மனப்பிராந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனப்பிராந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 டிசம்பர், 2013

இஸ்ரேலுக்குப் போனேன்.


(பிறகு என்னை மட்டும் தனியாக இரண்டு பேர் வேறு ஒரு ரூமுக்கு கூட்டிப்போனார்கள். அங்கு போன பிறகு நடந்ததைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.)

அங்கு என் டிரஸ் முழுவதையும் கழட்டச் சொன்னார்கள். நான் வணங்கும் முருகன் அருளால் ஜட்டியை மட்டும் விட்டு வைத்தார்கள். டிரஸ்சிற்குள் ஏதாவது மறைத்து வைத்திருக்கிறேனா என்று சோதனை செய்தார்கள். அவர்களுக்குத் திருப்தியானவுடன் டிரஸ்ஸை மாட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.

பிறகு என் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு செக்இன் கவுன்டருக்குப் போகச் சொன்னார்கள். அங்கு போய் லக்கேஜ்களைக் கொடுத்துவிட்டு ஹேண்ட் பெக்குடன் போர்டிங்க் ஏரியாவிற்குப் போனேன். ஏதோ கொலைத்தண்டனையிலிருந்து தப்பித்த உணர்வு வந்தது. இருந்தாலும் பதட்டம் முழுவதும் மறையவில்லை. ஏன் இந்த வம்பில் வந்து மாட்டிக்கொண்டோம் என்ற உணர்வே மேலோங்கி நின்றது.

போர்டிங்க் ஏரியாவில் இரண்டு பேர் தீவிரவாதிகள் மாதிரி துப்பாக்கி, ஒரு கிராஸ்பெல்ட் முழுவதும் தோட்டாக்கள் சகிதம் இருந்தார்கள். ஓஹோ நான் போகும் பிளேனை கண்டிப்பாக ஹைஜாக் செய்யப்போகிறார்கள் என்று நம்பினேன். நான் அதுவரை ஹைஜாக்க்கில் சிக்கியதில்லை. சரி, அவ்வளவுதான், நம் ஆயுள் இன்றோடு முடிவடையப்போகிறது என்று மனதிற்குள் தோன்றியது.

பிளேனில் ஏறியது, இஸ்ரேல் 'டெல்அவிவ்' என்கிற ஊரின் ஏர்போர்ட்டில் இறங்கியது எல்லாம் ஏதோ கனவில் நடப்பது மாதிரி தோன்றியது. ஏர்போர்ட்டில் ஒருவர் என்னை வரவேற்க வந்திருந்தார். அவருடன் சென்று ஒரு ஓட்டலில் தங்கினேன். என்னுடன் வந்தவர் நாளைக்கு நீங்கள் ஜெருசலேம் சென்று பார்த்துவிட்டு வாருங்கள். அதற்கு ஸ்பெஷலெ டூரிஸ்ட் பஸ்கள் இருக்கின்றன. நான் ஓட்டல் மூலமாக புக் செய்து விடுகிறேன், அவர்கள் இங்கேயே வந்து உங்களை கூட்டிக்கொண்டு போவார்கள் என்றார். 

நான் தயங்கினேன். காரணம் நான் எப்போது அலுவலக விஷயமாக டூர் போனாலும் இந்த மாதிரி பொழுதுபோக்கு டூர்களில் கலந்து கொள்ள மாட்டேன். அது தவறு என்பது என் கொள்கை. அதை அவரிடம் சொன்னேன். 

அதற்கு அவர் இஸ்ரேல் வந்து விட்டு ஜெருசலேம் பார்க்காமல் போனால் அது உங்கள் வாழ்க்கையில் பெரிய இழப்பாகும். உங்கள் லோகல் கைடு என்ற முறையில் இந்த டூரை நான் ஒரு அலுவலக டூராகவே சிபாரிசு செய்கிறேன். போய்விட்டு வாருங்கள். நான் நாளை மறுநாள் உங்களை காலை 8 மணிக்கு மீண்டும் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ரூமிற்குப் போய் என்னுடைய இரவு உணவை முடித்தேன். இரவு உணவு என்ன? நெதர்லாந்தில் வாங்கின வேர்கடலையும் ஆப்பிள் ஜூஸும்தான். ஒரு மாதிரியாக கனவுகள் மறைந்து தூங்கினேன். மறு நாள் காலையில் கைடு சொன்ன டூரிஸ்ட் பஸ் வந்து என் பெயரை சொல்லிக் கூப்பிட்டார்கள். அன்று நான் சென்ற டூர் என் வாழ்க்கையில் மறக்க முடியாததாக அமைந்தது. எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா, நண்பர்களே.