வலைச்சரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைச்சரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜூன், 2015

வலைச்சரம் பற்றிய ஒரு கண்டனம்

வலைச்சரம் ஒரு இரண்டு மாதங்களாக செயல்படவில்லை என்பதை பதிவர்கள் அனைவரும் அறிவார்கள், காரணங்கள் பல இருக்கலாம் அதைப் பற்றி எனக்கு கருத்துக் கூற ஒன்றுமில்லை.

ஆனால் சமீபத்தில் அதை செயல்படுத்த முன் வந்த பிரபல பதிவர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. அவர்களின் பாணி வலைச்சர விதிகளுக்கு ஒத்துப்போகவில்லை என்று தெரிகிறது. அதைச் சுட்டிக்காட்டியவுடன் அவர் வலைச்சர ஆசிரியர் பணியிலிருந்து விலகி விட்டார் என்று அவர் பதிவுகளிலிருந்து தெரிகிறது.

வலைச்சரத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. திரு. சீனா அவர்களும் மற்றும் பலரும் இதை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வலைச்சரம் பல சாதனைகளைச் செய்திருக்கிறது. அதற்காக அதன் நிர்வாகிகளைப் பாராட்ட வேண்டும்.

இப்போது கடைசியாக ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய திரு வை.கோபாலகிருஷ்ணன் வலைச்சர விதிகளைச் சரியாக கடைப்பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை ஒரு காரணமாக வைத்து அவருடைய பதிவில் (http://gopu1949.blogspot.in/2015/06/14.html) திரு தமிழ்வாசி அவர்கள் இட்டுள்ள பின்னூட்டங்கள் அவசியமற்றவை என்று நான் கருதுகிறேன். தனிப்பட்ட பிரச்சினை இதில் ஏதுமில்லை. ஆனாலும் பல பின்னூட்டங்கள் போடப்பட்டுள்ளன. என்ன காரணம் என்று தெரியவில்லை?

இது பதிவுலக தர்மத்திற்கும் வலைச்சர பாரம்பரியத்திற்கும் பெருமை சேர்க்கும் செயலல்ல என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.