விருந்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருந்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 மார்ச், 2012

கல்யாண வீட்டில் நான் செய்த திருட்டு


ஒரு கப் காபியோ அல்லது ஒரு கப் பாயசத்துடன் வந்துவிடலாமே. " மெடிக்கல் ட்ரீட் மென்டில் இருக்கிறேன் கட்டாயபடுத்தாதீர்கள்" என்று சொல்லிவிடுங்கள். 


மேற்படி பின்னூட்டம் நான் கல்யாண விருந்துகளில் நடக்கும் சமையலைப் பற்றி எழுதிய பதிவுக்கு வந்திருந்தது.


கக்கு-மாணிக்கம் சொன்ன யோசனை நல்ல யோசனையாகவும் நடைமுறைக்கு ஒத்து வருவதாகவும் தோன்றியது. இதை உடனே பரிசோதித்துப் பார்க்க ஆவலுற்றேன்.


பழங்காலத்தில் கல்யாண மண்டபங்களின் அமைப்பு எப்படியென்றால் மண்டபத்தின் முகப்பில் வாசல் இருக்கும். அதன் வழியாகத்தான் வுருந்தினர்கள் எல்லோரும் உள்ளே போக முடியும். வெளியே வருவதென்றாலும் அதே வாசல் வழியாகத்தான் வரவேண்டும். ஆகவே கல்யாணக்காரர்களுக்குத் தெரியாமல் கல்யாணத்திலிருந்து வர முடியாது. அப்போது சாப்பிடாமல் வந்தால் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இப்போது கல்யாண மண்டபங்கள் மிகவும் முன்னேறியுள்ளன. உள்ளே போகும் வழியில் சென்று கல்யாணக்காரர்களிடம் ஆஜர் கொடுத்துவிட்டு உள்ளே போனால் ஜனங்கள் அமரும் ஹால். அங்கு இரண்டொருவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு உள்ளே போனால் டைனிங்க் ஹால். முன்பெல்லாம் விருந்தினர்களை சாப்பிட வாருங்கள் என்று யாராவது அழைப்பார்கள். இப்போதெல்லாம் அப்படி யாரும் அழைப்பதில்லை. சாப்பிடவேண்டுமென்றால் சாப்பிடலாம். இல்லையென்றால் அப்படியே வெளியில் வந்தால் கார் பார்க்கிங்க் வந்துவிடும். வண்டியை எடுத்துக்கொண்டு அப்படியே எஸ் ஆகிவிடலாம்.

நான் இந்த டெக்னிக்கைக் கடைப்பிடித்து அரை கப் டீ மட்டும் குடித்து விட்டு வந்தேன். மொத்தமாக அரை மணி நேரம்தான் ஆகியது. வீட்டிற்கு வந்து இரண்டு தோசை சாப்பிட்டு விட்டுப் படுத்து விட்டேன். ஆரோக்யமாக இருந்தது.

இந்த யோசனை சொன்ன கக்கு-மாணிக்கத்திற்கு மிக்க நன்றி.