வைகோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைகோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 அக்டோபர், 2014

அஞ்சலை - சிறுகதை


வைகோ வின் அஞ்சலை கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

இந்தக் கதைக்கு என் விமர்சனம். ஒரு சமாச்சாரம். எனக்கு சிறுகதை எழுதத் தெரியாது. ஒரு செய்தியை விரிவாக எழுதவும் தெரியாது. ஆகவே சுருக்கமான விமர்சனம் மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்தக் கதைக்கு பல  உப-சிறுகதைகளை பலரும் எழுதியிருக்கிறார்கள். அவைகளைப் படிக்க இந்தப்  போட்டியில் வெற்றி பெற்ற விமர்சனங்களைப் பார்க்கவும்.

விமர்சனம்.

“அஞ்சலை”

தாய்ப் பாசம் என்பது பல வகைகளில் வெளிப்படும். மனிதர்களிடையே மட்டுமல்ல, விலங்குகளிடையேயும் இந்தப் பாசத்தை காண்கிறோம்.

ஆனால் இந்தப் பாசம் சூழ்நிலையின் அழுத்தத்தால் மாற வேண்டிய அவசியம் உண்டாகிறது. இந்தக் கதையின் கதாநாயகியும் இந்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறாள்.

தன் குழந்தை தன்னிடமே இருக்கவேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம். ஆனால் இதை குழந்தை இல்லாத தம்பதியினருக்கு கொடுத்தால் அது நல்ல சூழ்நிலையில் வளருமே என்ற ஆசை இன்னொரு பக்கம்.

இந்த பாசப் போராட்டத்தில் அவள் தன் குழந்தையை தத்துக் கொடுத்து விடலாம் என்கிற முடிவை எடுக்கிறாள். இதைத் தவிர அவளுக்கு தான் இருக்கும் சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் போகிறது. இந்த சோக முடிவில் நாமும் நம்மை அறியாமல் கண்ணீர் சிந்துகிறோம்.

இதுவே கதாசிரியரின் வெற்றியாகும்.