விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஜூலை, 2011

நான் பைத்தியத்திலிருந்து மீண்டேன்



ஊருடன் ஒத்து வாழ்.

உலகத்தோடொட்ட ஒழுகல் பல கற்றும் கல்லாதார் அறிவிலாதார்

*****புரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

இந்த முதுமொழிகளை யெல்லாம் தெரிந்திருந்தும் விதியின் வசத்தால் என் மதி மயங்கி நான் ஒரு பைத்தியக்காரன் ஆனேன்.

என்னுடைய பதிவில் உள்ள பின்னூட்டங்கள், ஓட்டுப்பட்டைகள் ஆகியவற்றை நீக்கினேன். விளைவு மிகவும் மோசமாகப் போய்விட்டது. தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் தீக்குளிப்பு, தற்கொலை, ரயில் முன்பு பாய்தல் ஆகியவை மிகவும் அதிகரித்துவிட்டன.

என்னுடைய பதிவைப் படிக்கும், படிக்காத வாசகர்களும், சக பதிவர்களும், நலம் விரும்பிகளும் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று முதல் என்னுடைய பதிவில் பின்னூட்டங்களைப் போட வசதி செய்துள்ளேன். ஓட்டுப்பதிவு பட்டைகளையும் ஒவ்வொன்றாக இணைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடந்து முடிந்தவுடன் அந்த ஓட்டுப்பட்டைகள் தயாராகி விடும்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தயாராக சில காலம் பிடிக்கும்.

இப்போது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அப்படி மகிழ்ச்சி அடையாதவர்கள் யாராவது இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தினால் அவர்களை திஹாருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து தரப்படும்.