் வந்து விடும். சபதங்களை காப்பாற்றுகிறோமோ இல்லையோ, அவை நம் மனதின் ஆசைகளை வெளிப்படுத்தும் எண்ணங்களாகும். கடந்த கால வாழ்க்கையில் நாம் தவறென்று கருதுபவைகளை மாற்ற விரும்பும் நம் ஆழ்மனதின் வெளிப்பாடே ஆகும்.

நாம் மாறவேண்டும் என்று நினைப்பதே நாம் முன்னேறுவதற்கான முதல் படி. இந்த முயற்சிகளில் நாம் இன்பமாக வாழவேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். நான் என் அனுபவத்தால் உணர்ந்த ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

கடனில்லா வாழ்வே மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடிப்படைத்தேவை. பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே ஆனந்தம். தான் சம்பாதிக்கும் வருமானத்திற்குள் வாழ்வதே புத்திசாலித்தனம்.

எல்லோரும் புத்தாண்டில் கடனற்ற இன்ப வாழ்வு வாழ ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.