இனப் பாகுபாடு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனப் பாகுபாடு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மே, 2013

ஒரு இனம் எப்படி முன்னேறும்?


இந்தியாவில் இனப் பாகுபாடு எப்படி தோன்றியது, அதை யார் வளர்த்தார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிப்பது சிரமம் தவிர அதனால் பெரிய பலன் ஏற்படப்போவதுமில்லை. இன்று நம்மிடையே இந்த பேதங்கள் இருக்கின்றன என்பது நிதரிசனம்.

ஒரு சில இனங்கள் முன்னேறுவதையும் மற்றவர்கள் அப்படி முன்னேறாததையும் நாம் பார்க்கிறோம். ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று சமூகவியல் வல்லுநர்கள் ஆராயவேண்டும்.

சமீப காலங்களில் இரண்டு இனங்கள் தங்களை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கின்றன. அந்த சமூகத்தில் தோன்றிய தலைவர்கள் இந்த மாறுதலைத் தோற்றுவித்துள்ளார்கள். மற்ற இனத்தவர்களை வசை பாடாமல் அமைதியாக முன்னேறியுள்ளார்கள். அவர்கள் நாடார் சமூகத்தினரும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சமூகமும் ஆகும்.

மற்ற இனத்தவர் ஏன் இந்த மாதிரியைப் பின்பற்றி முன்னேறவில்லை என்று பார்த்தால் அந்த இனங்களில் தோன்றிய தலைவர்கள் சுயநலத்தோடு இருந்ததால் என்று தோன்றுகிறது. தங்கள் இனத்தவர்களை முன்னேறாமல் வைத்திருந்தால்தான் தாங்கள் கோலோச்சமுடியும் என்று உணர்ந்து அவர்கள் அந்த சமூகத்தினரின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

இந்த இழிநிலை மாறாத வரை அந்த சமூகங்கள் முன்னேற மாட்டா.