விளம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜூலை, 2015

விளம்பரங்களும் உண்மையும்

     Image result for சிட்டுக்குருவி லேகியம்                Image result for சிட்டுக்குருவி லேகியம் 

சிட்டுக்குருவி லேகியம் பற்றிய விளம்பரங்களை அநேகமாக எல்லோரும் பார்த்திருப்பார்கள். வாலிப, வயோதிக நண்பர்களே என்று ஆரம்பிக்கும். அதில் பனங்கருப்பட்டியும் ஏலக்காய், சுக்கு, கிராம்பு போட்டு ஒரு லேகியம் தயாரித்திருப்பார்கள். அதை சாப்பிட்டால் அப்படியாகும் இப்படியாகும் என்று சொல்லியிருப்பார்கள். இந்த விளம்பரத்தை நம்பி பலர் ஏமாறுவார்கள்.

இன்று தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் இந்த ரகமே. உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று ஒரு விளம்பரம். பற்களை நெல் உமிக்கரியும் உப்பும் கலந்த கலவைத்தூளில் விளக்குவது தமிழ்நாட்டில் பல காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம். உப்பு பற்களுக்கு நல்லது என்று நம் மக்களுக்குப் பலகாலமாகத் தெரியும். பற்பசைக்காரர்கள் இந்த விஷயத்தை இப்போதுதான் அவர்கள் கண்டுபிடித்த மாதிரியும் அது பற்களுக்கு நல்லது என்பது மாதிரியும் விளம்பரம் செய்கிறார்கள். இதற்கு மயங்குபவர்கள் நிறைய உண்டு.

நியூட்ரமுல் என்று ஒரு பொருள். வெறும் கொழுப்பு நீக்கிய பால் பவுடர்தான். கொஞ்சூண்டு வைடமின்களை, பிபிஎம் அளவில் சேர்த்திருப்பார்கள். ஆஹா, எங்கள் பொருளைச் சாப்பிட்டால் உங்கள் குழந்தைக்கு உங்கத்தில் இல்லதா போஷாக்கு கிடைக்கும் என்று விளம்பரப்படுத்துவார்கள். அதில் மயங்கி பல தாய்மார்கள் அதை வாங்கித் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். அது மட்டுமா. நாங்கள் எங்கள் குழந்தைக்கு நியூட்ரமுல் கொடுக்கிறோமாக்கும் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் பெருமை பாராட்டிக்கொள்வார்கள்.

ஃபோர்ட்டிபைடு (Fortified) என்று ஒரு இங்கலீஷ் வார்த்தை இருக்கிறது. வலிமைப் படுத்துதல் என்று அர்த்தம். எங்கள் டானிக் ஃபோர்ட்டிபைடு செய்யப்பட்டது என்று விளம்பரம் வரும். என்ன ஐயா செய்தீர்கள் என்றால் கூடக் கொஞ்சம் பி வைட்டமின் அல்லது பெர்ரஸ் சிட்ரேட் சேர்த்திருப்பார்கள். இது வலிமை கூட்டப்பட்டது என்று விளம்பரம் செய்வார்கள். அவர்கள் சேர்த்துள்ள இத்தணூண்டு விஷயத்துக்காக ஏகப்பட்ட விலையைக் கூட்டியிருப்பார்கள். இது மக்களை ஏமாற்றும் சதிச் செயல்.

மக்களின் மத்தியில் சில வியாதிகள் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும். இத்தகைய வியாதிகளுக்கு எந்த வைத்தியமும் பலனளிக்காது. மூட்டு வலி, வெண்குஷ்டம், காது கேளாமை, சோரியாசிஸ் இவை போன்றவை. இத்தகைய வியாதியினால் துன்பப்படுபவர்கள் பல வகையான வைத்தியங்கள் செய்து பார்த்து தங்கள் நோயைக் குடப்படுத்த முடியாமல் வருந்துகிறவர்கள். கடலில் விழுந்தவன் ஒரு துரும்பு கிடைத்தால் கூட அதைப் பற்றிக்கொண்டு தப்பிக்க முடியுமா என்று மெயற்சிப்பானாம். அது போல இவர்களும் எவனாவது இந்த சீக்குகளை கடப்படுத்துகிறேன் என்று சொன்னால் போதும். உடனே அவனிடம் ஓடிப்போய் காசைத் தொலைப்பார்கள்.

சோற்றுக் கத்தாழை என்று ஒரு செடி. கிராமங்களில் வேலியோரமாக வளர்ந்திருக்கும். முன்பு ரயில்வே லைன் ஓரத்தில் நட்டிருப்பார்கள். இது மண் அரிப்பைத் தடுக்கும் ஒரு தாவரம். இதில் அநேக மருத்துவ குணங்க்ள ஒளிந்திருக்கின்றன என்று யாரோ ஒருவன் கதை கட்டி விட்டு விட்டான். அவ்வளவுதான். சோப்பு கம்பெனிக்காரர்கள், முகத்திற்குப் போடும் கிரீம் கம்பெனிக்காரர்கள் எல்லாம் எங்கள் பொருளில் சோற்றுக் கத்தாழை கலந்திருக்கிறோம் என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். சில விவசாயிகள் சோற்றுக் கத்தாழையை ஒரு பயிர் மாதிரி பயிரிட ஆரம்பித்து விட்டார்கள்.

அனைத்து தாவரங்களிலும் மனித உடம்பிற்கான ஏதோவொரு மருந்துக் குணம் இருக்கிறது. அந்த குணம் அந்த தாவரத்தை நாள்பட உபயோகித்தால்தான் பயன் தரும். அரச மரத்தை சுற்றி வந்து அடி வயிற்றைத் தடவிப் பார்த்த கதையாக, ஒன்றைச்சாப்பிட் உடனே குணம் தரக்கூடிய தாவர மருந்துகள் எவையும் இல்லை. இதை உணராமல் விளம்பரங்களைக் கண்டு மயங்குபவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

ஆகவே விளம்பரங்களை மட்டும் நம்பி அதனால் ஏமாந்து போகாதீர்கள்.