மாயா உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாயா உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜூலை, 2011

புகழ் என்னும் மாயை



சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவரும் தன்னை இந்த சமுதாயம் மதிக்கவேண்டும், தன்னை அங்கீகாரம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. இதற்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறார்கள். சிலர் அந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோற்றுப் போகிறார்கள்.

அப்படித் தோற்றுப் போகிறவர்களுக்கும் அவர்கள் வாழும் சூழ்நிலையில், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் மத்தியில் ஒரு அங்கீகாரம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் நாளாவட்டத்தில் அந்த அங்கீகாரம் போதுமென்ற மன நிலைக்கு வந்து விடுவார்கள்.

இந்த மன நிலை இணையத்திலும் நிலவுகிறது. பதிவுலகத்தில் இந்த புகழுக்காக மிகுந்த சிரமம் எடுத்துக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம் என்று நான் கருதுகிறேன். அவர்கள் இணையத்திற்கு அடிமையாகி, தங்கள் மற்ற கடமைகளிலிருந்து விலகுகிறார்களோ என்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது.

இது ஒரு மாயா உலகம். அனைவரும் இதை உணர்ந்து, இந்த மாயையிற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.