மலர் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலர் கண்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜனவரி, 2012

குட்டையர்களே அழகானவர்கள்


மனிதர்களில் எப்படியோ, மரங்களில் குட்டை மரங்கள் எப்போதும் கவனத்தை ஈர்க்கும். இந்த மாதம் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைக் கழக தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த குட்டை மரங்களைப் பாருங்கள்.








































இந்த மாதிரி மரங்களை சித்திரவதை செய்யலாமா? அது 
கொடுமையல்லவா? என்று சிலர் சிந்திக்கக் கூடும்.


அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.


1. பச்சிளம் பாலகர்களை படிப்பு என்கிற போர்வையில் சித்திரவதை 
நடக்கிறதல்லவா?


2. வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவர்களை 
தனிமைப் படுத்துவது கொடுமையல்லவா?


3. ஒரு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு வந்த பிறகு
வரதட்சிணை, சீர் வரிசைகளுக்காக கொடுமைப் படுத்தவில்லையா?


4. நம் உணவிற்காக எத்தனை உயிர்களைக் கதறக் கதறக் 
கொல்லுகிறோம். அது சித்திரவதையல்லவா?


செடி கொடிகளுக்கு ஒரு உணர்வு மட்டுமே இருக்கிறது. அதனால்தான் 
அவைகளை நாம் நம் உணவுக்காக பயிர் செய்து பின்பு அவைகளைக் 
கொன்று உண்ணுகிறோம்.


இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது என்று நீங்கள்
கருதினாலும் அதை நான் தவறென்று கொள்ளமாட்டேன். உங்கள் 
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.